search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விகடச்சக்கர விநாயகர்"

    • தோப்புக்கரணம் போட்டால் விநாயகர் மகிழ்ந்து அருள் புரிவார்.
    • சஹஸ்ர நாமம்'' கூறி ஒவ்வொரு மலராக அர்ச்சனை செய்தார்.

    விஷ்ணு பகவான் காத்தல் தொழில் புரிய வேண்டி அதற்காக சில ஆயுதங்களைப் பெற்றார். அதில் ஒன்று தான் சக்ராயுதம். அவர் அச்சக்கரத்தை ஒரு போரில் ததீசி என்ற முனிவர் மேல் ஏவ அது சக்தி இழந்து திரும்பி வந்துவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஷ்ணு பகவான் வேறு ஒரு வலிமையான ஆயுதம் வாங்குவதற்காக சிவனை வழிபடச் சென்றார்.

    அப்போது வாசலில் இருந்த விநாயகப் பெருமானை வணங்காமல் விஷ்ணு உள்ளே சென்றுவிட்டார். இதனால் விஷ்ணு பகவான் மீது விநாயகருக்கு கோபம் வந்தது. இதை அறியாத விஷ்ணு பகவான், சிவபெருமானை போற்றி வணங்கி 1000 தாமரை மலர்களால், சிவபெருமானின் ஆயிரம் திருநாமங்களாகிய "சஹஸ்ர நாமம்'' கூறி ஒவ்வொரு மலராக அர்ச்சனை செய்தார்.

    இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான், முன்பொருசமயம் ஜலந்தராசுரன் என்ற அரக்கனை மாய்க்க தம் கால் நகங்களால் உருவாக்கி இருந்த சுதர்சனம் எனும் சக்கர படைப்பை விஷ்ணு பகவானுவுக்கு கொடுத்தார். விஷ்ணு பகவான் சுதர்சனசக்கரத்தை வாங்கிக்கொண்டு வரும்போது வாயிலில் இருந்த விநாயகப் பெருமான் வழிமறித்தார். விஷ்ணு பகவானின் கையில் இருந்த சுதர்சன சக்கரத்தை பிடுங்கி தம் வாயில் போட்டுக் கொண்டார்.

    அதனைக் கண்டு அதிர்ந்த விஷ்ணு பகவான், தாம் விநாயகப் பெருமானை வணங்காது சென்றது தவறுதான் என்பதை உணர்ந்தார். அவரை வணங்கி, தமது நான்கு திருக்கரங்களாலும் இருகாதுகளையும் பற்றிக்கொண்டு பலமுறை உட்கார்ந்து எழுந்து தோர்பி, கர்ணம் இட்டார். இந்த செயல் பார்க்க மிகவும் நகைச்சுவையாக இருந்ததால் விநாயகர் தம் கோபம் மறந்து விழுந்து விழுந்து சிரித்தார்.

     அப்போது அவர் வாயில் இருந்த சுதர்சன சக்கரம் வெளியில் விழுந்தது. அதனை எடுத்து விநாயகப் பெருமானிடம் வணங்கி ஆசிபெற்றார் விஷ்ணு பகவான். (இந்த கணபதி விகடச்சக்கர விநாயகர் என போற்றப்படுகிறார். இவர் காஞ்சிபுரம் கோவிலில் வீற்றிருந்து அருளாட்சி செய்கிறார்). இப்படி தோப்புக்கரணம் போட்டால் விநாயகர் மகிழ்ந்து அருள் புரிவார் என்பதாலேயே இச்செயல் நடைமுறைக்கு வந்தது.

    ×