search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய் மக்கள் இயக்கம்"

    • விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மக்களுக்கு தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகின்றனர்.
    • இது மட்டுமின்றி தலைவர்கள் பிறந்தநாளில் தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அன்னதானம், குழந்தைகளுக்கு சத்தான உணவுகள், உலக பட்டினி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கி விஜய் ரசிகர்கள் மக்கள் சேவையில் இறங்கினர்.

    234 தொகுதிகளிலும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி அவர்களிடம் ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்று பேசி விஜய் அரசியல் அரங்கை அதிர வைத்தார். இதைத் தொடர்ந்து காமராஜர் பிறந்த நாளான இன்று தமிழகம் முழுவதும் உள்ள அவரது சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதுமட்டுமல்லாமல் காமராஜர் பிறந்த நாளையொட்டி 234 தொகுதிகளிலும் ஏழை மாணவ-மாணவிகள் பயில இரவு பாடசாலை திட்டமான 'தளபதி விஜய் பயிலகம்' இன்று மாலை முதல் தொடங்கப்பட உள்ளது.


    விஜய் தனது மக்கள் இயக்கத்தின் சார்பாக இப்படி பல உதவிகளை செய்து வருவது அவர் விரைவில் அரசியலில் கால்பதிக்க செய்யும் முன்னேற்பாடுகள் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அவர் அரசியலில் நுழைந்தால் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை ஆதரித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் காமராஜர் வழியை பின்பற்றினாள் அவர்களுக்கு வெற்றி நிச்சயமாக இருக்கும். விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. ஒருவேளை விஜய் அரசியலுக்கு வந்தால் நம் கட்சி பாதிக்கும், ஓட்டு போய்விடும் என்று நினைப்பவர்கள் எதிர்க்கலாம். இந்திய குடிமகனாக லட்சக்கணக்கான ரசிகர்களை வைத்து ஒரு சரியான அமைப்பை நிறுவிக்கொண்டிருக்கும் விஜய் சரியான நேரத்தில் வந்தால் அவருக்கு வெற்றி நிச்சயமாக கிடைக்கும்.

    • விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மக்களுக்கு தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகின்றனர்.
    • இது மட்டுமின்றி தலைவர்கள் பிறந்தநாளில் தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    நடிகர் விஜய் சமீபகாலமாக தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அன்னதானம், குழந்தைகளுக்கு சத்தான உணவுகள், உலக பட்டினி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கி விஜய் ரசிகர்கள் மக்கள் சேவையில் இறங்கினர்.

    234 தொகுதிகளிலும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி அவர்களிடம் ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்று பேசி விஜய் அரசியல் அரங்கை அதிர வைத்தார். இது மட்டுமின்றி தலைவர்கள் பிறந்தநாளில் தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.


    இதைத் தொடர்ந்து காமராஜர் பிறந்த நாளான இன்று தமிழகம் முழுவதும் உள்ள அவரது சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் திரளாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் எராளமான இடங்களில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். காமராஜர் பிறந்த நாளையொட்டி 234 தொகுதிகளிலும் ஏழை மாணவ-மாணவிகள் பயில இரவு பாடசாலை திட்டமான 'தளபதி விஜய் பயிலகம்' இன்று மாலை முதல் தொடங்கப்பட உள்ளது.

    இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் இலவச பாடசாலை குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, "மாணவர்களுக்காக விஜய் இலவச பாடசாலை தொடங்கியுள்ளது நல்ல விஷயம் தான். இல்லம் தேடி கல்வியின் நோக்கமே அதுதான். கொரோனா காலத்தில் யார் யாரெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களை சேர்பதற்கான பணிகளை செய்து வருகிறோம். இதற்கான பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுப்பட்டிருக்கிறார்கள்" என்று கூறினார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மக்களுக்கு தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகின்றனர்.
    • இது மட்டுமின்றி தலைவர்கள் பிறந்தநாளில் தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    நடிகர் விஜய் சமீபகாலமாக தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அன்னதானம், குழந்தைகளுக்கு சத்தான உணவுகள், உலக பட்டினி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கி விஜய் ரசிகர்கள் மக்கள் சேவையில் இறங்கினர்.

