என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மோகன் பகவத்
நீங்கள் தேடியது "மோகன் பகவத்"
குறிப்பிட்ட ஒரு கட்சிக்காக பணியாற்ற ஆர்எஸ்எஸ் என்றும் தொண்டர்களை கேட்டுக்கொண்டது இல்லை என அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் இன்று பேசியுள்ளார். #RSSVision #MohanBhagwat
புதுடெல்லி:
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் எதிர்கால இந்தியா என்ற 3 நாள் கருத்தரங்கம் டெல்லியில் நேற்று தொடங்கியது. இந்த கருத்தரங்கில் மத்திய மந்திரிகள், பாலிவுட் பிரபலங்கள் உள்பட பல துறைகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் இன்று பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “ஒரு குறிப்பிட்ட கட்சிக்காக பணியாற்றுவதற்காக தொண்டர்களை நாங்கள் ஒருபோதும் கேட்கவில்லை. தேசிய ஆர்வத்தில் பணியாற்றி வருபவர்களுடன் இணைந்து பணியாற்றுமாறு அவர்களிடம் கூறி வருகிறோம். ஆர்.எஸ்.எஸ் அரசியலில் இருந்து விலகியே இருக்கிறது. ஆனால், தேசிய நலன்களைப் பற்றிய கருத்துக்களைக் கொண்டுள்ளோம்” என கூறினார்.
நேற்று மோகன் பகவத் பேசும் போது காங்கிரஸ் கட்சியை வெகுவாக புகழ்ந்திருந்தார். “காங்கிரஸ் கட்சி தன்னலம் பார்க்காத பல தலைவர்களை நாட்டுக்கு தந்துள்ளது” என அவர் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸின் வடிவத்தில் ஒரு பெரிய சுதந்திர இயக்கம் நாட்டில் வளர்ந்தது. அந்த இயக்கம் பல தலைசிறந்த ஆளுமைகளை பெற்றெடுத்தது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று பேசினார். #RSSVision #MohanBhagwat
புதுடெல்லி:
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் எதிர்கால இந்தியா என்ற 3 நாள் கருத்தரங்கம் டெல்லியில் இன்று தொடங்கியது. இந்த கருத்தரங்கில் மத்திய மந்திரிகள், பாலிவுட் பிரபலங்கள் உள்பட பல துறைகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், காங்கிஸ் கட்சியை புகழ்ந்து பேசினார். “காங்கிரஸின் வடிவத்தில் ஒரு பெரிய சுதந்திர இயக்கம் நாட்டில் வளர்ந்தது. அந்த இயக்கம் எல்லாவற்றையும் தியாகம் செய்யக் கூடிய பல தலைசிறந்த ஆளுமைகளை பெற்றெடுத்தது. அவர்கள் நம்மை இன்றும் ஊக்குவித்து வருகின்றனர். அந்த இயக்கமானது சாதாரண மக்களை சுதந்திர போராட்டத்தில் இணைப்பதற்கு ஊக்குவித்தது. சுதந்திரம் அடைந்ததில் காங்கிரஸுக்கு பெரிய பங்கு உண்டு” என கூறினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், மோகன் பகவத் காங்கிரஸை புகழ்ந்துள்ளது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
நாட்டின் பன்முகத்தன்மையை கொண்டாடுவோம், ஒரு சிலரை ஒதுக்கிவிட்டு பன்முகத்தன்மையை கொண்டாட முடியாது என ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பேசினார். #RSS #PranabMukherjee
மும்பை:
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கான உபச்சார விழா இன்று நடக்கிறது. இதற்கான அழைப்பு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பப்பட்டபோதே சர்ச்சை வெடித்தது. அவர் நிகழ்ச்சியில் பங்கேற்பது உறுதியானதும் ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் தங்களது அதிருப்தியை அவருக்கு கடிதமாக எழுதியிருந்தனர்.
இந்நிலையில், சர்ச்சைகள் மற்றும் சலசலப்புகளுக்கு மத்தியில் அவர் இன்று நாக்பூர் வந்தடைந்தார். ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அவர், அங்கிருந்த குறிப்பேட்டில் “பாரத மாதாவின் சிறந்த மகனுக்கு அஞ்சலி செலுத்த இங்கே வந்துள்ளேன்” என எழுதி கையெழுத்திட்டார்.
பின்னர், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவரான மோகன் பகவத் உடன் அவர் சிறிது நேரம் பேசினார். இதனை அடுத்து, உபச்சார விழாவில் அவர் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில்:-
சகிப்புத்தன்மை இல்லாமல் இருப்பது தேசியவாதத்தை சீர்குலைப்பதாக உள்ளது. தேசியவாதமும், தேசபக்தியும் ஒன்றோடொன்று பின்னப்பட்டவையாகும். நாட்டின் பன்முகத்தன்மையை நாம் கொண்டாட வேண்டும். ஒரு சிலரை தனிமைப்படுத்திவிட்டு நாம் பன்முகத்தன்மையை பார்க்க முடியாது
என குறிப்பிட்டார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X