search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அப்துல் கலாமுக்கு பின்னர் சியாச்சின் ராணுவ தளத்துக்கு சென்ற ராம்நாத் கோவிந்த்
    X

    அப்துல் கலாமுக்கு பின்னர் சியாச்சின் ராணுவ தளத்துக்கு சென்ற ராம்நாத் கோவிந்த்

    உலகின் மிக உயரமாக ராணுவ தளமான சியாச்சினுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சென்று வீரர்களிடம் கலந்துரையாடினார். #PresidentKovind #SiachenBaseCamp
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாகிஸ்தான் எல்லையோர பகுதியில் இமய மலை சிகரத்தில் சியாச்சின் உச்சி உள்ளது. உலகின் மிக உயரமான ராணுவ தளத்தை இந்தியா சியாச்சனில் அமைத்துள்ளது. குளிர்காலத்தில் மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவும் சியாச்சின் பனிச்சிகத்தை, தரை முகாமில் இருந்து இந்திய வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

    கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் அங்கு சேவையாற்றும் இந்திய ராணுவ வீரர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சந்தித்து கலந்துரையாடினார். அங்கு அமைக்கப்பட்டுள்ள நினைவு தூனுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். ஜனாதிபதியுடன் ராணுவ தளபதி பிபின் ராவத்தும் உடன் சென்றுள்ளார்.



    முதன்முறையாக 2004-ம் ஆண்டு அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது சியாச்சின் தரை முகாம் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #PresidentKovind #SiachenBaseCamp
    Next Story
    ×