search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மில்லி மீட்டர்"

    • முக்கடல் அணை நீர்மட்டம் உயரவில்லை
    • திற்பரப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    நாகர்கோவில் :

    குமரியில் பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது. நேற்று இரவும் மாவட்ட முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்தது. இன்று காலையிலும் மழை நீடித்தது.

    கோழி போர்விளை பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 24.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கன்னிமார், கொட்டாரம், குழித்துறை, நாகர்கோவில், சுருளோடு, தக்கலை, முள்ளங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    மலையோரப் பகுதியான பாலமோர், பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 18.11 அடியாக இருந்தது. அணைக்கு 513 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 583 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி நீர்மட்டம் 37.55 அடியாக உள்ளது. அணைக்கு 166 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிபாறை 5.2, பெருஞ்சாணி 8.6, சிற்றார்1- 7, சிற்றார்2-8.2, பூதப்பாண்டி 11.4, களியல்-4, கன்னிமார் 1.6, குழித்துறை 9.6, நாகர்கோவில் 1, சுருளோடு 12.6, தக்கலை 7, இரணியல் 4.3, பாலமோர் 10.4, மாம்பழத்துறையாறு 4, திற்பரப்பு 10.4, கோழிப்போர்விளை 24.5, முள்ளங்கினாவிளை 12.8, ஆணைக்கிடங்கு 3.

    குமரி மாவட்டம் முழுவதும் கடந்த 10 நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தாலும் முக்கடல் அணை நீர்மட்டம் தொடர்ந்து மைனஸ் அடியாக நீடித்து வருகிறது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் கடந்த 2 மாதங்களாக மைனஸ் அடியில் இருந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் சரிந்து குட்டை போல் காட்சியளிக்கிறது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் கடந்த 10 நாட்களாகவே விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரிக்க வில்லை.

    தொடர்ந்து மைனஸ் அடியிலேயே இருந்து வருகிறது. முக்கடல் நீர்மட்டம் இன்று காலை மைனஸ் 10.90 அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் குறைவாகவே உள்ள நிலையில் நாகர்கோவில் நகர மக்களுக்கு புத்தன்அணையிலிருந்து கொண்டு வரப்படும் தண்ணீரை சப்ளை செய்து வருகிறார்கள்.

    • கோழிப்போர்விளையில் அதிகபட்சமாக 5.7 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
    • பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 18.72 அடியாக உள்ளது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் தற்பொழுது சற்று மழை குறைந்துள்ளது. நாகர்கோவில், தக்கலை, குளச்சல், இரணியல், கோழிப் போர்விளை, முள்ளங்கினாவிளை, அடையாமடை பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது. கோழிப்போர்விளையில் அதிகபட்சமாக 5.7 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 18.72 அடியாக உள்ளது. அணைக்கு 472 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 583 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. பெருஞ் சாணி அணை நீர்மட்டம் 37.95 அடியாக உள்ளது. அணைக்கு 228 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்ப டுகிறது.

    • அடையாமடையில் அதிகபட்சமாக 19.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
    • சுசீந்திரம், பூதப்பாண்டி பகுதிகளில் தற்பொழுது கன்னி பூ அறுவடை பணி நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நாகர்கோவிலில் நேற்று இரவு லேசான சாரல் மழை பெய்தது.

    இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. அவ்வப்போது லேசான மழை பெய்தது. அடையாமடை, சுருளோடு, தக்கலை, குளச்சல், இரணியல் பகுதிகளிலும் மழை பெய்தது. அடையாமடையில் அதிகபட்சமாக 19.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்று காலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் சற்று வெப்பம் தணிந்து காணப்ப டுகிறது.

