search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேயர் சரவணன்"

    • ம.தி.மு.க. சார்பில் கவர்னருக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் மேயர் சரவணன் கலந்துகொண்டு முதல் கையெழுத்திட்டார்.

    நெல்லை:

    இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருவதாக கூறி அவரை அப்பொறுப்பில் இருந்து உடனடியாக அகற்ற குடியரசு தலைவரை வலியுறுத்தி நெல்லை டவுன் காந்தி சிலை முன்பு இன்று நெல்லை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் கவர்னருக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதற்கு ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் நிஜாம் ஆகியோர் தலைமை தாங்கினர். நிகழ்ச்சியில் மேயர் சரவணன் கலந்துகொண்டு முதல் கையெழுத்தை போட்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன், ஐ.யூ.எம்.எல். நெல்லை மாவட்ட செயலாளர் பாட்டபத்து முகமது அலி, ம.தி.மு.க. நிர்வாகிகள் மணப்படை மணி, கல்லத்தியான், கோல்டன் கான் மற்றும் அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். இதில் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பொது மக்களிடம் கையெழுத்து பெற்றனர். முன்னதாக காந்தி சிலைக்கு மேயர் சரவணன் மற்றும் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் நிஜாம் மாலை அணிவித்தனர்.

    • மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • 4 ரத வீதிகளை அழகுப்படுத்தும் விதமாக ரூ. 14.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியதாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மேயர் சரவணன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

    மின் விளக்குகள்

    டவுன் பாட்டப்பத்து ஜும்மா பள்ளிவாசல் தலைவர் நெல்லை அபுபக்கர் அளித்த மனுவில், டவுன் பாட்டபத்து ஜும்மா பள்ளிவாசலுக்கு சொந்தமான மைய வாடி பகுதியில் புதிய சாலை மற்றும் சுற்றுச்சுவர் அழைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் மின்விளக்குகள் பொருத்தப்படாததால் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே அங்கு புதிய மின்கம்பங்கள் அமைத்து மின் விளக்குகள் எரிய விட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    வி.எம்.சத்திரம் சீனி வாசன் நகர் ஏ காலனியை சேர்ந்த கந்தசாமி என்பவர் அளித்த மனுவில், சீனிவாசகம் நகர் ஏ காலனி 4-வது தெருவில் குறிப்பிட்ட சில வீடுகளில் மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுவதால் எங்களை போன்றவருக்கு குடிநீர் கிடைக்கவில்லை.

    எனவே அந்த பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சுவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி யிருந்தனர்.

    மாவீரன் சுந்தரலிங் கனார் மக்கள் இயக்கம் நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன், இந்து மக்கள் கட்சி உடையார், சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ள 4 ரத வீதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை அழகுப்படுத்தும் விதமாக கடந்த 2019-ம் ஆண்டு ரூ. 14.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அறிக்கை யில் 4 ரத வீதிகளிலும் ரூ.65 லட்சம் வரையிலும் பணிகள் நடைபெற்றுள்ளதாகவும், அந்த தொகை ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    பணிகள் நடைபெறாத பட்சத்தில் இவ்வளவு தொகை எவ்வாறு வழங்கப்பட்டது என்பது குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இந்த கூட்டத்தில் செயற்பொறியாளர் வாசுதேவன், மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, உதவி கமிஷனர்கள் லெனின், வெங்கட்ராமன் ஜஹாங்கீர் பாஷா, காளிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு

    தொடர்ந்து மேயர் சரவணன் செய்தியா ளர்களிடம் கூறுகையில், நெல்லை மாநகரில் கோடை காலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மாநகராட்சிக்கு தண்ணீர் தரும் உறை கிணறுகளை மணல் மூடைகள் அடுக்கி தண்ணீர் சேமித்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

    • வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
    • சந்திப்பு பஸ்நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

    சீரான குடிநீர்

    துணைமேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாளை தியாகராஜநகர் 55-வது வார்டு பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்களது வார்டுக்குட்பட்ட 5-வது தெற்கு தெருவில் குடிநீர் வழங்கக்கோரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மனு கொடுத்தோம். இதனைத்தொடர்ந்து 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் இதுவரை தண்ணீர் வழங்கப்பட வில்லை. எனவே சீரான குடிநீர் வழங்க நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    பஸ்நிலையம்

    மனித நேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் நிஜாம், பொருளாளர் வக்கீல் மன்சூல்அலி, நிர்வாகிகள் மூசா, பேசர்அலி, முருகேசன், சம்சூதீன் உள்ளிட்டோர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் நெல்லை சந்திப்பு பஸ்நிலைய பகுதிகள் இன்னும் முடிவடையாதது ஏன்? எதற்காக காலம் தாழ்த்தப்படுகிறது.

    பொதுமக்கள் பயணிகளின் நலன் கருதி உடனடியாக சந்திப்பு பஸ்நிலையத்தை திறக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. முன்னதாக அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சந்திப்பு பஸ் நிலையத்தை திறக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள்.

    சந்திப்பு பஸ் நிலையத்தை திறக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள்.


     


    ×