search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் மாணவிகள்"

    • மதுரை ஓ.சி.பி.எம். பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்தித்தனர்.
    • தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்களை சந்தித்தும் வாழ்த்து பெற்றனர்.

    மதுரை

    மதுரை நரிமேடு பகுதியில் உள்ள ஓ.சி.பி.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1988-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை 11, 12-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவிகள் 63 பேர் சந்தித்து கொண்டனர். அப்போது அவர்கள் பள்ளி பருவத்தில் நடை பெற்ற நிகழ்வுகளை கூறி ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியடைந்தனர். தற்போது இதில் சிலர் தொழில் அதிபர்களாகவும், சுய தொழில் செய்பவர்களா கவும் ஆசிரியர்களாகவும் உள்ளனர். மேலும் சிலர் மருத்துவர், வெளிநாட்டில் பணி பொறியாளராகவும் பணி யாற்றி வருகின்றனர். மேலும் தங்களுடைய முகவரி மற்றும் தொலை பேசி எண்களை பரிமாறிக் கொண்டு பள்ளிப் பரு வத்தில் நடந்த நிகழ்வுகளை நினைவுபடுத்தி ஆடல் பாடலுடன் மகிழ்ச்சியு டன் காணப்பட்டனர். தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்களை சந்தித்தும் வாழ்த்து பெற்றனர்.

    • பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1994-96 வரை படித்த மாணவிகள் சந்தித்தனர்.
    • அவர்கள் படித்த போது மேற்பார்வையாளராக பணிபுரிந்த வேலமுத்துவை சந்தித்து ஆசி பெற்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் உள்ள கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுல பெண்கள் மேல்நி லைப்பள்ளியில் 1994-96 வரை படித்த மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடை பெற்றது.

    இந்நிகழ்வில் புருணை நாட்டில் இருந்து வந்த சுஜாதா, செகந்திரபாத்தில் இருந்து வந்த செந்தில் வடிவு மற்றும் கடலூர், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 25-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவிகள் ஒன்று கூடி, அவர்கள் படித்த வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்தை சுற்றி பார்த்து கலந்துரையாடினர்.

    மேலும், அவர்கள் படித்த போது மேற்பார்வையாளராக பணிபுரிந்த வேலமுத்துவை சந்தித்து ஆசி பெற்றனர்.

    பின்னர், குருகுலம் அறங்காவலர் வேதரத்தினத்துடன் குழுப்படம் எடுத்து கொண்டனர்.

    மேலும், அனைவரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    முன்னாள் மாணவிகளுக்கு குருகுலம் அறங்காவலர் வேதரத்தினம் புத்தகம் வழங்கினார்.

    ×