search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெகா தடுப்பூசி முகாம்"

    • 1400 இடங்களில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் காலை 7 மணி முதல் இரவு 7மணி வரை தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    • பூஸ்டர் தடுப்பூசி 15,862 பேருக்கு செலுத்தப்பட்டது. நேற்று நடந்த முகாமில் 19,237 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    கடந்த மூன்று வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.நேற்று மாவட்டம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது . 1400 இடங்களில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் காலை 7 மணி முதல் இரவு 7மணி வரை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    இதில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு அதிகமானோர் வந்திருந்தனர். முதல் டோஸ் தடுப்பூசியை 887 பேரும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 2488 பேரும் செலுத்தி இருந்தனர். பூஸ்டர் தடுப்பூசி 15,862 பேருக்கு செலுத்தப்பட்டது. நேற்று நடந்த முகாமில் 19,237 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

    குமரி மாவட்டத்தை பொருத்தமட்டில் இன்னும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் ஏராளமானோர் உள்ளனர். அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் இரண்டாவதுடோஸ் தடுப்பூசி செலுத்தாமலும் முதல் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் குறிப்பிட்ட நாட்கள் கடந்த பிறகும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக பக்கத்தில் உள்ள மையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • வருகிற 30-ந்தேதி மட்டுமே 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான பூஸ்டர் தடுப்பூசிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய நல மையங்களில் இலவசமாக செலுத்தப்படும்.
    • தமிழகத்தில் இதுவரை 5.37 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக கொரோனா தடுப்பூசி போடுவதற்காக மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    தமிழகத்திக் இதுவரை 36 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 50 ஆயிரம் இடங்களில் 37-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்று வருகிறது.

    சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. இந்த சிறப்பு முகாம்களில் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு இரண்டாம் தவணை செலுத்த உள்ளவர்களும், 2 தவணை முடிந்து முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் அறிவிப்பின்படி வருகிற 30-ந்தேதி மட்டுமே 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான பூஸ்டர் தடுப்பூசிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய நல மையங்களில் இலவசமாக செலுத்தப்படும்.

    அதன்படி தற்போது 12 நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தகுதியுடைய அனைவரும், முகாமில் கலந்து கொண்டு பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    இந்நிலையில், இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்தார்.

    தமிழகத்தில் ஒவ்வொரு வாரமும் தொடர்ச்சியாக தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை 5.37 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 30-ம் தேதியுடன் மெகா தடுப்பூசி முகாம் நிறைவுப் பெறுகிறது. அக்டோபர் மாதம் முதல் தடுப்பூசி செலுத்துவதில் சிறிய மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, அக்டோர் முதல் தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் 2000 சிறப்பு முகாம்கள் நாளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள், தங்கள் அருகில் உள்ள மையங்களுக்கு சென்று செலுத்தி கொள்ளுமாறு மாநகராட்சி சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து தீவிரப்பட்டு வருகிறது. 12 வயது முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரை பல்வேறு பிரிவுகளாக பிரித்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

    இதுவரையில் 35 மெகா சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சிறப்பு முகாம்கள் மூலம் 5 கோடியே 22 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    36-வது மெகா சிறப்பு முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 50 ஆயிரம் மெகா தடுப்பூசி முகாம்கள் நடக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற முகாம்கள் மூலம் 12.28 லட்சம் பேர் பயன்அடைந்தனர்.

    நாளை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.

    இந்த முகாம்களை இதுவரை தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.

    அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்படும் முகாம்களில் எல்லா தடுப்பூசிகளும் போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    முன் எச்சரிக்கை என்னும் பூஸ்டர் தடுப்பூசி போட பொதுமக்களிடம் அதிக ஆர்வம் இல்லை. இந்த தடுப்பூசி வருகிற 30-ந்தேதி வரை இலவசமாக போடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் பின்னர் தொடருமா? இல்லையா? என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. மத்திய அரசு அறிவித்துள்ள இந்த கால அவகாசத்திற்குள் பொதுமக்கள் பூஸ்டர் தடுப்பூசியை கட்டணம் இல்லாமல் போட்டுக்கொள்ளலாம்.

