search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெகா தடுப்பூசி முகாம்"

    • கிராமம் கிராமமாக சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது
    • முழு ஒத்துழைப்பு அளிக்க கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள்

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப் படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இருப்பினும் பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து கொரோனா தடுப்பூசியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பலரும் குறிப்பிட்ட நாட்கள் கழிந்த பிறகும் இரண்டாவது தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். மேலும் பூஸ்டர் தடுப்பூசியும் பலரும் செலுத்தாமல் இருந்ததையடுத்து அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்தாமல் ஒரு சிலர் இருந்து வருகிறார்கள். அவர்களை கணக்கெடுத்து அவர்களை தடுப்பூசி செலுத்த குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் நடவ டிக்கை மேற்கொண்டு உள்ளனர். இதையடுத்து இன்று ெமகா தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவ தும் நடந்தது.

    அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங் களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. மாவட்ட முழுவதும் இன்று ஒரே நாளில் 2,130 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது. நாகர்கோவிலில் வடிவீஸ்வரம், வடசேரி ஆரம்ப சுகாதார நிலையங் களில் தடுப்பூசி செலுத் தப்பட்டது.

    மேலும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளான வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம், ெரயில் நிலைய பகுதிகளில் சென்று சுகாதாரத் துறையினர் பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தினார்கள். வேப்பமூடு பூங்காவிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. பூங்காவிற்கு வந்த பொதுமக்கள் யாராவது தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் அவர்களை கண்டறிந்து தடுப்பூசி போடும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டனர்.

    பஸ்சில் பயணம் செய்த பொதுமக்கள் சிலருக்கும் சுகாதாரத்துறையினர் பஸ்சில் ஏறி தடுப்பூசி செலுத்தினர். கன்னியா குமரியில் காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம் பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    சின்னமுட்டம், கோவளம், வள்ளவிளை, தூத்தூர், குளச்சல் போன்ற மீனவ கிராமங்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கிராமப்புறங்களில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்த விவரங்களை கண்டறிந்து உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் தடுப்பூசி செலுத் தப்பட்டது.

    காலை தொடங்கிய மெகா தடுப்பூசி முகாமில் மதியம் 11 மணி வரை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. தடுப்பூசி செலுத்தாத பொதுமக்கள் அனைவரும் உடனடியாக பக்கத்தில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு சென்று தடுப்பூசியை செலுத்தி 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாவட்டம் குமரி மாவட்டம் என்பதை உறுதி செய்யும் வகையில் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணை செலுத்தாமல் விடுபட்ட நபர்களுக்கு இன்று தமிழகம் முழுவதும் 1 லட்சம் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது.
    • திண்டுக்கல்லில் நடத்தப்பட்ட முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று 3ம் அலைக்குப் பிறகு குறைந்து வந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக மீண்டும் அதிகரித்து, தற்போது நாளொன்றுக்கு 2500-க்கும் அதிகமானோர் பாதிக்கப்ப டுகின்றனர். மேலும் திண்டுக்கல் மாவட்டத்திலும் கடந்த ஒருவாரமாக தொற்று அதிகரித்து வருகிறது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது வரை 3 லட்சம் நபர்கள் 2-ம் தவணை செலு த்துவதற்குரிய தவணை தேதி கடந்த பின்னும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். இதில் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட 16,000 சிறார்கள் மற்றும் 12 முதல் 14 வயதிற்குட்பட்ட 15,000 சிறார்கள் 2ம் தவணை தடுப்பூசி செலுத்தி க்கொள்ளாமல் உள்ளனர்.

    மேலும் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட 16,000 சிறார்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி க்கொள்ளாமல் உள்ளனர். மேலும் மாவட்டம் முழு வதும் 2.5 லட்சம் நபர்கள் முன்னெச்சரிக்கை செலுத்து வதற்கான தவணை தேதி கடந்தும் செலுத்தி க்கொள்ளாமல் உள்ளனர்.

    கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணை செலுத்தாமல் விடுபட்ட நபர்களுக்கு இன்று தமிழகம் முழுவதும் 1 லட்சம் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் 3,000-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதாலும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதாலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

    2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே தடுப்பூசி முகாம்களை பயன்படுத்திகொள்ள வேண்டும். மேலும் பொதுஇடங்களுக்கு வரும் போது முககவசம் அணிந்தும், சமூகஇைடவெளியை பின்பற்றவும் டாக்டர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    • கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து, தற்போது நாளொன்றுக்கு 2500-க்கும் அதிகமானோர் பாதிக்கப்ப டுகின்றனர்.
    • திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை 3,000-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றானது ஜனவரி மாதம் ஏற்பட்ட 3ம் அலைக்குப் பிறகு குறைந்து வந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக மீண்டும் அதிகரித்து, தற்போது நாளொன்றுக்கு 2500-க்கும் அதிகமானோர் பாதிக்கப்ப டுகின்றனர். மேலும் திண்டுக்கல் மாவட்டத்திலும் கடந்த ஒருவாரமாக தொற்று அதிகரித்து தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 15 நபர்களுக்கு தொற்று ஏற்படுகிறது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 12 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதல் தவணைதடுப்பூசி 19,17,602 நபர்களுக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 17,53,133 நபர்க ளுக்கும் செலுத்தப்பட்டு ள்ளது. இத்துடன் 35,520 நபர்களுக்கு முன்னெச்ச ரிக்கை தவணை செலுத்த ப்பட்டுள்ளது.