    234 தொகுதிகளிலும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி அவர்களிடம் ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்று பேசி விஜய் அரசியல் அரங்கை அதிர வைத்தார். இது மட்டுமின்றி தலைவர்கள் பிறந்தநாளில் தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.



    சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற மாவீரர் வீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் திரண்டு வந்து எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து காமராஜர் பிறந்த நாளான இன்று தமிழகம் முழுவதும் உள்ள அவரது சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் திரளாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் எராளமான இடங்களில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். சென்னை பல்லவன் இல்லம் அருகே உள்ள ஜிம்கானா கிளப் காமராஜர் சிலைக்கு மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் விஜய் மக்கள் இயக்க கொடியுடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



    காமராஜர் பிறந்த நாளையொட்டி 234 தொகுதிகளிலும் ஏழை மாணவ-மாணவிகள் பயில இரவு பாடசாலை திட்டமான 'தளபதி விஜய் பயிலகம்' இன்று மாலை முதல் தொடங்கப்பட உள்ளது. சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் விஜய் பயிலகம் தொடங்குவதற்கான பணிகள் முடி வடைந்த நிலையில் அங்கு இன்று மாலை முதல் மாணவ-மாணவிகளுக்கு கல்வி பயிற்சி அளிக்கப்படு கிறது.

    • விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இரவு நேர பாடசாலையை துவங்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
    • விஜய்யின் இந்த முயற்சிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடிகர் விஜய் தொடர்ச்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இவர் சமீபத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்து விளங்கிய மாணவ- மாணவிகளை 234 தொகுதி நிர்வாகிகள் மூலம் கண்டறிந்து ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இடையே இந்த நிகழ்ச்சி பெறும் வரவேற்பை பெற்றது.மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் விஜய்யை அரசியலுக்கு வருமாறு அழைத்தனர்.


    இதையடுத்து மாணவ- மாணவியர்களின் கல்விக்கு உதவும் விதமாக விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இரவு நேர பாடசாலையை துவங்க விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக மாவட்ட வாரியாக தொடர்ந்து முன்னெடுப்புகளை எடுக்குமாறு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15-ஆம் தேதி முதல் இந்த திட்டம் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் இந்த முயற்சிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


    சுரேஷ் காமாட்சி- விஜய்

    இந்நிலையில், 'மாநாடு' போன்ற பல வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, விஜய்யை பாராட்டி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "எத்தனையோ குழந்தைகள் இன்னமும் இரவு நேரம் படிக்க வசதி இல்லாமல் தவிக்கிறார்கள். மதிப்பெண்களால் வெற்றிபெற்று நாளிதழ்களில் மின்னொளியில் படித்தேன்... மண்ணெண்ணெய் விளக்கில் படித்தேன் என மாணாக்கர்கள் சொல்லும்போதுதான் அவர்களின் வறுமை புரிய வருகிறது. அப்படியிருக்க, தமிழ் சினிமாவில் கோலோச்சும் நாயகன் விஜய் அவர்கள் இரவுப் பாடசாலை திட்டத்தை செயல்படுத்த முன்வந்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. தான் நிஜ கதாநாயகன் என தன் செயல்பாடுகளை அமைத்துக் கொண்டிருப்பது கல்விச் செல்வம் தளைக்க மிக மிக அவசியமானது. தொடர்க. வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.




    • நடிகர் விஜய் இன்று மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்தார்.
    • இந்த கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

    விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடிகர் விஜய் தொடர்ச்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இவர் சமீபத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்து விளங்கிய மாணவ- மாணவிகளை 234 தொகுதி நிர்வாகிகள் மூலம் கண்டறிந்து ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இடையே இந்த நிகழ்ச்சி பெறும் வரவேற்பை பெற்றது.

    இதையடுத்து இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற காரணமாக இருந்த 234 தொகுதியில் உள்ள மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நேற்று விஜய் ஆலோசனை நடத்தினார். பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் மாலை 5.30 மணி வரை நடந்தது. இதில் 50 சதவீத மாவட்ட நிர்வாகிகளை விஜய் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.


