search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீட்டர்"

    • மேலும் 6 வீடுகள் இடிந்தது
    • மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப்பகுதியில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. சிற்றாறு-1 அணைப்பகுதியில் நேற்று 2 மணி நேரத்துக்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் அந்த பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 103.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருகிறது.

    கோழிப்போர்விளை, அடையாமடை, முள்ளங்கினாவிளை, குழித்துறை, களியல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அணை பகுதிகளிலும் மலையோர பகுதிகளிலும் கொட்டி தீர்த்துவரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 35.55 அடியாக இருந்தது. அணைக்கு 975 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 284 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 66.40 அடியாக உள்ளது. அணைக்கு 538 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 15.15 அடியாக உள்ளது. அணைக்கு 210 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 15.25 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 9 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 37.07 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 16.40 அடியாக உள்ளது.

    தொடர் மழையின் காரணமாக மழைக்கு ஏற்கனவே 60 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மேலும் 6 வீடுகள் இடிந்துள்ளது. கல்குளம் தாலுகாவில் 4 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 2 வீடுகளும் இடிந்து விழுந்துள்ளது.

    • குமரி மாவட்டம் முழு வதும் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • நாகர்கோவிலில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது.

    நாகர்கோவில்,செப்.29-

    குமரி மாவட்டம் முழு வதும் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் விட்டு விட்டு பெய்து வந்த மழை நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது.

    அதன்பிறகு மழை பெய்தது. நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் பொதுமக்கள் குடை பிடித்தவாறு சென்றனர். தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. பூதப்பாண்டி, கன்னிமார், கொட்டாரம், குழித்துறை, தக்கலை, குளச்சல், இரணியல், கோழிப்போர்விளை, குருந்தன்கோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, சிற்றாறு அணைப் பகுதியிலும் மழை பெய்து வருகிறது. சிற்றாறு 1-ல் அதிகபட்சமாக 30 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்ப ரித்து கொட்டுகிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை நீடித்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக சானல்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    பாசன குளங்களில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ள ளவை எட்டியுள்ளது. பாசன குளங்களிலும், அணைகளிலும் போதுமான அளவு தண்ணீர் உள்ளதை யடுத்து விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 21.75 அடியாக உள்ளது. அணைக்கு 596 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 586 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 42.30 அடியாக உள்ளது.

    அணைக்கு 237 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. குமரி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக மழை பெய்து வந்த பிறகும் முக்கடல் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து மைனஸ் அடியாகவே இருந்து வருகிறது.

    அணை நீர்மட்டம் இன்று காலை மைனஸ் 16.20 அடியாக இருந்தது. நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க புத்தன் அணை தண்ணீரை சப்ளை செய்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் பெய்த மழை மில்லி மீட்ட ரில் வருமாறு:-பேச்சிப் பாறை 16.8, பெருஞ்சாணி 11.2, சிற்றார் 1-30, சிற்றார் 2-10.4, பூதப்பாண்டி 13.4, களியல் 12, கன்னிமார் 9.4, கொட்டாரம் 11.6, குழித்துறை 15.6, மயிலாடி 16.2, நாகர்கோவில் 8.2, புத்தன் அணை 9, சுருளோடு 17.2, தக்கலை 19, குளச்சல் 16, இரணியல் 12.4, பாலமோர் 23.4, மாம்பழத்துறையாறு 24, திற்பரப்பு 21.5, கோழிப்போர்விளை 15.2, அடையாமடை 10.2, குருந்தன்கோடு 20, முள்ளங்கினாவிளை 12.8, ஆணைக்கிடங்கு 21.4.

    • அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    • பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 19.40 அடியாக உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழு வதும் தொடர்ந்து கொட்டி தீர்த்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது.

    நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. சுருளோடு பகுதியில் நேற்று இரவு விடிய விடிய கன மழை பெய்தது. இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 106.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    களியல், கன்னிமார், குழித்துறை, தக்கலை, புத்தன்அணை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பாசன குளங் களில் தண்ணீர் பெருக தொடங்கியுள்ளது. 400-க்கு மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் ஒரு அடி உயர்ந் துள்ளது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 19.40 அடியாக உள்ளது. அணைக்கு 984 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 583 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 39.10 அடியாக உள்ளது. அணைக்கு 561 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிப்பாறை 46.8, பெருஞ்சாணி 98.8, சிற்றார் 1-30.2, சிற்றார் 2- 36.4, பூதப்பாண்டி 20.4, களியல் 9.4, கன்னிமார் 28.8, குழித்துறை 12, நாகர்கோவில் 1.2, புத்தன் அணை 92.6, சுருளோடு 106.2, தக்கலை 6.3, குளச்சல் 18.8, பாலமோர் 26.2, மாம்பழத்துறையாறு 3.7, திற்பரப்பு 4.3, அடையா மடை 9, முள்ளாங்கி னாவிளை 6.2, ஆணைக் கிடங்கு 2, முக்கடல் 53.

    மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகளுக்கு தேவையான விதைகள் தங்கு தடையின்றி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேறெ்கொண்டு வருகிறார்கள்.

    ×