    சென்னையில் 2000 சிறப்பு முகாம்கள் நாளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள், தங்கள் அருகில் உள்ள மையங்களுக்கு சென்று செலுத்தி கொள்ளுமாறு மாநகராட்சி சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    • செப்டம்பர் 30-ந் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும்.
    • செப்டம்பர் மாதத்தில் ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம் நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

    திருப்பூர் :

    தமிழகத்தில் கடந்த 21ந் தேதி 34ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. செப்டம்பர் 30-ந் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய செப்டம்பர் மாதத்தில் ஒவ்வொரு வாரமும் ஒரு மெகா முகாம் வீதம் 4 முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் கிடங்கில் கைவசம் உள்ள தடுப்பூசி குறித்து துணை இயக்குனர்களிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

    சுகாதாரத்துறையினர் கூறுகையில், மாவட்டத்துக்கு தலா ஒரு லட்சம் முதல் 3 லட்சம் வீதம் 60 லட்சத்துக்கு அதிகமான தடுப்பூசி தமிழகம் முழுவதும் கையிருப்பில் உள்ளது. கடந்தாண்டில் தடுப்பூசி செலுத்தாமல் நடப்பாண்டு துவக்கத்தில் தடுப்பூசி செலுத்தியிருந்தால் கூட இந்நேரம் பெரும்பாலானோர் பூஸ்டர் செலுத்தியிருக்க முடியும்.ஆனால் காலக்கெடு வந்த பின்பும் குறுஞ்செய்தி கிடைத்த பின்பும் பலர் பூஸ்டர் செலுத்தாமல் உள்ளதால் அதனால் மாதம் இரு மெகா முகாம் என்பது மாற்றப்பட்டு செப்டம்பரில் நான்கு முகாம் நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது என்றனர்.

    • பூஸ்டர் தடுப்பூசி செலுத்த குவிந்த பொதுமக்கள்
    • இரவு 7 மணி வரை இந்த முகாம் நடைபெறும்.

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    18 வயதிற்கு மேற்பட்ட வர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருந் தால் 6 மாதம் கழிந்ததும் 3-வது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் ஏராளமானோர் தடுப்பூசி செலுத்தி வருகி றார்கள். ஆனால் பலர் குறிப்பிட்ட நாட்கள் கழிந்த பிறகும்பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.

    தடுப்பூசி செலுத்தா தவர்கள் உடனடியாக பக்கத்தில் உள்ள மையங்க ளுக்கு சென்று தடுப்பூசி எடுத்துக்கொள்ள வசதியாக மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப் பட்டு வருகிறது. இன்று மாவட்டம் முழுவதும் 36-வது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.

    நாகர்கோவிலில் வடி வீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையம், தொல்லவிளை ஆரம்ப சுகாதார நிலையம், வடசேரி ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காலை 7 மணி முதலே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த மையங்களில். கூட்டம் குறைவாக இருந்தது. இதனால் தடுப்பூசி செலுத்த வந்தவர்களுக்கு உட னுக்குடன் தடுப்பூசி செலுத் தப்பட்டது.

    அண்ணா பஸ் நிலை யத்தில் சுகாதார பணியா ளர்கள் தடுப்புச் செலுத்தும் பணியை மேற்கொண்டனர். பஸ்களில் பயணம் செய்தவர்களும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய் யப்பட்டது.

    வடசேரி பஸ் நிலையம், வடசேரி சந்தை, வேப்பமூடு பூங்கா பகுதிகளிலும் தடுப்பூசி போடும் பணி நடந்தது. அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையம், கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரி, குளச்சல் அரசு ஆஸ்பத்திரி, குழித்துறை அரசு ஆஸ்பத்திரி உள்பட அனைத்து அரசு ஆஸ்பத்தி ரிகளிலும் தடுப்பூசி போடப்பட்டது. மாவட்டம் முழுவதும் 2200 இடங்களில் தடுப்பூசி போடும் பணி இன்று நடந்தது.

    கிராமப்புறங்களில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்த விவரங்களை உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலமாக கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த ெமகா தடுப்பூசி முகாமில் மதியம் 1 மணி வரை சுமார் 18,000-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி இருந்த னர்.

    தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது இரவு 7 மணி வரை இந்த முகாம் நடைபெறும். 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கழித்து இருந்தால் உடனடியாக தடுப்பூசி முகாமிற்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

    இனிவரும் காலங்களில் கட்டணம் செலுத்தியே தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியும் என்று கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார்.

