search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரிவிதிப்பு"

    • கட்டிட உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி விதிப்பு செய்து வரிகளை செலுத்த வேண்டும்.
    • கட்டிட உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி விதிப்பு செய்து கொள்ளவும்.

    காங்கயம்

    காங்கயம் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    காங்கயம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வரிவிதிப்பு செய்யப்படாத கட்டிடம் மற்றும் ஏற்கனவே வரிவிதிப்பு செய்யப்பட்டு அதன் பின் கூடுதலாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு வரி விதிக்கப்படாமல் இருந்தால் அது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே கட்டிட உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி விதிப்பு செய்து வரிகளை செலுத்த வேண்டும். அவ்வாறு வரியினங்களை செலுத்த முன் வராத பட்சத்தில் குழு ஆய்வு செய்யும்போது கட்டிடங்கள் கண்டறியப்பட்டால் 6 ஆண்டுகளுக்கான வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும். எனவே கட்டிட உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி விதிப்பு செய்து கொள்ளவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் 140 அரிசி ஆலைகள் மூடப்பட்டுள்ளன.
    • ரூ. 300 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    மத்திய அரசு அரிசி, கோதுமைக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளது. இதற்கு அரிசி வியாபாரிகள் கடும் கண்டனம் தெரிவித்து இன்று தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கடையடைப்பு போராட்டாம் நடைபெறும் என்று அறிவித்து இருந்தனர்.

    அதன்படி மதுரை மாவட்டத்தில் இன்று ஒரு நாள் வேலைஅரிசி வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி கடைகளும் இன்று மூடப்பட்டு இருந்தன.

    இது தொடர்பாக மதுரை மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்க செயலாளர் அன்பரசன் கூறியதாவது:-

    மதுரை மாவட்டத்தில் 140 அரிசி ஆலைகள் உள்ளன. 300 வியாபாரிகள் கடை நடத்தி வருகின்றனர். மாவட்டத்தில் தினமும் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும். தமிழக அரிசி ஆலைகளுக்கு கர்நாடகா, ஆந்திரா மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெல் மூட்டைகள் அரவைக்கு வருகிறது.

    இந்த வகையில் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ.300 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறும்.பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக திகழும் அரிசி மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை நீக்க கோரி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறோம். மத்திய அரசு உடனடியாக 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வேண்டும்.

    மதுரை மாவட்டத்தில் 140 அரிசி ஆலைகளை சார்ந்து தொழிலாளர்கள், லாரி உரிமையாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், அரிசி வணிகர்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் தொழில் செய்து வருகின்றனர். மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு காரணமாக பொதுமக்கள் மட்டுமின்றி வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் பொதுமக்களின் அத்தியாவசிய உணவு பொருட்கள் மீது வரி விதித்தால், ஏழை எளியோர் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

    ×