search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு- குறைதீர்க்கும் கூட்டத்தில் மேயர் சரவணன் தகவல்
    X

    மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் மற்றும் பொதுமக்கள், மேயர் சரவணனிடம் மனு அளித்த காட்சி.

    நெல்லையில் கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு- குறைதீர்க்கும் கூட்டத்தில் மேயர் சரவணன் தகவல்

    • மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • 4 ரத வீதிகளை அழகுப்படுத்தும் விதமாக ரூ. 14.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியதாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மேயர் சரவணன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

    மின் விளக்குகள்

    டவுன் பாட்டப்பத்து ஜும்மா பள்ளிவாசல் தலைவர் நெல்லை அபுபக்கர் அளித்த மனுவில், டவுன் பாட்டபத்து ஜும்மா பள்ளிவாசலுக்கு சொந்தமான மைய வாடி பகுதியில் புதிய சாலை மற்றும் சுற்றுச்சுவர் அழைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் மின்விளக்குகள் பொருத்தப்படாததால் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே அங்கு புதிய மின்கம்பங்கள் அமைத்து மின் விளக்குகள் எரிய விட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    வி.எம்.சத்திரம் சீனி வாசன் நகர் ஏ காலனியை சேர்ந்த கந்தசாமி என்பவர் அளித்த மனுவில், சீனிவாசகம் நகர் ஏ காலனி 4-வது தெருவில் குறிப்பிட்ட சில வீடுகளில் மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுவதால் எங்களை போன்றவருக்கு குடிநீர் கிடைக்கவில்லை.

    எனவே அந்த பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சுவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி யிருந்தனர்.

    மாவீரன் சுந்தரலிங் கனார் மக்கள் இயக்கம் நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன், இந்து மக்கள் கட்சி உடையார், சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ள 4 ரத வீதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை அழகுப்படுத்தும் விதமாக கடந்த 2019-ம் ஆண்டு ரூ. 14.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அறிக்கை யில் 4 ரத வீதிகளிலும் ரூ.65 லட்சம் வரையிலும் பணிகள் நடைபெற்றுள்ளதாகவும், அந்த தொகை ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    பணிகள் நடைபெறாத பட்சத்தில் இவ்வளவு தொகை எவ்வாறு வழங்கப்பட்டது என்பது குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இந்த கூட்டத்தில் செயற்பொறியாளர் வாசுதேவன், மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, உதவி கமிஷனர்கள் லெனின், வெங்கட்ராமன் ஜஹாங்கீர் பாஷா, காளிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு

    தொடர்ந்து மேயர் சரவணன் செய்தியா ளர்களிடம் கூறுகையில், நெல்லை மாநகரில் கோடை காலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மாநகராட்சிக்கு தண்ணீர் தரும் உறை கிணறுகளை மணல் மூடைகள் அடுக்கி தண்ணீர் சேமித்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

    Next Story
    ×