    • காலையில் இருந்து மதியம் வரை ஒரு இடத்திலேயேயும், மதியத்திற்கு பிறகு மற்றொரு இடத்திற்கும் இடம் பெயர்ந்து சென்று தடுப்பூசி செலுத்துகின்றனர்.
    • வீதி வீதியாக நகர்ந்து சென்றும் இதுவரையில் போடாதவர்களின் பெயர் விவரங்களை கொண்டு வீடு வீடாக சென்று அழைத்தும் தடுப்பூசி செலுத்துகின்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி பேரூதவியாக இருந்தது.

    சிறுவர் முதல் முதியவர்கள் வரை தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

    அரசின் தடுப்பு நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது. ஆனாலும் தொடர்ந்து மாதம் ஒருமுறை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பரவலை தடுக்க இதுவரையில் தடுப்பூசி போடாமல் இருந்து வருபவர்களையும் 2-வது மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போடாதவர்களையும் போடச்சொல்லி சுகாதாரத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 38-வது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. நிலையான மையங்களில் மட்டுமின்றி வீதி வீதியாக இடம் பெயர்ந்து சென்றும் தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள்.

    காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடக்கிறது.

    சென்னையில் 2 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் நடக்கின்றன. மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் இதுவரையில் முதல் தவணை தடுப்பூசி 99 சதவீதம் பேருக்கு போடப்பட்டு உள்ளது. 2-வது தவணை தடுப்பூசி 89 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளது.

    மாநகராட்சி மற்றும் சுகாதார பணியாளர்கள் 5 ஆயிரம் பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து வயது பிரிவினருக்கும் உள்ள தடுப்பூசிகள் முகாம்களில் செலுத்தப்பட்டன.

    காலையில் இருந்து மதியம் வரை ஒரு இடத்திலேயேயும், மதியத்திற்கு பிறகு மற்றொரு இடத்திற்கும் இடம் பெயர்ந்து சென்று தடுப்பூசி செலுத்துகின்றனர்.

    வீதி வீதியாக நகர்ந்து சென்றும் இதுவரையில் போடாதவர்களின் பெயர் விவரங்களை கொண்டு வீடு வீடாக சென்று அழைத்தும் தடுப்பூசி செலுத்துகின்றனர்.

    ஆனாலும் பூஸ்டர் தடுப்பூசி போடாத பெரும்பாலானவர்கள் ஆர்வம் காட்டவில்லை. கொரோனா தொற்று வைரஸ் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

    முற்றிலும் ஒழிக்கப்படவில்லை. ஆனால் மக்கள் தடுப்பூசி செலுத்துவதில் சுணக்கம் காட்டுவதாக சுகாதார பணியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். வீடு வீடாக சென்று அழைத்தாலும் தடுப்பூசி போட முன் வராததால் சோர்வடைந்தனர்.

    • திருவள்ளூர் மாவட்டத்தில் 800 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
    • 3200 பணியாளர்கள் மூலம் 80 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர்:

    கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க கொரோனோ தடுப்பூசி செலுத்துவதை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 33-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.

    காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 1859 இடங்களில் கொரோனோ தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் 800 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 3200 பணியாளர்கள் மூலம் 80 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. திருவள்ளூர் நகராட்சியில் மட்டும் 12 தடுப்பு முகாமில் 57 பேர் களப்பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    திருவள்ளுர் மாவட்டத்தில் இதுவரை நடந்த 32 கொரோனா தடுப்பூசி முகாம்களில் மொத்தமாக 16லட்சத்து 99 ஆயிரத்து 904 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 1,059 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தடுப்பூசி முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பரிந்துரைக்கப்பட்ட 15 முதல் 18 வயதுடைய குழந்தைகளும் மற்றும் இதுவரை போடாத முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு முன்எச்சரிக்கை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டு தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்.

    18 முதல் 59 வயதினருக்கு செப்டம்பர் 30-ந்தேதி வரை இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்று கூறி உள்ளார்.

    • ஆர்வமாக வந்து தடுப்பூசி செலுத்திய பொதுமக்கள்
    • இளைஞர்கள், இளம்பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கொேரானா பாதிப்பு அதிக மாக இருந்தது.

    கடந்த இரண்டு வாரங் களாக பாதிப்பு குறைந் துள்ளது. இருப்பினும் சுகாதாரத் துறை அதிகா ரிகள் மாவட்டம் முழுவ தும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். நேற்று மாவட்டம் முழுவதும் 625 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 26 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 17 பேர் ஆண்கள், 9 பேர் பெண்கள் ஆவார்கள்.

    கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை 21 ஆயிரத்து 646 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும்பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போடாதவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் 2-வது தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதும், முதல் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் குறிப்பிட்ட நாட்கள் கழிந்த பிறகும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வசதியாக ெமகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று குமரி மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. மாவட்டம் முழுவதும் 1780 இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

    அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலை யங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். நாகர்கோவிலில் வடிவீஸ் வரம் ஆரம்ப சுகாதார நிலையம் தொல்லவிளை ஆரம்ப சுகாதார நிலையம், வடசேரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    மேலும் மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்களிலும் தடுப்பூசி போடும் பணி நடந்தது. அண்ணா பஸ் நிலையம் மற்றும் வடசேரி பஸ் நிலையம், வேப்பமூடு பூங்கா பகுதிகளிலும் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளிலும் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து தடுப்பூசி செலுத்தினார்கள்.

    அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையம், கன்னி யாகுமரி அரசு ஆஸ்பத்திரி, குழித்துறை அரசு ஆஸ்பத்திரி, குளச்சல் அரசு ஆஸ்பத்திரி, தக்கலை அரசு ஆஸ்பத்திரிகளிலும் தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி செலுத்துவதற்கு கூட்டம் குறைவாகவே இருந்ததால் பொதுமக்கள் வந்தவுடன் அவர்களுக்கு மையங்களில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    காலை 7 மணிக்கு தொடங் கிய மெகா தடுப்பூசி முகாம் மாலை வரை நடக்கிறது. இந்த மெகா தடுப்பூசி முகாமில் மதியம் வரை சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதில் இளைஞர்கள், இளம் பெண்கள் பலரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த ஆர்வ மாக வந்திருந்தனர்.

    • தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதை தொடர்ந்து திண்டுக்கல்லில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
    • அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் விசாகம் தெரிவித்தார்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதை தொடர்ந்து இன்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. தமிழகத்தில் சராசரியாக தினசரி பாதிப்பு 2000-க்கு அதிகமாக பதிவாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 30 முதல் 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் கடந்த 22-ந்தேதி வரை 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி 19,21,688 நபர்களுக்கும், 2-வது தவணை தடுப்பூசி 1,789,301 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இத்துடன் 68,302 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை செலுத்தப்பட்டுள்ளது.

    எனினும், திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது வரை 2.7 லட்சம் நபர்கள் 2-ம் தவணை செலுத்துவதற்குரிய தவணைதேதி கடந்த பின்னும் தடுப்பூசிசெலுத்தாமல்உள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் 11.7 லட்சம் நபர்கள் முன்னெச்சரிக்கை தவணைதடுப்பூசி (3-வது தவணை தடுப்பூசி) செலுத்துவதற்கான தவணை தேதி கடந்தும் செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர்.

    எனவே அவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று 2900க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் பலர் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

    மாவட்டத்தில் தொற்று அதிகரித்து வருவதாலும், உயிரிழப்பை தடுப்பதை கருத்தில் கொண்டும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் விசாகம் தெரிவித்தார்.

    • பூஸ்டர் தடுப்பூசி செலுத்த குவிந்த பொதுமக்கள்
    • குமரி மாவட்டத்தில் சமீபகாலமாக தினசரி கொரோனாவால் 40 முதல் 50 பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் சமீபகாலமாக தினசரி கொரோனாவால் 40 முதல் 50 பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். பாதிப்பு உள்ள பகுதிகளில் தினமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று மாவட்டம் முழு வதும் 742 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 42 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 16 பேர் ஆண்கள், 26 பேர் பெண்கள் ஆவார்கள்.

    குமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 21,367 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் அரவிந்த் முடுக்கி விட்டு உள்ளார்.

    மாவட்டம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகள் ஆரம்ப சுகாதார நிலையங் களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் குறிப் பிட்ட நாட்கள் கழிந்த பிறகும் 2-வது தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த நடவ டிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது.

    மேலும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குறிப்பிட்ட நாட்கள் கழிந்த பிறகும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தி ஆறு மாதம் கழிந்து விட்டால் உடனடியாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதையடுத்து இன்று மாவட்டம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. நாகர்கோவில் மாநகரப் பகுதியில் வடிவீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையம், வடசேரி ஆரம்ப சுகாதார நிலையம், தெல்லவிளை ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போடுவதற்கு காலையிலேயே பொது மக்கள் வந்திருந்தனர்.

