search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிற்றார்1-ல் 103.8 மில்லி மீட்டர் மழை பதிவு
    X

    சிற்றார்1-ல் 103.8 மில்லி மீட்டர் மழை பதிவு

    • மேலும் 6 வீடுகள் இடிந்தது
    • மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப்பகுதியில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. சிற்றாறு-1 அணைப்பகுதியில் நேற்று 2 மணி நேரத்துக்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் அந்த பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 103.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருகிறது.

    கோழிப்போர்விளை, அடையாமடை, முள்ளங்கினாவிளை, குழித்துறை, களியல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அணை பகுதிகளிலும் மலையோர பகுதிகளிலும் கொட்டி தீர்த்துவரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 35.55 அடியாக இருந்தது. அணைக்கு 975 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 284 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 66.40 அடியாக உள்ளது. அணைக்கு 538 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 15.15 அடியாக உள்ளது. அணைக்கு 210 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 15.25 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 9 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 37.07 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 16.40 அடியாக உள்ளது.

    தொடர் மழையின் காரணமாக மழைக்கு ஏற்கனவே 60 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மேலும் 6 வீடுகள் இடிந்துள்ளது. கல்குளம் தாலுகாவில் 4 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 2 வீடுகளும் இடிந்து விழுந்துள்ளது.

    Next Story
    ×