search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலைப்பாம்பு"

    • பாம்பு கோவிலில் இருந்த சிவலிங்க சிலையை சுற்றியபடி இருந்தது.
    • தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோட்டை மேட்டு தெருவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த விஸ்வேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது வழிபாடு இல்லாமல் பூட்டி கிடக்கிறது.

    இந்தநிலையில் கோவிலுக்குள் மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. உடனே அப்பகுதி பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது பாம்பு கோவிலில் இருந்த சிவலிங்க சிலையை சுற்றியபடி இருந்தது. இதனால் பக்தி பரவசமடைந்த பக்தர்கள் உடனே பால் ஊற்றி வழிபட்டனர். சிறிது நேரத்திற்கு பின் பாம்பு அங்குள்ள மரத்தடிக்குள் சென்று மறைந்தது.

    இதையடுத்து தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சென்று மறைந்திருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் வனப்பகுதியில் விட்டனர்.

    பாம்பு லிங்கத்தை சுற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அடைகாக்கும் போது அதன் முட்டைகள் மீது யாராவது கை வைத்தால் ஆக்ரோஷமாகிவிடும்.
    • மலைப்பாம்பின் அருகே ஏராளமான முட்டைகள் இருப்பதை காண முடிகிறது.

    எல்லா உயிர்களும் தனது குட்டிகளை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கும். அதுபோன்ற ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சாதாரணமாக முட்டையிடும் இனங்கள் அதை அடைகாக்கும் போது அதன் முட்டைகள் மீது யாராவது கை வைத்தால் ஆக்ரோஷமாகிவிடும். அவ்வாறு ஜேப்ரூவர் என்ற உயிரியல் பூங்கா காப்பாளர் தனது பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் ராட்சத மலைப்பாம்பு அருகே செல்கிறார்.

    அந்த மலைப்பாம்பின் அருகே ஏராளமான முட்டைகள் இருப்பதை காண முடிகிறது. அதில், ஒரு முட்டையை ஜேப்ரூவர் எடுக்க முயலும் போது மலைப்பாம்பு கோபம் அடைந்து அந்த காப்பாளரை நோக்கி சீறுவது போலவும், அவரின் தொப்பியை கொத்த முயற்சிப்பது போலவும் காட்சிகள் உள்ளன.

    இந்த வீடியோ 5.54 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த வலைதளவாசிகள் மலைப்பாம்புவை லாவகமாக கையாளும் காப்பாளரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • மின்சாரம் பாய்ந்து பாம்பு இறந்திருப்பதை கண்டு பிடித்தனர்.
    • மின்சாரத்தை துண்டித்த பின்பு டிரான்ஸ்பார்மரில் இறந்து கிடந்த மலைப்பாம்பை மின்வாரிய ஊழியர்கள் மீட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த பத்தினம்திட்டா பகுதியில் நாரங்கானம் என்ற இடத்தில் சாலையோரம் ஒரு மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது.

    இந்த பகுதி எப்போதும் புதர் மண்டி காணப்படும். நேற்று இந்த வழியாக சென்றவர்கள், டிரான்ஸ்பார்மரின் மேல் பகுதியில் மலைப்பாம்பு ஒன்று இறந்து கிடந்ததை கண்டனர். உடனே அவர்கள் இதுபற்றி போலீசாருக்கும், மின்வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் விரைந்து வந்து பார்த்த போது, டிரான்ஸ்பார்மரையொட்டி வளர்ந்து நின்ற செடி, கொடிகள் வழியாக மலைப்பாம்பு டிரான்ஸ்பார்மரில் ஏறியது தெரியவந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து பாம்பு இறந்திருப்பதை கண்டு பிடித்தனர்.

    இதையடுத்து அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்த பின்பு டிரான்ஸ்பார்மரில் இறந்து கிடந்த மலைப்பாம்பை மின்வாரிய ஊழியர்கள் மீட்டனர். பின்னர் அது வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தீயணைப்பு துறையினர் மீட்டனர்
    • காட்டில் பத்திரமாக விட்டனர்

    ஜோலார்பேட்டை:

    கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் இக்பால். இவருக்கு சொந்தமான மாந்தோப்பு திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த பையனப்பள்ளி பகுதியில் உள்ளது.

