search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருந்து சீட்டு"

    • மருந்து சீட்டில் மருந்துகளின் பெயர்கள் புரிவதில்லை என கூறப்பட்டு வந்தது
    • ஒடிசா உயர் நீதிமன்றம் தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட்டது

    மருத்துவர்கள், நோயாளிகளுக்கு மருந்து சீட்டுகளை (prescriptions) எழுதித் தரும் போது மருந்துகளின் பெயரை "கேப்பிட்டல் எழுத்துகள்" (CAPITAL LETTERS) எனும் "பெரிய" ஆங்கில எழுத்துகளில்தான் இனி எழுதித் தர வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    நீண்ட காலமாகவே டாக்டர்கள் எழுதி தரும் மருந்துகளின் பெயர்கள் புரிவதில்லை எனும் கருத்தை பொதுமக்களும், மருந்தாளுனர்களும் (pharmacists) கூறி வந்தனர்.

    எடுத்துக் காட்டாக, செலின் (வைட்டமின் சி) மற்றும் செலிப் (மூட்டு அழற்சிக்கான மருந்து), மாலாக்வின் (மலேரியாவிற்கான மருந்து) மற்றும் மாஹாக்வின் (ஆன்டிபயாடிக்), அசூ (ஆன்டிபயாடிக்) மற்றும் அசாக்ஸ் (மனநலம்) போன்ற பல மருந்துகளின் பெயர்கள் ஒன்றுக்கொன்று ஒத்து போவதால், மருத்துவர்கள் அவற்றை அவசரமாக எழுதி தரும் போது மருந்தாளுனர்களால் அவற்றை புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது.

    இதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஒரு சில நோயாளிகள் தவறான மருந்தை உட்கொண்டதால் ஆபத்தான சிக்கல்களை சந்திக்க நேர்ந்த சம்பவங்கள் நடைபெற்றது.

    கடந்த சில வருடங்களாக இந்த புகார் தீவிரமடைந்து வந்த நிலையில், இது குறித்து தொடரப்பட்ட ஒரு வழக்கில் ஒடிசா உயர் நீதிமன்றம், மருத்துவர்கள் எழுதித் தரும் மருந்துகள் மற்றும் பரிந்துரைகள் உள்ளிட்டவை புரியும் வகையில் இருக்க வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவு பிறப்பித்து தீர்ப்பளித்தது.

    இதன் அடிப்படையில் தேசிய மருத்துவ கவுன்சில் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

    நோயாளிகளுக்கு புரியும் வகையில் மருந்துகளின் பெயர்களை எழுதித் தர வேண்டும் என்று மத்திய அரசும் ஏற்கனவே அறிவுறுத்தி வந்தது.

    இந்நிலையில், தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தாங்கள் எழுதித்தரும் மருந்துச்சீட்டில் இடம்பெறும் மருந்துகளின் பெயர்களை, நோயாளிகளுக்கு புரியும் வகையில், தெளிவாக, "கேப்பிட்டல்" எழுத்தில்தான் இனி எழுத வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்த செயல் சில நிமிடங்கள் மட்டுமே அதிகம் எடுக்கும் என்றும் இதன் மூலம் சரியான மருந்தை நோயாளிகள் எடுத்து கொள்வது உறுதி செய்யப்படும் என்பதால் மருத்துவர்கள் இதனை வரவேற்றுள்ளனர்.

    • அனைத்து மருந்து சீட்டுகள் மற்றும் மருத்துவ அறிக்கைகளை தெளிவான கையெழுத்தில் வழங்க வேண்டும்.
    • முடிந்தால் பெரிய எழுத்துகளில் அல்லது தட்டச்சு செய்யப்பட்ட வடிவத்தில் வழங்க வேண்டும் என்றார்.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநில ஐகோர்ட்டில் ஒருவர் தனது மகன் பாம்பு கடித்து இறந்துவிட்டதால் கருணைத் தொகை கேட்டு மனுதாக்கல் செய்தார்.

    வழக்கு விசாரணையின்போது அரசு சார்பில் இணைக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை தெளிவாக, புரிந்துகொள்ளும்படியாக இல்லை. இதனால் வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.கே.பனிகிரஹி, அந்த டாக்டரை ஆஜராக உத்தரவிட்டார். அதன்படி டாக்டர் காணொலி காட்சியில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து பாம்புக்கடி வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில் அவர் கூறியதாவது:

    அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் மருந்து சீட்டை கையால் எழுதுவதால் நோயாளிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.

    உடல் பிரேத பரிசோதனை அறிக்கை கூட கையால் எழுதுவதால் நீதிமன்றத்தில் சரியான முறையில் தாக்கல் செய்ய முடியவில்லை.

    அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் மருந்து சீட்டு, மருத்துவ அறிக்கை ஆகியவற்றை கையால் எழுதுவதை தவிர்த்து, முடிந்தால் பெரிய எழுத்துகளில் அல்லது கம்ப்யூட்டரில் டைப் செய்து தரவேண்டும் என ஒடிசா அரசு சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டார்.

    ×