    திற்பரப்பு அருவி பகுதியில் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. விடுமுறை தினமான இன்று அருவியல் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தி ருந்தனர். அவர்கள் அருவி யில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    மலையோர பகுதியான பாலமோர், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 18.36 அடியாக உள்ளது. அணைக்கு 656 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் ணஇருந்து 583 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 36.20 அடியாக உள்ளது. அணைக்கு 547 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 7.2, பெருஞ்சாணி 4, நாகர்கோ வில் 2.4, புத்தன்அணை 4.8, சுருளோடு 5.2, சிற்றார் 2- 2, தக்கலை 4.4, குளச்சல் 4, இரணியல் 10.2, பாலமோர் 17.4, மாம்பழத்துறையாறு 7.6, திற்பரப்பு 5.3, கோழிப்போர்விளை 13.5, அடையாமடை 19.1, முக்கடல் 4.2.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை விவசாயிகளுக்கு ஒரு புறம் மகிழ்ச்சி அளித்தாலும் மறுபுறம் கவலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பயிர் செய்யப்பட்டுள்ள கன்னிபூ கடைமடை பகுதிகளில் தண்ணீர் இன்றி கருகும் நிலையில் உள்ள நிலையில் மழை பெய்துள்ளது விவசாயிகளுக்கு ஆறுதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. சுசீந்திரம், பூதப்பாண்டி பகுதிகளில் தற்பொழுது கன்னி பூ அறுவடை பணி நடைபெற்று வருகிறது. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் நெற்பயிரகளை அறுவடை செய்ய முடியாத நிலையில் உள்ளனர். இதனால் அவரகள் கவலை அடைந்துள்ளனர்.

    • கோழிப்போர்விளையில் 70.5 மில்லி மீட்டர் பதிவு
    • சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக மழை நீடித்ததால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் பாசன குளங்களிலும், அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென சரிந்து வருகிறது.

    கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்லாததால் நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தக்கலை கோழிபோர்விளை பகுதியில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக மழை நீடித்ததால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    கோழிப்போர்விளையில் அதிகபட்சமாக 70.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. மாம்பழத்துறை யாறு, அடையாமடை, ஆணைக்கிடங்கு, கன்னி மார், களியல் பகுதிகளிலும் மழை பெய்தது. நாகர்கோவி லில் மழை வெளுத்து வாங்கியது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    களியல் 1.2, கன்னிமார் 2.2, குழித்துறை 2.2, குழித்துறை 29.4, நாகர்கோவில் 22.2, தக்கலை 70.3, பாலமோர் 9.2, மாம்பழத்துறையாறு 44.2, கோழிபோர்விளை 70.5, அடையாமடை 57.2, ஆணைகிடங்கு 41.2,

    அணை பகுதியில் போதுமான அளவு மழை பெய்யவில்லை.

    இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 17.36 அடியாக இருந்தது. அணைக்கு 478 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 580 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 28.70 அடியாக உள்ளது. அணைக்கு 52 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 11.28 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 11.38 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 10.10 அடியாகவும், மாம்பழத்துறை யாறு நீர்மட்டம் 3.28 அடியாகவும் உள்ளது.

    குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கிழக்கு மாவட்டத்துக் குட்பட்ட கன்னியாகுமரி, சுசீந்திரம், அஞ்சுகிராமம் பகுதிகளில் மழை கண்ணா மூச்சி காட்டி வருகிறது. இந்த பகுதிகளில் நேற்றும் வானத்தில் கரு மேகங்கள் திரண்டு காணப்பட்டது. ஆனால் மழை பெய்ய வில்லை. இன்று காலையில் வழக்கம்போல் சுட்டெ ரிக்கும் வெயில் அடித்தது.

    பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து சற்று உயர்ந்தது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது.

    இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வெப்பத்தின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது. இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்றும் மழை பெய்தது. சுருளோட்டில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்ச மாக 47.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நாகர்கோவிலிலும் நேற்று மாலையில் மழை பெய்தது. இதனால் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, வடசேரி சாலை, மீனாட்சிபுரம் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    பூதப்பாண்டி, கன்னிமார், மயிலாடி, பேச்சிப்பாறை, ஆரல்வாய்மொழி பகுதிகளிலும் மழை பெய்தது. மலையோர பகுதி யான பாலமோர் பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது.

    திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த இந்த மழையின் காரணமாக வெப்பம் சற்று தணிந்துள் ளது. பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 17.50 அடியாக உள்ளது. அணைக்கு 470 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 580 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 28.30 அடியாக உள்ளது. அணைக்கு 67 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாவட் டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    சுருளோடு 47.2, பூதப் பாண்டி 10.2, கன்னிமார் 4.2, மயிலாடி 10.4, நாகர்கோவில் 11.4, பெருஞ்சாணி 1.8, புத்தன் அணை 1.6, மாம் பழத்துறையாறு 21.4, ஆரல்வாய்மொழி 13.4.

    நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்த நிலையில் இன்று காலையில் வழக்கம்போல் சுட்டெ ரிக்கும் வெயில் அடித்தது.

    • திடீர் மழையின் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி யடைந்தனர்.
    • குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் நீர்மட்டம் மைனஸ் 12 அடியாக நீடித்து வருகிறது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    நேற்று காலையில் வழக்கம்போல் சுட்டெ ரிக்கும் வெயில் அடித்தது. மதிய நேரங்களில் அனல் காற்றும் வீசியது. இந்த நிலையில் நேற்று மாலை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

    குளச்சல் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து குளச்சல் மெயின் ரோட்டில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அங்கு வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசியது. அங்கு அதிகபட்சமாக 32.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திடீர் மழையின் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி யடைந்தனர்.

    இரணியல், பூதப்பாண்டி, கன்னிமார், தக்கலை பகுதிகளிலும் மழை பெய்தது. நாகர்கோவில் பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது. மழையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை அணைப்பகுதியிலும் மழை பெய்ததையடுத்து அணைக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 17.90 அடியாக இருந்தது. அணைக்கு 351 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 585 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. பெருஞ் சாணி அணை யின் நீர்மட்டம் 27.25 அடியாக உள்ளது. அணைக்கு 20 கனஅடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

    சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 11.28 அடியாகவும், சிற்றார்-2 அணை யின் நீர்மட்டம் 11.38 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 10.20 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 3.28 அடியாகவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் நீர்மட்டம் மைனஸ் 12 அடியாக நீடித்து வருகிறது. நேற்று இரவு மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்த நிலையில் இன்று காலையில் வழக்கம்போல் வெயில் சுட்டெரித்தது.

    • பெருஞ்சாணியில் 14.8 மில்லி மீட்டர் பதிவு
    • சிற்றார்-1 அணை 11.38 அடியாகவும், சிற்றாறு-2 அணை 11.48 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 11.60 அடி

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் குறைவான அளவு தண்ணீர் உள்ளது.

    மேலும் பாசன குளங்களிலும் தண்ணீர் குறைவாகவே இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பருவமழையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. ஒரு சில இடங்களில் மழை பெய்தது.

    நாகர்கோவில் பகுதியில் இன்று அதிகாலையில் சாரல் மழை பெய்தது. மயிலாடி, கொட்டாரம், பூதப்பாண்டி, சுருளோடு, இரணியல், அடையாமடை, குளச்சல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

    மழையின் காரணமாக ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கியது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் அங்கு ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணை பகுதியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. பெருஞ்சாணியில் அதிகபட்சமாக 14.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இரவு மற்றும் அதிகாலையில் மழை பெய்தாலும் அதன் பிறகு வெயில் வழக்கம்போல் சுட்டெரித்தது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 32.95 அடியாக உள்ளது. அணைக்கு 363 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 690 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது.

    பெருஞ்சாணி அணை யின் நீர்மட்டம் 25.65 அடியாக உள்ளது. அணைக்கு 204 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 11.38 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 11.48 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 11.60 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 3.26 அடியாகவும் உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்தமழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 5.8, பெருச்சாணி 14.8, சிற்றார் 1 -10.2, சிற்றார் 2-8, நாகர்கோவில் 7.4, பூதப் பாண்டி 7.2, சுருளோடு 8.4, கன்னிமார் 3.4, பாலமோர் 11.2, மயிலாடி 3.6, கொட்டாரம் 5.2, இரணியல் 6.2, ஆணைக் கிடங்கு 8.4, குளச்சல் 8, குருந்தன்கோடு 4, முள்ளாங்கினாவிளை 6.2, புத்தன் அணை 12, திற்பரப்பு 8.2.

    • திற்பரப்பு அருவியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்
    • குடும்பத்தோடு ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் காலை, மதியம் நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே சிரமப்பட்டு வருகிறார்கள்.

    சிறுவர்கள் முதல் குழந்தை கள் வரை வெயி லின் தாக்கத்தினால் பாதிக்கப் பட்டு உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்க ளாக பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைப்ப குதிகளில் மழை பெய்து வந்தது. நேற்று இரவு இரணியல் பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேலாக கன மழை கொட்டி தீர்த்தது.

    இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக அந்த பகுதிகளில் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்ச மாக 22 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குளச்சல் ஆசாரிப்பள்ளம், ஈத்தாமொழி, நாகர்கோவில் பகுதிகளில் லேசான மழை பெய்தது. திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. விடுமுறை தினமான இன்று அருவியல் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவி யில் குடும்பத்தோடு வந்து ஆனந்த குளியலிட்டனர்.

    திற்பரப்பு அருவியில் கூட்டம் அலைமோதியதை யடுத்து அங்கு கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தொடர்ந்து கன்னி பூ சாகுபடிக்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 40.70 அடியாக இருந்தது. அணைக்கு 154 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 61 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 40.85 அடியாக உள்ளது. அணையிலிருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற் றப்படுகிறது.

    • அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    • பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும் மழை பெய்து கொண்டே இருந்தது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் நேற்று மதியத்திற்கு பிறகு சீதோசண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சுருளோடு பகுதியில் மதியத்திற்கு பிறகு சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் அந்த பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்ச மாக 80.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    பூதப்பாண்டி, நாகர்கோவில், அடையாமடை, கொட்டாரம், கன்னிமார் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை வெளுத்து வாங்கியது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.

    திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்ததால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    மலையோர பகுதிகளி லும், அணை பகுதிகளிலும் மழை பெய்ததையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 38.07 அடி யாக இருந்தது. அணைக்கு 174 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 39.45 அடியாக உள்ளது. அணைக்கு 437 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 51 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 38.07, பெருஞ்சாணி 58.4, சிற்றாறு 1 -2, பூதப்பாண்டி 10.4, கன்னிமார் 9.4, கொட்டாரம் 17.4, நாகர்கோவில் 17.2, சுருளோடு 80.6, தக்கலை 3, மாம்பழத்துறையாறு 26.6, பாலமோர் 36.2, அடையா மடை 3, குருந்தன்கோடு 7, ஆணைக்கிடங்கு 23.2, முக்கடல் 20.2.

    • கோழிபோர்விளையில் 95.4 மில்லி மீட்டர் பதிவு
    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.50 அடியாக உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்து உள்ளது. நேற்று காலையில் வழக்கமாக வெயிலடித்து வந்த நிலையில் மாலையில் சீதோசண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது.

    இரவு மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் நேற்று 7 மணிக்கு மழை பொய்ய தொடங்கியது. இரவு 9 மணி முதல் சுமார் 1 மணி நேரமாக மழை கொட்டியதையடுத்து ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து விடிய, விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. கோழிப்போர்விளையில் கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 95.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    பூதப்பாண்டி, கொட்டாரம், கன்னிமார், மயிலாடி, குளச்சல், தக்கலை, இரணியல், முள்ளங்கினா விளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. குலசேகரம் பகுதியில் பெய்த மழையின் காரணமாக அந்த பகுதியில் மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தது. இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக குளிர் காற்று வீசியது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழை பெய்தது.

    திற்பரப்பு அருவி பகுதியில் கொட்டிய மழையின் காரணமாக அருவியல் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் தடுப்பணையில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்ததையடுத்து அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 36.87 அடியாக இருந்தது. அணைக்கு 350 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.50 அடியாக உள்ளது. அணைக்கு 71 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 51 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டமும், பாசன குளங்களின் நீர்மட்டமும் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்னை, ரப்பர் விவசாயி களுக்கும் மழை பயனுள்ளதாக அமைந்து ள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    பேச்சிப்பாறை 35.8, பெருஞ்சாணி 9, சிற்றார் 1-21.4, சிற்றார் 2 -32.2, பூதப்பாண்டி 82, கன்னிமார் 38.6, கொட்டா ரம் 30.4, மயிலாடி 17.4, நாகர்கோவில் 59.4, புத்தன் அணை 7.6, சுருளோடு 11, தக்கலை 72.3, குளச்சல் 4.6, இரணியல் 28.2, பாலமோர் 8.6, மாம்பழத்துறை யாறு 53, திற்பரப்பு 73, ஆரல்வாய் மொழி 18, கோழி போர்விளை 95.4, அடையாமடை 37.2, குருந்தன்கோடு 34, முள்ளங்கினாவிளை 84.6, ஆனைக்கிடங்கு 50.4, முக்கடல் 28.7.

    ×