    கூட்டம் குறைவாக இருந்ததால் தடுப்பூசி போடவந்தவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. அண்ணா பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையம், வேப்பமூடு பூங்கா பகுதிகளிலும் சுகா தாரப் பணியாளர்கள் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். பஸ்களின் உள்ளே சென்றும் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசியை செலுத்தி னார்கள். ெரயில் நிலையங் களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது.

    கன்னியாகுமரி பகுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இன்று குவிந்தி ருந்தனர். அதில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காந்தி மண்டபம் காமராஜர் மண்டபம் பகுதிகளில் தடுப்பூசி போடப்பட்டது.

    தக்கலை, ராஜாக்க மங்கலம், கிள்ளியூர், முஞ்சிறை, மேல்புறம், குருந்தன்கோடு, தோவாளை ஒன்றியத்துக்குட்பட்ட பகுதி களில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று தடுப்பூசி போடும் பணி காலை 7 மணி முதல் நடந்து வருகிறது.

    மாவட்டம் முழுவதும் சுமார் 1500 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வரு கிறது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்த ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள், பொது மக்கள் வந்திருந்த னர். மதியம் 2 மணி வரை 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி இருந்தது.

    • தருமபுரியில் நாளை தடுப்பூசி முகாம் நடக்கிறது.
    • இந்த தகவலை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் நாளை (24-ந்தேதி) காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணிவரை 32வது மெகா தடுப்பூசி முகாம் 2064 சிறப்பு முகாம்களில் நடைபெறும் மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

    தமிழக முதலமைச்சர் ஆணையின்படி, தமிழ்நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையாக கட்டுபடுத்திட கொரோனா நோய் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதன்படி தருமபுரி மாவட்டத்திலும் கொரோனா நோய் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டத்தில் அனை வருக்கும் கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் செலுத்துவதை இலக்காக கொண்டு தருமபுரி மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 2064 சிறப்பு முகாம்களில்நாளை (24-ந்தேதி) காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணிவரை 32-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

    கொரோனா நோய் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

    மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணியாமல் வருவோருக்கு அரசு விதிமுறையின்படி ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும்.

    அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் முககவசம் அணிந்து பணிபுரிய வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள் ஆகிய கல்வியியல் நிலையங்களில் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் முககவசம் அணிந்து வருவதை பள்ளி, கல்லூரி நிர்வாகம் உறுதிபடுத்திட வேண்டும்.

    எனவே, தருமபுரி மாவட்டத்தை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்கிட மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் அனைத்து கொரோனா நோய் தடுப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி, தெரிவித்து உள்ளார்.

    • முதல் தவணையாக 3,53,000 பயனாளிகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
    • இரண்டாவது தவணையாக 10,88,865 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டது.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தமிழகத்தில் நேற்று ஒரு லட்சம் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

    இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    முதலமைச்சர் உத்தரவின் படி தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 1 லட்சம் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இதுவரை நடைபெற்ற 30 மெகா தடுப்பூசி முகாம்களில் 4 கோடியே 44 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளார்கள்.

    மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, 12-14 வயதுயுடைவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் 16-03-2022 அன்று தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. இதுவரை (10-07-2022) 18,94,484 (89.32%) பயனாளிகளுக்கு முதல் தவணை மற்றும் 13,07,217 (61.63%) பயனாளிகளுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், 15-17 வயதுயுடைவர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் 03-01-2022 அன்று தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. இதுவரை (10-07-2022) 30,23,682 (90.37%) பயனாளிகளுக்கு முதல் தவணை மற்றும் 25,05,819 (74.89%) பயனாளிகளுக்கு இரண்டாம் தவணை வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை வழங்கும் திட்டம் 10-01-2022 அன்று தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. இதுவரை (10-07-2022) மொத்தம் 18,05,929 (5.03%) பயனாளிகளுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

    நேற்று (10-07-2022) நடைபெற்ற சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட 17,55,364 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 3,53,000 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 10,88,865பயனாளிகளுக்கும் மற்றும் 3,13,499 பயனாளிகளுக்கு முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்ட மெகா தடுப்பூசி முகாம்களை நேரடி கள ஆய்வு செய்தார்.

    இதில் திருச்சி மாவட்டத்தில்பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் இதர மாவட்டங்களில் சம்மந்தப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். மேலும், மாநிலத்தில் இன்று கொரோனா தடுப்பூசி பணிகள் நடைபெறாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×