search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ருத்ராட்சம் அணிவது ஏன்"

    • ருத்ராட்சத்தை, சிவனுடைய கண்கள் என்று கூறுவர்.
    • ருத்ராட்சத்திற்கு 14 வித பெயர்கள் உண்டு.

    ருத்ராட்சத்தை, சிவனுடைய கண்கள் என்று கூறுவர். ருத்ராட்ச மரத்தை, ஒரு தெய்வீக விருட்சம் எனப் போற்றுவார்கள். அம்மரத்துப் பழத்தின் உள்ளிருக்கும் விதையே, ருத்ராட்சம். சொல்லுக்கடங்கா மகிமை வாய்ந்த ருத்ராட்சத்தை, யாவரும் அணிதல் அவசியம். ருத்ராட்சத்திற்கு 14 வித பெயர்கள் உண்டு. `யோகராசா' என்னும் நூலை ஆராய்ந்தால், பல உண்மைகள் புரியும்.

    ஒரு முக ருத்ராட்சம்:- சிவன். இதை அணிந்தால் பிரம்மஹத்தி தோஷம் முதல் எல்லா தோஷங்களும் நிவர்த்தியாகும். இதை அணிந்திருப்பவரை எந்தவிதமான எதிர்ப்பாலும் வெற்றிகொள்ள முடியாது.

    இரு முக ருத்ராட்சம்:- இதற்கு `ஹர சவுரி' என்று பெயர். ஹோகத்தி முதலிய தோஷங்கள் விலகும்.

    மூன்று முக ருத்ராட்சம்:- இதற்கு `அக்னி ருத்ராட்சம்' என்று பெயர். இதை அணிந்தால் பருத்திப் பொதியில் நெருப்புப் பற்றினால் பொசுங்கி விடுவதுபோல, மூன்று பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்கும்.

    நான்கு முக ருத்ராட்சம்:- இதற்கு `தத்தாத்ரேயர்' என்று பெயர். இதை அணிந்தவர்களுக்கு மனிதனைக் கொன்ற பிரம்மஹத்தி நிவர்த்தியாகும்.

    ஐந்து முக ருத்ராட்சம்:- இதை `காலக்னி' என்று கூறுவர். இது ஜீரண சக்தியை உண்டாக்கும். குடிப்பழக்கம் முதலிய செய்யத் தகாத விஷயங்களால் ஏற்பட்ட பாவங்கள் விலகும்.

    ஆறு முக ருத்ராட்சம்:- இதனை `ஷண்முக ருத்ராட்சம்' என்பர். இதை அணிந்தால் கருவை அழித்த பாவம் நீங்கும்.

    ஏழு முக ருத்ராட்சம்:- `ஆனந்த ருத்ராட்சம்' என்பது இதன் பெயர். இதை அணிவர்களுக்கு ஐஸ்வர்யம் நிலைக்கும்.

    எண் முக ருத்ராட்சம்:- இதனை `விநாயகர் ருத்ராட்சம்' என்பர். பொய், களவு, சூது போன்ற பஞ்சமா பாதகங்கள் செய்த பாவம், இதனை அணிவதால் குறையும்.

    ஒன்பது முக ருத்ராட்சம்:- 'பைரவ ருத்ராட்சம்' என்று பெயர். இதையணிந்தால் சிவலோக பதவி கிட்டும்.

    பத்து முக ருத்ராட்சம்:- இதற்கு 'விஷ்ணு' என்று பெயர். இதை அணிந்தால் பல்வேறு தோஷங்கள் அகலும்.

    பதினோரு முக ருத்ராட்சம்:- `ஏகாதச ருத்ராட்சம்' என்பது இதன் பெயர். இதையணிந்தால் பல யாகங்களைச் செய்த புண்ணியம் கிடைக்கும்.

    பன்னிரண்டு முக ருத்ராட்சம்:- இதனை `அர்க்க ருத்ராட்சம்' என்பர். இதனை அணிந்தால் பல புண்ணிய நதிகளின் நீராடிய பலன் கிடைக்கும். நீராடும் தண்ணீரும் கூட இந்த ருத்ராட்சத்தால் புனிதத்துவம் பெறும்.

    பதின்மூன்று முக ருத்ராட்சம்:- `காம ருத்ராட்சம்' இதன் பெயர். இது எல்லா ஆசைகளையும் நிறைவேற்றும். நினைத்தது நினைத்தபடி சித்திக்கும்.

    பதினான்கு முக ருத்ராட்சம்:- இதற்கு `ஸ்ரீகண்ட ருத்ராட்சம்' என்று பெயர். இதை அணிபவர்கள் தங்களின் குலத்திற்கு பெருமை சேர்ப்பார்கள்.

    ×