search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்கச்சாவடி"

    • ஆவணங்கள் கொடுத்து ரூ.22 லட்சத்து 66 ஆயிரத்து 448 திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    • பணியை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஈரோடு:

    தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்கு ப்பதிவு எந்திரங்கள் கிடங்கில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று காலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குப்ப திவு எந்திரங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்து அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பும் பணி நடந்தது.

    இந்தப் பணியை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ராஜ கோபால் சுன்கரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈரோடு பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 222 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இன்றும், நாளையும் என 2 நாட்கள் இந்த பணிகள் நடைபெறும். ஈரோடு மாவட்டத்தில் டோல்ப்ரீ எண் மூலம் 21 புகாரும், சி-விஜில் செயலி மூலம் 10 புகாரும் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நேற்றைய நிலவரப்படி, ஈரோடு மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டதாக ரூ.93 லட்சத்து 23 ஆயிரத்து 78 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ஆவணங்கள் கொடுத்து ரூ.22 லட்சத்து 66 ஆயிரத்து 448 திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    முறையான ஆவணங்கள் இருந்தால் பணம் பறிமுதல் செய்வதில்லை. அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். இது தேர்தலுக்கான நேரம் என்பதால் பறக்கும்படை அதிகாரிகள் அவர்களின் பணியை செய்கிறார்கள்.

    எனவே பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்திற்கு மேலே ரொக்கம் கொண்டு செல்லும் பட்சத்தில் உரிய ஆவணங்கள் கொண்டு செல்லவேண்டும். நாடாளு மன்றத் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவல ர்களுக்கான முதல் பயிற்சி வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுகிறது.

    10 ஆயிரத்து 970 பேருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது. முதற்கட்ட பயிற்சியில் அவர்களுக்கு அஞ்சல் வாக்குப்படிவம் வழங்கப்படும். அதற்குப் பின்னர் அவர்களுக்கு அஞ்சல் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்படும். சத்தியமங்கலத்தில் குன்றி, கடம்பூர், குத்தியாலத்தூர், தாளவாடி மற்றும் பர்கூர் உள்ளிட்ட மலை கிராமங்க ளில் உள்ள வாக்குச்சாவடி களுக்கு தேர்தலுக்கு முந்தைய நாள் அங்கு பெண்கள் தங்கவேண்டிய சூழல் இருப்பதால் அப்பகுதியில் பெண்கள் பணியாற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.

    பெண்களுக்கு மாற்றாக ஆண்களை அங்கு பணிய மர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஈரோடு நாடா ளுமன்ற தொகுதிகளில் பதற்றமான தொகுதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு இன்று தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×