    விஜய் 2-வது நாளாக இன்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, ஈரோடு, கடலூர், வேலூர், திருப்பத்தூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சிவகங்கை, தர்மபுரி உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

    நிகழ்ச்சி முடிந்ததும் பத்திரிகையாளர்களை சந்தித்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது, விஜய் நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்தார் மற்றும் அவர்களது குடும்பத்தை பார்த்துக் கொள்ள கூறினார். இலவச பாடசாலை குறித்து விஜய்யிடம் அனுமதி பெற்றபின் முறையான அறிவிப்பு வெளியாகும் என கூறினார்.

    • நடிகர் விஜய் நேற்று மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    • இந்த ஆலோசனையில் 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    நடிகர் விஜய் 234 தொகுதியில் உள்ள மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் மாலை 5.30 மணி வரை நடந்தது. இதில் 50 சதவீத மாவட்ட நிர்வாகிகளை விஜய் சந்தித்து ஆலோசனை நடத்தியதுடன் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

    விஜய்யை சந்தித்த நிர்வாகிகள் 90 சதவீதம் பேர் விஜய்யிடம் தீவிர அரசியலுக்கு வரும்படி வலியுறுத்தினார்கள். அவர்களிடம் சிரித்த படியே முதுகில் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தினார். மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் பேசிய விஜய், பரிசு பெறுவதற்கான மாணவ-மாணவிகளை நல்ல முறையில் அழைத்து வந்து பாதுகாப்பாக வீட்டில் கொண்டு சேர்த்தீர்கள். உங்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

    அதற்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் விஜய்யிடம் உங்களது விருப்பத்தை நாங்கள் செயல்படுத்துகிறோம். எங்களது அனைவரின் ஒரே நோக்கமும் விருப்பமும் நீங்கள் விரைவில் தீவிர அரசியலுக்கு வந்து தமிழகத்துக்கும், மக்களுக்கும் நல்ல பணிகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    இந்நிலையில், விஜய் 2-வது நாளாக இன்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, ஈரோடு, கடலூர், வேலூர், திருப்பத்தூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சிவகங்கை, தர்மபுரி உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

    • விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நிர்வாகிகள் தொடர்ந்து பல உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர்.
    • சமீபத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.

    விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடிகர் விஜய் தொடர்ச்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இவர் சமீபத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்து விளங்கிய மாணவ- மாணவிகளை 234 தொகுதி நிர்வாகிகள் மூலம் கண்டறிந்து ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இடையே இந்த நிகழ்ச்சி பெறும் வரவேற்பை பெற்றது.மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் விஜய்யை அரசியலுக்கு வருமாறு அழைத்தனர்.

    இந்நிலையில், மாணவ- மாணவியர்களின் கல்விக்கு உதவும் விதமாக விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இரவு நேர பாடசாலையை துவங்க விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக மாவட்ட வாரியாக தொடர்ந்து முன்னெடுப்புகளை எடுக்குமாறு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15-ஆம் தேதி முதல் இந்த திட்டம் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த இரவு நேர பாடசாலைக்கு தேவையான இடம் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் அதற்கான வாடகை, ஆசிரியர் தேர்வு போன்ற அனைத்து செலவுகளையும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு நான்கு இடங்களுக்கு மேல் இந்த பாடசாலை அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நடிகர் விஜய் நேற்று மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்தார்.
    • இதில் 50 சதவீத மாவட்ட நிர்வாகிகளை விஜய் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    நடிகர் விஜய் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சமீபத்தில் ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் விஜய், ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என கூறினார்.

    மேலும், விஜய் மக்கள் இயக்கம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவ்வப்போது வழங்கி வருகிறார். இதனால், நடிகர் விஜய் விரைவில் அரசியல் களத்தில் இறங்குகிறார் என்ற வெளிப்படையாக அறிவிக்கப்படாத தகவல் வலம் வருகிறது.

