search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய் அரசியல்"

    • திமு.க கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு திமுக கூட்டணியில் 2 அல்லது 3 தொகுதிகளை கேட்டு பெற்று விட வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் தனித்து போட்டியிட்ட நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலை கூட்டணி அமைத்து சந்திக்க முடிவு செய்துள்ளது.

    இதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சி ஏற்கனவே அடித்தளமும் அமைத்துள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிரசாரமும் மேற் கொண்டார்.


    இதன்மூலம் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவது உறுதியானது.

    இந்த நிலையில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு இதுவரை யாரும் அழைக்காமலேயே உள்ளனர்.

    இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டியளித்த தி.மு.க. முன்னணி தலைவர்களில் ஒருவரான டி.ஆர்.பாலு தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இடம் பெற்றுள்ளதா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்.

    இது கமல் கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி மக்கள் நீதி மய்யம் கட்சியை கூட்டணியில் சேர்ப்பது பற்றி வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என்று கூறியிருந்தார். இதன் மூலம் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணியில் சேர்வதற்கான சூழல் ஏற்பட்டிருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

    இதற்கிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார். அதே நேரத்தில் வெளிநாட்டில் இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அடுத்த வாரமே சென்னை திரும்புகிறார். வருகிற 12 அல்லது 13-ந்தேதி அவர் சென்னை திரும்ப உள்ளார்.


    அதன் பிறகு தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு முறைப்படி அறிவிப்பு வெளியாகும் என கமல் கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கமல்ஹாசன் நேரில் சந்தித்து பேசுவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் 2 அல்லது 3 தொகுதிகளை கேட்டு பெற்று விட வேண்டும் என்பதில் அந்த கட்சி நிர்வாகிகள் தீவிரமாக உள்ளனர்.

    இது தொடர்பாக கமல்ஹாசன் பேச்சு நடத்தி உரிய முடிவை எடுப்பார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    தென்சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணியில் குறிவைத்து மக்கள் நீதி மய்யம் கட்சி காய் நகர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது. அனைத்து கட்சிகளும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பம்பரமாக சுழன்று வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலகத்தை திறக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து தொகுதிகளிலும் அந்த கட்சியினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதியானதும் தேர்தல் பணிகளை மேலும் வேகப்படுத்தவும் கமல்ஹாசன் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

    • காங்கிரசை அட்டாக் பண்ணுவது போல் பேசிக் கொண்டிருக்கிறார்.
    • மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன்.

    சென்னை:

    சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி:- பாராளுமன்றத்தில் பிரதமர் உரை நிகழ்த்தி இருக்கிறார். பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். அது தொடர்பான நிகழ்வுகளை நீங்கள் பார்த்தீர்களா?


    பதில்:-பார்த்தேன், படித்தேன், ரசித்தேன், சிரித்தேன். ஏனென்றால் பி.ஜே.பி.தான் எதிர்க்கட்சி மாதிரியும், காங்கிரஸ் ஆளும் கட்சி மாதிரியும், அவர் தொடர்ந்து பேசுகிறார். ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அவர் எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டு ஆளுங்கட்சி போல் இருக்கக் கூடிய காங்கிரசை அட்டாக் பண்ணுவது போல் பேசிக் கொண்டிருக்கிறார். இது தான் புரியாத புதிராக இருக்கிறது.

    கேள்வி:- பிரதமர் மோடி பேசும்போது எம்.பி. தேர்தலில் 400 இடங்களை கைப்பற்றுவோம் என்று சொல்லி இருக்கிறாரே?

    பதில்:- மொத்தம் 400 தானா? 543 இடம் இருக்குது. அதையும் கைப்பற்றுவோம் என்று சொன்னால் ஆச்சரியம் இல்லை.


    கேள்வி:- நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளாரே? எப்படி பார்க்கிறீர்கள்? புதிதாக அரசியலுக்கு வந்திருக்கிறாரே?

    பதில்:- மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடிகர் விஜய் தொடங்கியுள்ள கட்சி குறித்து தற்போது விவாதிக்க வேண்டிய தேவை இல்லை.
    • விஜய் அரசியல் மூலமாக மக்கள் சேவை செய்ய வேண்டும் எனறு விரும்புகிறார்.

    கோவை:

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலையொட்டி எந்தெந்த மாதிரியான செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பது பற்றி பாராளுமன்ற பொறுப்பாளர்களுக்கும், அமைப்பாளர்களுக்கும் குறிப்புகள் அளிக்கப்பட்டது.

    தமிழகத்தை பொறுத்த வரை முதல் அல்லது இரண்டாம் கட்டத்தில் தேர்தல் நடக்கும். ஏப்ரல் மூன்றாவது வாரத்திற்குள் தமிழகத்தில் தேர்தல் முடிவடைய வாய்ப்புகள் உள்ளது.


    அரசியலுக்கு திசை கொடுத்த ஒரு அரசியல்வாதி என்று சொன்னால் அவர் அத்வானி தான். அவர் பா.ஜ.க.வை இந்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியதில் மகத்தான பங்கு வகித்தவர்.

    நடிகர் விஜய் தொடங்கியுள்ள கட்சி குறித்து தற்போது விவாதிக்க வேண்டிய தேவை இல்லை. சட்டமன்ற தேர்தலில் அதுகுறித்து விவாதிக்கலாம். விஜய் அரசியல் மூலமாக மக்கள் சேவை செய்ய வேண்டும் எனறு விரும்புகிறார். அதனை வரவேற்கிறேன்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கட்சி தொடங்கிய போது ஊழலுக்கு எதிராக கட்சி தொடங்குவதாக தெரிவித்தார். அப்போது அவர் பேசியதெல்லாம் வெறும் வெற்று வார்த்தைகள். மேலும் கமல்ஹாசனுக்கு ஊழலை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. கமல்ஹாசன் ஊழலுக்கு எதிரானவர் இல்லை. ஊழலுக்கு துணை போகக் கூடியவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.
    • விஜய் நடிப்பதை சிறிது காலம் நிறுத்திவிட்டு தீவிர அரசியலில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.



    இந்நிலையில் தளபதி 68 படத்தை முடித்த பிறகு விஜய் நடிப்பதை சிறிது காலம் நிறுத்திவிட்டு தீவிர அரசியலில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024 மே மாதத்திற்குள் வெங்கட் பிரபு உடனான படத்தை நிறைவு செய்துவிட்டு 2025 ஆம் ஆண்டு முழுவதும், மக்கள் இயக்கம் மற்றும் களப்பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.



    சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 2026 ஆம் ஆண்டில் மாநாடுகள் நடத்த உள்ளதாகவும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், விஜய் கவனம் செலுத்தப் போவதில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாக உள்ளதகவும் கூறப்படுகிறது.

    ×