    எனினும், திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது வரை 3 லட்சம் நபர்கள் இரண்டாம் தவணை செலு த்துவதற்குரிய தவணை தேதி கடந்த பின்னும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். இதில் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட 16,000 சிறார்கள் மற்றும் 12 முதல் 14 வயதிற்குட்பட்ட 15,000 சிறார்கள் 2ம் தவணை தடுப்பூசி செலுத்தி க்கொள்ளாமல் உள்ளனர். மேலும் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட 16,000 சிறார்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி க்கொள்ளாமல் உள்ளனர். மேலும் மாவட்டம் முழு வதும் 2.5 லட்சம் நபர்கள் முன்னெச்சரிக்கை செலுத்து வதற்கான தவணை தேதி கடந்தும் செலுத்தி க்கொள்ளாமல் உள்ளனர்.

    கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணை செலுத்தாமல் விடுபட்ட நபர்களுக்கு நாளை (10-ந் தேதி) தமிழகம் முழுவதும் 1 லட்சம் மெகா தடுப்பூசி முகாம்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடத்தப்படவுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை 3,000-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இம்முகாமினை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தங்களது தவணைக்குரிய தடுப்பூசி செலுத்தி க்கொண்டு நோய்த்தொ ற்றின் கடுமையான பாதிப்பு களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

    • கடந்த மே மாதம் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
    • இந்த முகாமில் 17 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    சென்னை:

    இந்தியாவில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி தொடங்கியது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்குமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துவதற்காக வாரம் தோறும் சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது. மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டது.

    கடந்த ஏப்ரல் மாதம் வரை 28 சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இந்த நிலையில் கடந்த மே மாதம் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் 17 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக கடந்த 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 3-வது முறையாக கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த சிறப்பு முகாமின் போது பூஸ்டர் தவணை தடுப்பூசிக்கு முக்கியத்துவம் அளிக்க அவர் அறிவுறுத்தி உள்ளார்.

    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 920575 முதல் தவணையும், 736058 இரண்டாவது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
    • கொரோணா நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    காஞ்சிபுரம்:

    இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 920575 முதல் தவணையும், 736058 இரண்டாவது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் புதிய வகை கொரோனா வைரஸால் BA4, BA5 strain மூலம் மக்களுக்கு கொரோணா காய்ச்சல் வர வாய்ப்புள்ளதால் தமிழக முதல்வரின் ஆணையின்படி, இன்று 12 ம் தேதி சிறப்பு மாபெரும் ஒருநாள் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.

    இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 2118 நடமாடும் முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

    பொதுமக்கள் அனைவரும் இந்த முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோணா நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவி வருவதால் தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
    • திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை மறுநாள் 3000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

    திண்டுக்கல் :

    திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூன் 7-ந் தேதி வரை 15 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதல் தவணை தடுப்பூசி 18,46,332 நபர்களுக்கும், 2வது தவணை தடுப்பூசி 16,56,325 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இத்துடன் 29,544 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை செலுத்தப்பட்டுள்ளது.

    மேலும் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறார்களில் இதுவரை 81,712 சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி மற்றும் 64,300 சிறார்களுக்கு 2ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறார்களில் இதுவரை 62,542 சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி மற்றும் 41,037 சிறார்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    எனினும் திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது வரை 3 லட்சம் நபர்கள் 2ம் தவணை செலுத்துவதற்குரிய தவணை தேதி கடந்த பின்னும் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். இதில் 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட 17,000 சிறார்கள் மற்றும் 12 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட 21,000 சிறார்கள் 2ம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர்.

    மேலும் 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட 18,000 சிறார்கள் மற்றும் 12 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட 1000 சிறார்கள் முதல் தவணை செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர்.

    கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் 2ம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் விடுபட்ட நபர்களுக்காக நாளை மறு நாள் (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் மெகா தடுப்பூசி முகாம்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடத்தப்படவுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை மறு நாள் 3,000-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

    இம்முகாமினை பயன்படுத்தி பொது–மக்கள் அனைவரும் தவறாமல் தங்களது தவணைக்குரிய தடுப்பூசி செலுத்திக்கொண்டு நோய்த்தொற்றின் கடுமை–யான பாதிப்புகளில் இருந்து தங்களை பாது–காத்துக்கொள்ள வேண்டும் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

    • முகாம்களில் 25,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு மெகா தடுப்பூசி முகாம்” நடைபெற உள்ளது.
    • மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நடக்க முடியாத நபர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெ க்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் வருகிற 12-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையம் ஆகியவை சேர்த்து சிறப்பு முகாம்களில் 25,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு மெகா தடுப்பூசி முகாம்" நடைபெற உள்ளது.

    மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நடக்க முடியாத நபர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    மேலும், விடுப்பட்டு போன முன்களப் பணியா ளர்கள், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் இரண்டாவது தடுப்பூசி தவணை செலுத்திக் கொள்ளவுள்ள நபர்கள் தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள்.

    செப்டம்பர் 2021-க்கு முன் இரண்டாவது தடுப்பூசி செலுத்திக் கொண்ட 60 வயதிற்கு மேற்பட்டு உள்ள அனைவருக்கும், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் ஆகியோர் அனைவரும் தவறாது பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×