    இந்த மாந்தோப்பில் நேற்று தொழிலாளர்கள் கிழே விழந்து இருந்த மாங்காய்களை சேகரித்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென மலைப்பாம்பு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அதன் பிறகு மாந்தோப்பில் வேலை செய்து கொண்டு இருந்த தொழிலாளர்கள் உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரமேஷ் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றனர். சுமார் 1 மணி நேரம் போராடி 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    அதன் பிறகு வனத்துறையினர் அருகில் உள்ள காட்டில் பத்திரமாக மலை பாம்பை விட்டனர்.

    • பெரிய அளவிலான மலைப்பாம்பை கண்ட விவசாயிகள் அச்சம் அடைந்தனர்.
    • பாம்புகள் அடிக்கடி குளங்களுக்கு வருவதாகவும் இதனால் காலையில் வயல் பணிக்கு செல்வது ஆபத்தாக உள்ளது என்றும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள பதினெட்டாம் படி பகுதியில் நெல் வயல்கள் மற்றும் பாசன குளங்கள் உள்ளன. இங்கு முதல் பருவ நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

    அவர்கள் அதிகாலையிலேயே வயல்களுக்கு சென்று பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று அதிகாலை வயல் பணிகளுக்குச் சென்ற அவர்கள், பதினெட்டாம்படி அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே ஏதோ ஊர்ந்து செல்வதை பார்த்தனர். அருகில் சென்று பார்த்தபோது, அது மலைப்பாம்பு என தெரியவர அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பெரிய அளவிலான மலைப்பாம்பை கண்ட விவசாயிகள் அச்சம் அடைந்தனர். மேலும் சிலர் அங்கு வந்ததும் மலைப்பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த பாம்பு வேறு எங்கோ சென்று பதுங்கி விட்டது.

    அந்த பகுதியில் உள்ள குளங்களில் மீன் பிடிப்பவர்கள் வலை விரித்துள்ளதால், அருகில் உள்ள மலைகளில் இருந்து பாம்புகள் அடிக்கடி குளங்களுக்கு வருவதாகவும் இதனால் காலையில் வயல் பணிக்கு செல்வது ஆபத்தாக உள்ளது என்றும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    • வனத்துறையினர் விரைந்து வந்து 15 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை உயிருடன் பிடித்தனர்.
    • பிடிக்கபட்ட மலைப்பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் வட்டுவனஅள்ளி ஊராட்சி யில் கடைக்காரசி கொட்டாய் கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியை சுற்றிலும் வனப்பகுதி சூழ்ந்து காணப்படுகிறது.

    இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 15 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று கடைக்காரசி கொட்டாய் கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.

    இதனை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடி யாக இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

    அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து 15 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை உயிருடன் பிடித்தனர்.

    பின்னர் பிடிக்கபட்ட மலைப்பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதனால் இக்கிராமத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு புகுந்தது
    • வனத்துறையினர் நார்த்தாமலை காப்புகாட்டில் மலைப்பாம்பை விட்டனர்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை அன்னவாசல் அருகே மேலூரை சேர்ந்தவர் மனோகரன். இவரது குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு புகுந்து அச்சுறுத்துவதாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு அவர் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் அப்துல்ரகுமான் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மலைப்பாம்பை லாவகமாக உயிருடன் பிடித்து சாக்கு பையில் அடைத்தனர். பின்னர் பிடிபட்ட மலைப்பாம்பை தீயணைப்புதுறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் நார்த்தாமலை காப்புகாட்டில் மலைப்பாம்பை விட்டனர்.


    • வயலில் கிடந்த மலைப்பாம்பு பிடிப்பட்டது
    • வனத்துறையினர் மலைப்பாம்பை காட்டுப்பகுதியில் கொண்டு விட்டனர்.

    புதுக்கோட்டை:

    திருமயம் அருகே மாவூர் கிராமத்தில் அறிவழகன் என்பவரின் வயலில் நேற்று காலை தொழிலாளர்கள் மூலம் களை எடுத்து கொண்டிருந்தனர். அப்போது வயலுக்குள் மலைப்பாம்பு ஒன்று கிடந்தது. இதைப்பார்த்த அவர்கள் சத்தம் போட்டு உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருமயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் கொடுத்தனர். பின்னர் அவர்கள் அந்த மலைப்பாம்பை காட்டுப்பகுதியில் கொண்டு விட்டனர்.