    இதையடுத்து நேற்று 234 தொகுதியில் உள்ள மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார். பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் மாலை 5.30 மணி வரை நடந்தது. இதில் 50 சதவீத மாவட்ட நிர்வாகிகளை விஜய் சந்தித்து ஆலோசனை நடத்தியதுடன் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து வெளியே வந்த நிர்வாகிகள் சிலர், "அரசியலுக்கு வருமாறு விஜய்யை அழைத்தோம். அதற்கு அவர் நான் அரசியலுக்கு வந்தால், அதில்தான் என் முழு கவனமும் இருக்கும். சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றார். அவரது அரசியல் வருகைக்கான அனைத்து கட்டமைப்புகளையும் செய்து விட்டோம். விஜய் எப்போது அரசியலுக்கு வந்தாலும் பணியாற்ற தயாராக உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இன்று மீண்டும் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • விஜய்யின் கார் சிக்னலில் நிற்காமல் சென்றதற்காக ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.
    • இதனை நடிகர் விஜய் ஆன்லைன் வாயிலாகாக செலுத்தியுள்ளார்.

    நடிகர் விஜய் நேற்று பனையூர் விஜய் மக்கள் நல இயக்க அலுவகத்தில் 234 தொகுதி நிர்வாகிகளுடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அதற்காக நீலாங்கரையில் இருந்து பனையூருக்கு விஜய் காரில் சென்றார். அப்போது அக்கரை பகுதி சிக்னலில் நடிகர் விஜயின் கார் நிற்காமல் சென்றது வீடியோ காமிராவில் பதிவானது. 



    இதையடுத்து, போக்குவரத்து போலீசார் நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதித்தனர். சிக்னலை மதிக்காமல் விஜயின் கார் சென்றதாக புகார் எழுந்த நிலையில், போக்குவரத்து போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் போக்குவரத்து விதிமீறலுக்கான ரூ.500 அபராத தொகையை நடிகர் விஜய், ஆன்லைன் மூலம் செலுத்தினார்.

    • விஜய் மக்கள் இயக்க தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை நடத்தினார்.
    • சிக்னலில் நிற்காமல் சென்றதற்காக நடிகர் விஜய்க்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.

    சென்னை:

    நடிகர் விஜய் சமீபத்தில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.

    இதற்கிடையே, நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் 234 தொகுதி நிர்வாகிகளுடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், நீலாங்கரையில் இருந்து பனையூர் வரும் வழியில் உள்ள சிக்னலில் நடிகர் விஜயின் கார் நிற்காமல் சென்றது வீடியோ காமிராவில் பதிவானது. இதையடுத்து, போக்குவரத்து போலீசார் நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். சிக்னலை மதிக்காமல் விஜயின் கார் சென்றதாக புகார் எழுந்தநிலையில், போக்குவரத்து போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
    • இந்த ஆலோசனை கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    விஜய் மக்கள் இயக்க தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

    சமீபத்தில், நடிகர் விஜய் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் விஜய், ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என கூறினார். மேலும், விஜய் மக்கள் இயக்கம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவ்வப்போது வழங்கி வருகிறார். இதனால், நடிகர் விஜய் விரைவில் அரசியல் களத்தில் இறங்குகிறார் என்ற வெளிப்படையாக அறிவிக்கப்படாத தகவல் வலம் வருகிறது.

    இந்நிலையில், நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக வந்தடைந்தார். இன்று முதல் 3 நாட்களுக்கு இந்த ஆலோசனை நடைபெறும் என்று கூறப்படுகிறது. போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையுடன் வரும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் 300 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதில், 234 தொகுதி நிர்வாகிகளுடனும் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், விஜய் மக்கள் இயக்கத்தின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து மாவட்ட வாரியாக விஜய் கேட்டறிந்தார். இதன் பின்னர், விஜய்யின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

    • லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.
    • விஜய் நடிப்பதை சிறிது காலம் நிறுத்திவிட்டு தீவிர அரசியலில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.



    இந்நிலையில் தளபதி 68 படத்தை முடித்த பிறகு விஜய் நடிப்பதை சிறிது காலம் நிறுத்திவிட்டு தீவிர அரசியலில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024 மே மாதத்திற்குள் வெங்கட் பிரபு உடனான படத்தை நிறைவு செய்துவிட்டு 2025 ஆம் ஆண்டு முழுவதும், மக்கள் இயக்கம் மற்றும் களப்பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.



    சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 2026 ஆம் ஆண்டில் மாநாடுகள் நடத்த உள்ளதாகவும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், விஜய் கவனம் செலுத்தப் போவதில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாக உள்ளதகவும் கூறப்படுகிறது.

    ×