என் மலர்
நீங்கள் தேடியது "ராணுவ தளம்"
- இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள் ஆய்வு செய்யப்படுகிறது.
- பாகிஸ்தான் இந்தியா மீது ஏவிய ட்ரோன் விமானங்கள் துருக்கியில் இருந்து வாங்கப்பட்டவை.
பாகிஸ்தானின் தாக்குதல்களை முறியடித்து இந்தியா பதில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் வெளியுறவுத்துறை விளக்கம் அளித்து வருகிறது.
வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரோஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகின்றனர்.
அப்போது, கர்னல் சோபியா குரோஷி கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. ராணுவத்தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள் ஆய்வு செய்யப்படுகிறது. பாகிஸ்தான் இந்தியா மீது ஏவிய ட்ரோன் விமானங்கள் துருக்கியில் இருந்து வாங்கப்பட்டவை.
இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தானின் ராணுவ தளவாடங்கள் கடுமையாக சேதமடைந்தன. சுமார் 400 ட்ரோன் விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டது.
தனது வான் எல்லையை மூடாமல் பயணிகள் விமானங்களை பறக்கவிட்டு அதனை கேடயமாக பாகிஸ்தான் பயன்படுத்துகிறது.
போர் பதற்றம் உள்ள நிலையிலும் கராச்சி, லாகூர் வான்வெளியில் பயணிகள் வமானங்களை பறக்க அனுமதித்துள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு முதற்கட்ட பதிலடி கொடுக்கப்பட்டது.
- பதிலடியாக லெபனானில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் புறநகர் பகுதி யில் இஸ்ரேல், டிரோன் தாக்குதல் நடத்தி ஹமாஸ் அமைப்பின் துணை தலைவர் ஷேக்சலே-அல்-அரூரியை கொன்றது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்துள்ளது. அதன் படி இஸ்ரேலின் மெரோன் விமான கட்டுப்பாட்டு தளம் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இது குறித்து ஹிஸ்புல்லா இயக்கம் கூறும்போது, ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு முதற்கட்ட பதிலடி கொடுக்கப்பட்டது. 62 வகை ஏவுகணைகளை வீசி மெரோன் விமான கட்டுப்பாட்டு தளம் தாக்கப்பட்டது என்று தெரிவித்தது.
இந்த தாக்குதலால் ஓடு பாதை சேதம் அடைந்தது என்றும் மெரோன் வான் கட்டுப்பாட்டு தளத்தில் இருந்து இஸ்ரேலிய விமானப்படையால் போர் விமானங்கள் இயக்க முடியவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு பதிலடியாக லெபனானில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாகிஸ்தான் எல்லையோர பகுதியில் இமய மலை சிகரத்தில் சியாச்சின் உச்சி உள்ளது. உலகின் மிக உயரமான ராணுவ தளத்தை இந்தியா சியாச்சனில் அமைத்துள்ளது. குளிர்காலத்தில் மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவும் சியாச்சின் பனிச்சிகத்தை, தரை முகாமில் இருந்து இந்திய வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர்.
கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் அங்கு சேவையாற்றும் இந்திய ராணுவ வீரர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சந்தித்து கலந்துரையாடினார். அங்கு அமைக்கப்பட்டுள்ள நினைவு தூனுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். ஜனாதிபதியுடன் ராணுவ தளபதி பிபின் ராவத்தும் உடன் சென்றுள்ளார்.

முதன்முறையாக 2004-ம் ஆண்டு அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது சியாச்சின் தரை முகாம் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #PresidentKovind #SiachenBaseCamp