    • ஒடுகத்தூர் வனத்துறை பிடித்தனர்
    • காப்பு காட்டில் விட்டனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த பாக்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரராஜா இவருக்கு செந்தமாக மாந்தோப்பு உள்ளது.

    வழக்கம்போல இவர் மாந்தோப்பில் மாங்காய்களை பறிப்பதற்காக நேற்று மாலை மாந்தோப்பிற்கு சென்றுள்ளார்.

    அப்போது சுமார் 8 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஊர்ந்து கொண்டு மா மரத்தின் அடியில் இருந்துள்ளது. இதனை பார்த்த தாமோதரன் அலறி அடித்து ஓடி உள்ளார்.

    சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அருகே இருக்கும் ஒடுகத்தூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    வனத்துறையினர் வருவதற்குள் மலைப்பாம்பு மாமரத்தில் ஏறியது.

    பின்னர் வந்த ஒடுகத்தூர் வனத்துறை 40 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பை பிடித்து அருகே உள்ள சானாங்குப்பம் காப்பு காட்டில் பத்திரமாக விட்டனர்.

    • வனத்துறையினர் பாம்புபிடி வீரர் காஜாமைதீனுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
    • மலைப்பாம்பு வனத்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் காப்புக்காடு பகுதியில் விடப்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள திம்மராயம்பாளையம் சுதா நகரில் ஊருக்குள் மலைப்பாம்பு புகுந்ததாக சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் வந்தது.

    அதன் பேரில் வனத்துறையினர் பாம்புபிடி வீரர் காஜாமைதீனுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    பின்னர் ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பினை நீண்ட நேரம் போராடி லாவகமாக பிடித்தனர். தொடர்ந்து சிறுமுகை வனத்துறையினர் அறிவுறுத்தலின் பேரில் சிறுமுகையை ஒட்டியுள்ள அடர் வனப்பகுதியில் மலைப்பாம்பு விடப்பட்டது.

    இதுகுறித்து பாம்பு பிடி வீரர் காஜாமைதீன் கூறுகையில் திம்மராயம்பாளையம் பகுதி வனப்பகுதியையொட்டி அமைந்திருப்பதால் அடிக்கடி மான், பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. தற்போது கோடைக்காலம் என்பதால் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது.

    இதன் காரணமாகவே வன விலங்குகள் ஊருக்குள் படையெடுக்க தொடங்கி உள்ளன.

    தற்போது பிடிப்பட்டுள்ள மலைப்பாம்பு 8 அடி நீளம் கொண்டது.சுமார் 10 கிலோ எடையுள்ள மலைப்பாம்பு சிறுமுகை வனத்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் காப்புக்காடு பகுதியில் விடப்பட்டது.

    • பொன்னமராவதியில் குடியிருப்புக்குள் புகுந்த மலைப்பாம்பு கோழியை விழுங்கியது
    • தீயணைப்புதுறையினர் மலைப் பாம்பை வனகாப்பு பகுதியில் விட்டனர்.

    பொன்னமராவதி:

    பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூர் கிராமத்தில் பொதுமக்கள் வசித்து வரும் குடியிருப்பு பகுதியில் சிவாஜிகணேசன் என்பவரது வீட்டின் அருகே மலை பாம்பு ஒன்று அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த கோழியை முழுங்கி கொண்டிருந்தது. இதனை கண்ட பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்குள் மலைப்பாம்பு புகுந்தது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் சந்தானம் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் தூத்தூர் கிராமத்திற்கு சென்று கோழியை முழுங்கி அப்பகுதி மக்களை அச்சுறுத்திய பத்தடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடித்தனர் . பின்னர் அந்த மலைப் பாம்பை வனகாப்பு பகுதியில் விட்டனர்.





    • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மொஞ்சனூர் பகுதியைச் சேர்ந்தவர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
    • 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று மெதுவாக ஊர்ந்து சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மொஞ்சனூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். விவசாயி. அவர் நேற்று தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று மெதுவாக ஊர்ந்து சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி ராசிபுரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். ராசிபுரம் வனத்துறையினர் விரைந்து சென்று 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி மலைப் பாம்பை உயிருடன் பிடித்தனர். பிறகு அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதி யான காப்பு காட்டில் உயிருடன் விட்டனர்.

    ×