search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலேரியா நோய்"

    • மலேரியா நோய் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • அனைவரும் மலேரியா நோய் தடுப்பு உறுதிமொழி எடுத்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் உலக மலேரியா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மலேரியா நோய் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் உத்தரவுபடி, துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், சவுந்தரராஜன் ஆகியோர் ஜெயராம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மலேரியா நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு கொசுக்கள் எப்படி உருவாகின்றன என்றும், அவற்றின் வாழ்க்கை சுழற்சி முறை, கொசுக்கள் எவ்வாறு நோய் பரப்பிகளாக செயல்படுகின்றன என்றும்,

    அவைகளை கட்டுப்படுத்த ஒவ்வொரு வீட்டிலும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல், தண்ணீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்துதல்,

    தண்ணீர் தொட்டிகளை வாரம் ஒரு முறை தேய்த்து கழுவி சுத்தம் செய்து தண்ணீர் சேமித்து வைக்க வேண்டும் என்பது போன்ற அறிவுரைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மலேரியா மற்றும் டெங்கு நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களான தேங்காய் சிரட்டைகள், உடைந்த பானைகள்,பழைய டயர்கள், உடைந்த டப்பாக்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டது.

    கொசு புழுக்களையும் பாட்டிலில் அடைத்து வைத்து பள்ளி மாணவர்களும் காண்பித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    பின்னர் அனைவரும் மலேரியா நோய் தடுப்பு உறுதிமொழி எடுத்தனர். இறுதியில் பள்ளி தலைமை ஆசிரியர் நகராட்சி அலுவலர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    • மலேரியா அறிகுறிகள் குறித்து பொதுமக்களிடையே எடுத்துரைத்தனர்.
    • ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியம் சேரி , சிறுவளையம், துறைபெரும்பாக்கம், கீழ்வீராணம் உள்ளிட்ட பகு திகளில் பொதுமக்கள் மத்தியில் மலேரியா ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    சிறுகரும்பூர் ஊராட்சியில் நடந்த மலேரியா ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோகன்ராஜ் பங்கேற்று பேசினார். அப்போது மலேரியா குறித்தும் அதன் அறிகுறிகள் குறித்தும் பொதுமக்களிடையே எடுத்துரைத்தார்.

    மேலும் பொதுமக்கள் எந்தக் காய்ச்சலாக இருந்தாலும் ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். மலேரியா நோய்க்கு சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இலவசமாக கிடைக்கும், என்றார்.

    விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் குமார், தமிழ்ச்செல்வன், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் மோகனசுந்தரம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×