search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் உற்பத்தி"

    • பி.ஏ.பி. தொகுப்பு அணைகள் சுரங்க கால்வாய்கள் மற்றும் திறந்த வெளிக்கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
    • 12 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்ட மின்உற்பத்தி 21 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டது.

    பொள்ளாச்சி

    பி.ஏ.பி திட்டத்தில் மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய அணைகள் கட்டப்பட்டுள்ளது.

    இந்த பி.ஏ.பி. தொகுப்பு அணைகள் சுரங்க கால்வாய்கள் மற்றும் திறந்த வெளிக்கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

    9 அணைகள் திட்டத்தில் இருந்தாலும் ஆழியாறு மற்றும் திருமூர்த்தி அணைகளில் இருந்து மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆழியாறு அணையிலிருந்து 50 ஆயிரம் ஏக்கரும், திருமூர்த்தி அணையிலிருந்து 3.77 லட்சம் ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன.

    பி.ஏ.பி திட்டத்தில் அதிக கொள்ளவு கொண்டது பரம்பிக்குளம் அணை. இந்த அணை நிரம்பிவிட்டால் ஓராண்டுக்கு தண்ணீர் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு இருக்காது.

    திருமூர்த்தி அணைக்கும், ஆழியாறு அணைக்கும் பரம்பிக்குளம் அணையிலிருந்து தூணக்கடவு அணை வழியாக தண்ணீர் வழங்கப்படும்.

    திருமூர்த்தி அணையிலிருந்து 3.77 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுவதால் அந்த அணைக்கு தேவையான தண்ணீர் பரம்பிக்குளம் அணையிலிருந்து வழங்கப்படுகிறது. இதற்கு 39.3 கி.மீ நீளம் உடைய காண்டூர் கால்வாய் பயன்படுகிறது. காண்டூர் கால்வாயில் அதிக பட்சமாக 1000 கன அடிவரை தண்ணீர் கொண்டு செல்லமுடியும்.

    கடந்த மே மாத இறுதியில் இருந்து காண்டூர்கால்வாயில் புணரமைப்பு பணிகள் நடைபெற்றுவந்ததால் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லமுடியவில்லை.

    இந்நிலையில், கடந்த புதன்கிழமை காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. பரம்பிக்குளம் அணையிலிருந்து வழங்கப்படும் தண்ணீர் தூணக்கடவு அணை வழியாக சர்க்கார்பதி மின்உற்பத்தி நிலையத்தை அடைகிறது.

    சர்க்கார்பதி மின் உற்பத்திநிலையத்தில் மின் உற்பத்திக்கு பிறகு காண்டூர்கால்வாயில் செல்லும் தண்ணீர் திருமூர்த்தி அணையை அடைகிறது. கடந்த புதன்கிழமை திறக்கப்பட்ட தண்ணீர் வெள்ளிக்கிழமை 850 கன அடியாக உயர்த்தப்பட்டதால் 12 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்ட மின்உற்பத்தி 21 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டது. 

    • சக்தி காற்றலை மின் உற்பத்தி குறித்த குறும் பாடம் காண்பிக்கபட்டு கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.
    • மின்துறையில் 8 ஆண்டுகள் சாதனை குறித்து ஒலி, ஒளி காட்சி நடைபெற்றது.

    வேதாரண்யம் :

    வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் மின்சார பெருவிழா நடைபெற்றது. விழாவிற்கு வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் தலைமை வகித்தார். மாவட்ட மேற்பார்வை பொறியளார் சதீஷ்குமார் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் புகழேந்தி ,ஆத்மா குழு உறுப்பினர் சதாசிவம், மாவட்ட கவுன்சிலர் சோழன், உதவி செயற்பொறியாளர்கள் ரவிகுமார், மலர்வண்ணன், இளம் மின்பொறியாளர் அன்பரசன், உதவி மின்பொறியாளர்கள் மனோகரன், சுப்பிர–மணியன், பாரதிதாசன் கல்லூரி முதல்வர் முருகன், கல்லூரி நாட்டு நலதிட்ட அலுவலர் மாரிமுத்து உள்ளிட்ட மின்துறை அலுவலர்கள் பாரதிதாசன் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியில் மின்துறையில் 8ஆண்டுகள் சாதனை குறித்து ஒலி ஒளி காட்சி மின்சார விழிப்புணர்வு மின்சார சிக்கனம், குறித்தும் வருங்காலத்தில் மின் சேவையை நிவர்த்தி செய்யசூரிய சக்தி காற்றலை மின் உற்பத்தி குறித்த குறும் பாடம் காண்பிக்கபட்டு கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவர்களுக்கு வேதா–ரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் பரிசுகள் வழங்கினார். முடிவில் நாகை கோட்டபொறியார் சேகர் நன்றி கூறினார்.

    • அணுமின் நிலையத்தின் 2-வது உலையில் கடந்த மே மாதம் 23ம் தேதி, கொதிகலனில் கசிவு ஏற்பட்டது
    • முதல் உலை நான்கு ஆண்டுகள் ஆகியும், இன்னும் சரி செய்யப்படவில்லை.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் 2-வது உலையில் கடந்த மே மாதம் 23ம் தேதி, கொதிகலனில் கசிவு ஏற்பட்டது., அதை சரி செய்வதற்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது கொதிகலன் சரி செய்யப்பட்டு, 180 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரியில் பழுதடைந்த முதல் உலை நான்கு ஆண்டுகள் ஆகியும், இன்னும் சரி செய்யப்படவில்லை. இதனால் 220 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டு கிடப்பது குறிப்பிடதக்கது.

    ×