search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராம்நாத் கோவிந்த்"

    கிரீஸ், சுரினேம் மற்றும் கியூபா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு வரும் ஜூன் 16-ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். #RamNathKovind
    புதுடெல்லி :

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கிரீஸ், சுரினேம் மற்றும் கியூபா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு வரும் ஜூன் 16-ம் தேதி அரசுமுறை சுற்றுப்பயணம்  மேற்கொள்ள உள்ளதாக ஜனாதிபதியின் செய்தித்தொடர்பாளர் அஷோக் மாலிக் இன்று தெரிவித்தார்.

    கிரீஸ் நாட்டின் பழங்கால தொல்லியல் பகுதிகள் மற்றும் காமன்வெல்த் போர் நினைவிடத்தை பார்வையிடும் அவர், அங்கு வாழும் இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்ற உள்ளார்.

    கிரீஸை தொடர்ந்து சுரினேம் நாட்டுக்கு செல்லும் ராம் நாத்கோவிந்த், அங்கு, உலக யோகா தினம் கொண்டாடப்படும் ஜீன் 21-ம் தேதி அந்நாட்டு அதிபர் தேசி பவுட்டர்ஸ் உடன் யோகா நிகழ்சிகளில் பங்கேற்க உள்ளார். 

    இறுதியாக கியூபா செல்லும் அவர், அந்நாட்டு அதிபர் மிகியேல் தியாஸ்-கேனல் பெர்முடஸ் உடன் இருநாட்டு உறவுகள் குறித்து நீண்ட பேச்சுவார்த்தை நடத்துகிறார். கியூபா புரட்சி நடைபெற்ற 1959-ம் ஆண்டுக்கு பிறகு அந்நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் ராம்நாத் கோவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது. #RamNathKovind
    திரிபுராவின் மாநில பழமாக அன்னாசி பழத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று அறிவித்துள்ளார். #RamNathKovind #StateFruitofTripura
    அகர்தலா :

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இரண்டு நாள் பயணமாக விமானப்படை சிறப்பு விமானத்தின் மூலம் இன்று காலை 11 மணியளவில் திரிபுரா மாநிலத்தில் உள்ள உதய்பூர் வந்தடைந்தார். அங்கு, சப்ரூம் - உதய்பூர் இடையே புதிதாக போடப்பட்டுள்ள இருவழி தேசிய நெடுஞ்சாலையை அவர் திறந்து வைத்தார்.

    அதைத்தொடர்ந்து, அங்குள்ள மாதா திரிபுரேஷ்வரி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த ராம்நாத் கோவிந்த், அம்மாநில தலை நகர் அகர்தலாவில் உள்ள ரபிந்தர சதபர்ஷிகி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இந்நிகழ்சியில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திரிபுரா மாநில பழமாக அன்னாசி பழத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

    திரிபுராவில் நிலவும் சிறந்த பருவ நிலைகள், வளமான மண் மற்றும் தாராளமான மழைப்பொழிவு ஆகியவை அம்மாநிலத்தில் தோட்டக்கலை துறை வளர்ச்சிக்காக மிகப்பெரிய அளவிலான வாய்ப்புகளை வழங்குகின்றன. 

    மற்ற பகுதிகளில் விளையும் அன்னாசி பழங்களை விட திரிபுராவில் விளையும் அன்னாசி பழங்களின் தரம் சிறந்தது என நாடு முழுவதும் பரவலாக கருதப்படும் நிலையில் இந்த அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #RamNathKovind #StateFruitofTripura
    பெரு நிறுவனங்கள் திவால் ஆகும் போது வராக்கடன்களை திரும்ப செலுத்த வகை செய்யும் திவால் சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். #PresidentKovind
    புதுடெல்லி:

    பெரு நிறுவனங்கள் தொழிலில் நொடிந்து திவாலாகும் போது, அதன் முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள், கடன் கொடுத்தவர்கள் ஆகியோரும் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடுகிறது. மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனமும் முற்றிலும் முடங்கும் சூழல் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்னைகளைத் தவிர்ப்பதற்காகவும், அதில் தொடர்புடையவர்களுக்கு உரிய நிதி ஆதாயங்கள் கிடைக்க வகை செய்வதற்காகவும் திவால் சட்டம் கொண்டுவரப்பட்டது. 

    ஆனால், அதில் உள்ள சில அம்சங்களை தவறாகப் பயன்படுத்தி பலர் ஆதாயமடைவது கண்டறியப்பட்டது. இதையடுத்து அதில் சில திருத்தங்களை மேற்கொண்டு திவால் அவசரச் சட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொண்டுவரப்பட்டது.

    திவாலான நிறுவனங்களுக்கு கடன் கொடுத்தவர்கள் தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயத்தை அணுக அதில் வகை செய்யப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட ஒரு நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டால், அதன் உரிமையாளர், மற்றொரு நிறுவனத்தின் வாயிலாக அதை ஏலம் எடுக்க அதில் தடை விதிக்கப்பட்டுள்ளது.



    புதிய சட்டத்தின்படி, வாராக் கடன்களை திருப்பிச் செலுத்திய பிறகே நலிவடைந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஏலத்தில் பங்கெடுக்க அனுமதிக்கப்படுவர். இத்தகைய கட்டுப்பாடுகளால் திவால் சட்டத் திருத்தத்தை எவரும் தவறாகப் பயன்படுத்த இயலாத சூழல் உருவாகியுள்ளது. 

    இந்த அவசர சட்டம் மூன்று மாதங்களில் காலாவதி ஆகிவிடும் என்பதால், கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் திவால் சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

    இந்நிலையில், இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் இது நிரந்தர சட்டமாகியுள்ளது.
    உலகின் மிக உயரமாக ராணுவ தளமான சியாச்சினுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சென்று வீரர்களிடம் கலந்துரையாடினார். #PresidentKovind #SiachenBaseCamp
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாகிஸ்தான் எல்லையோர பகுதியில் இமய மலை சிகரத்தில் சியாச்சின் உச்சி உள்ளது. உலகின் மிக உயரமான ராணுவ தளத்தை இந்தியா சியாச்சனில் அமைத்துள்ளது. குளிர்காலத்தில் மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவும் சியாச்சின் பனிச்சிகத்தை, தரை முகாமில் இருந்து இந்திய வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

    கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் அங்கு சேவையாற்றும் இந்திய ராணுவ வீரர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சந்தித்து கலந்துரையாடினார். அங்கு அமைக்கப்பட்டுள்ள நினைவு தூனுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். ஜனாதிபதியுடன் ராணுவ தளபதி பிபின் ராவத்தும் உடன் சென்றுள்ளார்.



    முதன்முறையாக 2004-ம் ஆண்டு அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது சியாச்சின் தரை முகாம் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #PresidentKovind #SiachenBaseCamp
    ×