search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழிபாட்டு தலங்கள்"

    • தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் கோவில் விழாக்கள் நடத்திட முறையாக அனுமதி பெற வேண்டும்.
    • திருமண மண்டபங்களில் எந்த ஒரு நிகழ்ச்சி நடத்தினாலும் முறையாக அனுமதி பெற வேண்டும்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற உள்ளது. தற்போது தேர்தல் நடத்த விதிமுறைகள் அமலில் உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் தற்போது பங்குனி மாதம் என்பதால் அனைத்து கோவில்களிலும் திருவிழாக்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் நடக்கும் திருவிழாக்களுக்கு தேர்தல் பிரிவு அலுவலகத்தில் அனுமதி பெற்று நடத்திட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

    அதேபோல் திருமண மண்டபங்களில் திருமணம், திருமண வரவேற்பு, வளைகாப்பு, காதுகுத்து உள்ளிட்ட எந்த வகையான நிகழ்ச்சிகள் நடத்தினாலும் தேர்தல் பிரிவு அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். இதன் பேரில் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் செயல்படும் தேர்தல் பிரிவு அலுவலகத்தில் கோவில், சர்ச், மசூதிகளில் விழாக்கள் நடத்திட அனுமதி பெற அதன் நிர்வாகிகள் ஏராளமானோர் விண்ணப்பித்து அனுமதி பெற்று செல்கின்றனர்.

    இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

    தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் கோவில் விழாக்கள் நடத்திட முறையாக அனுமதி பெற வேண்டும். கோவில் நிர்வாகிகள் அனுமதிகேட்டு விண்ணப்பிக்கும்போது, அதன் உண்மை தன்மை ஆராய்ந்து உடனடியாக அனுமதி வழங்கப்படுகிறது. அவ்வாறு அனுமதி பெற்று கோவில் விழாக்கள் நடத்தும்போது, அவர்கள் எப்போது போல ஒலி பெருக்கிகள் வைத்து நிகழ்ச்சி நடத்தலாம்.

    ஆனால் அங்கு எந்த ஒரு வேட்பாளரையும் ஆதரித்தோ அல்லது வாக்கு சேகரித்து பிரசாரம் மேற்கொள்ளவும் கூடாது. அவ்வாறு செயல்பட்டால் தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேப்போல் திருமண மண்டபங்களில் எந்த ஒரு நிகழ்ச்சி நடத்தினாலும் முறையாக அனுமதி பெற வேண்டும்.

    ஈரோடு மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் இதுவரை சர்ச், ரம்ஜான் பண்டிகையொட்டி மசூதியில் சிறப்பு தொழுகை நடத்துவது, ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் திருவிழா உள்ளிட்ட 80 மத வழிபாட்டு தலங்களில் விழாக்கள் நடத்திட அனுமதி வேண்டி விண்ணப்பிக்கப்பட்டதில் 80 மத வழிபாட்டு தலங்களிலும் விழாக்கள் நடத்திட தேர்தல் விதிமுறைகளின்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கடவுளை சந்தோஷப்படுத்த பட்டாசுகளை வெடிக்க எந்த புனித நூலிலும் உத்தரவு இல்லை.
    • தற்போதைய உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பது குறித்து புகார் அளிக்கப்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என எச்சரித்தார்.

    திருவனந்தபுரம்:

    வழிபாட்டு தலங்களில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக கேரள ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், "கேரளாவில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசு மற்றும் வாண வேடிக்கைகளுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும்" என்ற குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனு நீதிபதி அமித் ராவல் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத வழிபாட்டு தலங்களில் ஒற்றைப்படை மணி நேரத்தில் (நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரம்) பட்டாசு வெடிக்க கேரள ஐகோர்ட் தடை விதித்தது. மேலும் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், நீதிபதி அமித் ராவல் அமர்வு உத்தரவிட்டது.

    இதுதொடர்பாக போலீஸ் உதவி கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதியின் தனது தீர்ப்பில், கொச்சி மற்றும் பிற மாவட்ட போலீஸ் கமிஷனர் உதவியுடன் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் சோதனை நடத்தவும், அனைத்து மத ஸ்தலங்களிலும் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பட்டாசுகளை கைப்பற்றவும் துணை ஆட்சியருக்கு உத்தரவிடுகிறேன் என்று கூறிய நீதிபதி, கடவுளை சந்தோஷப்படுத்த பட்டாசுகளை வெடிக்க எந்த புனித நூலிலும் உத்தரவு இல்லை என்று கருத்தும் தெரிவித்தார்.

    சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்ய சோதனை நடத்த அறிவுறுத்திய நீதிபதி, தற்போதைய உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பது குறித்து புகார் அளிக்கப்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என எச்சரித்தார்.

    • விழுப்புரம் மாவட்டம் முழுவதும் போலீ சார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • தங்கும் விடுதியில் உள்ளவர்களை ஒவ்வொரு வராக போலீசார் சோதனை செய்தனர்.

    விழுப்புரம்:

    கர்நாடக மாநிலம் மங்களூர் நகரில் கங்கை டவுன் போலீஸ் நிலைய எல்லை அருகே ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதன் எதிரொலியாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் போலீ சார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்- மரக்காணம் சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன், தலைமையிலான சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சிவகுமார், தலைமை போலீசார்கள் கணேசன், சபரி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் திண்டிவனத்தில் உள்ள கோவில், சர்ச், மசூதி ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் திண்டிவனத்தில் உள்ள தங்கும் விடுதியில் சந்தேக படும் படியான நபர்கள் யாரேனும் தங்கி உள்ளார்களா எனவும் போலீசார் சோதனை செய்தனர். மேலும் தங்கும் விடுதியில் உள்ளவர்களின் அடையா ளங்களை சேகரிக்கும் பொருட்டு எப்.ஆர்.எஸ். செயலி மூலம் தங்கும் விடுதியில் உள்ளவர்களை ஒவ்வொரு வராக போலீசார் சோதனை செய்தனர்.

    ×