search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஞ்ஞானி நம்பி நாராயணன்"

    உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. #ISRO #ScientistNambiNarayan #KeralaCabinet
    புதுடெல்லி:

    இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் விஞ்ஞானிகள் பட்டியலில் தவிர்க்க முடியாத ஒருவராக கருதப்படுபவர்களில் நம்பி நாராயணனும் ஒருவர். திரவ எரிபொருளை வைத்து ராக்கெட் ஏவுவதற்கான வழிமுறைகளை ஆராய்ச்சி செய்து வந்தவர்.

    இவர், கடந்த 1994-ம் ஆண்டு பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு ராக்கெட் தொழில்நுட்பத்தை விற்பனை செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை என சிபிஐ தனது அறிக்கையை தாக்கல் செய்தது. இதையடுத்து நம்பி நாராயணன் விடுதலை செய்யப்பட்டார்.

    அதன்பிறகு, தன் மீது பொய்வழக்கு போட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நம்பி நாராயணன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விஞ்ஞானி நம்பி நாராயணனை கைது செய்தது தேவையில்லாதது எனக்கூறி, அவருக்கு கேரள அரசு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்து வழக்கை முடித்து வைத்தது.

    இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றும் பொருட்டு, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானியான நம்பி நாராயணனுக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. #ISRO #ScientistNambiNarayan #KeralaCabinet
    இஸ்ரோவில் உளவு பார்த்ததாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என தீர்ப்பு வந்ததை அறியாமலேயே விஞ்ஞானி சந்திரசேகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #ISRO #ScientistNambiNarayan #ScientistKChandrasekhar
    திருவனந்தபுரம்:

    இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’வில் விஞ்ஞானியாக பணியாற்றியவர், கே.சந்திரசேகர். இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்கள் குறித்த ரகசியங்களை 1994-ம் ஆண்டு விஞ்ஞானிகள் நம்பி நாராயணன் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் வெளிநாடுகளுக்கு பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி விசாரணை மேற்கொண்ட கேரள மாநில போலீசார் அவர்களை கைது செய்தது.

    பின்னர் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை என சந்திரசேகர் மற்றும் நம்பி நாராயணன் போன்றோரை சிபிஐ விடுதலை செய்தது. மேலும் கேரள போலீஸ் அதிகாரிகள் சட்டவிரோதமாக அவர்களை கைது செய்ததாகவும் கூறியது.

    இதற்கிடையே, தன்னை தேவையின்றி கைது செய்து, சித்ரவதைக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாக்கிய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நம்பி நாராயணன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து 1998-ல் நம்பி நாராயணன் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நம்பி நாராயணன் உள்ளிடோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரமற்றது என கூறி மனரீதியாக துன்புறுத்தப்பட்ட நம்பி நாராயணனுக்கு கேரள அரசு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

    மேல்முறையீட்டு வழக்கை மிகவும் எதிர்ப்பார்த்திருந்த சந்திரசேகர் தீர்ப்பு வெளியான தினமான கடந்த வெள்ளி அன்று காலையில் திடீரென கோமா நிலைக்கு சென்றார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்திரசேகர் கடந்த ஞாயிறு அன்று உயிரிழந்தார்.

    இது தொடர்பாக அவர் மனைவி விஜயம்மா கூறுகையில், ’தீர்ப்பு வெளியான அன்று அவர் திடீரென கோமா நிலைக்கு சென்றார். தீர்ப்பில் நிச்சயம் வெற்றி பெற்று விடுவோம் என அவர் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார், ஆனால் இந்த வழக்கு தொடரப்பட்டதற்கான பின்னனி அறிந்து கொள்ளாமல் அவர் மறைந்து விட்டார். இந்த வழக்கினால் நாங்கள் மிகவும் துன்பத்திற்கு ஆளானோம்’ என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    இஸ்ரோவில் உளவு பார்த்ததாக தன் மீது சுமத்தப்பட்ட களங்கம் நீங்கியதை அறியாமலேயே விஞ்ஞானி சந்திரசேகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #ISRO #ScientistNambiNarayan #ScientistKChandrasekhar
    தன் மீது பொய் வழக்கு போட்டதற்கு இழப்பீடு வேண்டி இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் தொடர்ந்த வழக்கில், அவருக்கு 50 லட்ச ரூபாய் வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #ISRO #ScientistNambiNarayan #SupremeCourt
    புதுடெல்லி:

    இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன். 1994-ம் ஆண்டு இவர் விஞ்ஞானியாக இருந்த போது கிரையோ ஜெனிக் ராக்கெட் என்ஜின் தொழில்நுட்பத்தை பாகிஸ்தானுக்கு அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதையடுத்து அவரை கேரள போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீஸ் காவலில் இருந்த போது விஞ்ஞானி நம்பி நாராயணன் துன்புறுத்தப்பட்டதாக புகார் கூறப்பட்டது.

    தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து நம்பி நாராயணன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் அவர் மீதான புகார் பற்றி விசாரிக்க நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் விசாரணை குழு அமைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த குழுவில் மத்திய-மாநில அரசு பிரதிநிதிகளும் இடம் பெற்று இருந்தனர்.

    மேலும் சி.பி.ஐ.யும் தனியாக விசாரணை நடத்தி நம்பி நாராயணன் மீது தவறாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தது. விசாரணை குழுவின் அறிக்கையின் அடிப்படையில் விஞ்ஞானி நம்பி நாராயணனை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதற்கிடையே தன் மீது தவறாக வழக்குப்பதிவு செய்து சித்ரவதை செய்த குற்றத்துக்காக அப்போதைய கேரள போலீஸ் டி.ஜி.பி. சிபி மேத்யூஸ், போலீஸ் சூப்பிரண்டுகள் கே.கே. ஜோசுவா, எஸ்.விஜயன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டில் நம்பி நாராயணன் மனு தாக்கல் செய்தார்.

    ஆனால் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்று கூறி மனுவை கேரள ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. அதன்பிறகு 3 போலீஸ் அதிகாரிகளும் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர்.


    கேரள ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து நம்பி நாராயணன் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு மனுதாக்கல் செய்தார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஓய். சந்திர சூட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணை நடத்தியது.

    இன்று இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதில் கேரள போலீசாரின் தவறான வழக்கால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளான நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், முன்னாள் டி.ஜி.பி. மேத்யூஸ், சூப்பிரண்டுகள் ஜோசுவா, விஜயன் ஆகியோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். #ISRO #ScientistNambiNarayan #SupremeCourt
    ×