search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராண்வ வீரர் கைது"

    தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வந்த புகாரின் பேரில் போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். #pocsoact
    தூத்துக்குடி:

    நெல்லை மாவட்டம் முக்கூடலை சேர்ந்த ஒரு தொழிலாளிக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் 13 வயதில் ஒரு பெண் உள்ளனர். இந்த சிறுமி நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். தொழிலாளியின் மனைவி மற்றும் அவரது மகன் இருவரும் தூத்துக்குடியில் தங்கி இருந்து அங்குள்ள ஒரு எலக்ட்ரிக் கடையில் வேலை பார்த்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று சிறுமி விடுமுறையில் தாயை பார்ப்பதற்காக வந்துள்ளார். இதையடுத்து அவரது தாய், சிறுமியை அழைத்து கொண்டு வேலை பார்க்கும் கடைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடைக்கு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பாப்பனாபுரத்தை சேர்ந்த விக்டர் ராஜா (49) என்பவர் வந்துள்ளார். அப்போது அங்கு நின்ற சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனை பற்றி அவர் தாயிடம் கூறியுள்ளார்.

    இது குறித்து மத்தியபாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்டர்ராஜாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விக்டர்ராஜா ஓய்வு பெற்ற ராணுவவீரர் என்பது குறிப்பிடத்தக்கது. #pocsoact
    ×