search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prescriptions"

    • அனைத்து மருந்து சீட்டுகள் மற்றும் மருத்துவ அறிக்கைகளை தெளிவான கையெழுத்தில் வழங்க வேண்டும்.
    • முடிந்தால் பெரிய எழுத்துகளில் அல்லது தட்டச்சு செய்யப்பட்ட வடிவத்தில் வழங்க வேண்டும் என்றார்.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநில ஐகோர்ட்டில் ஒருவர் தனது மகன் பாம்பு கடித்து இறந்துவிட்டதால் கருணைத் தொகை கேட்டு மனுதாக்கல் செய்தார்.

    வழக்கு விசாரணையின்போது அரசு சார்பில் இணைக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை தெளிவாக, புரிந்துகொள்ளும்படியாக இல்லை. இதனால் வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.கே.பனிகிரஹி, அந்த டாக்டரை ஆஜராக உத்தரவிட்டார். அதன்படி டாக்டர் காணொலி காட்சியில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து பாம்புக்கடி வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில் அவர் கூறியதாவது:

    அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் மருந்து சீட்டை கையால் எழுதுவதால் நோயாளிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.

    உடல் பிரேத பரிசோதனை அறிக்கை கூட கையால் எழுதுவதால் நீதிமன்றத்தில் சரியான முறையில் தாக்கல் செய்ய முடியவில்லை.

    அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் மருந்து சீட்டு, மருத்துவ அறிக்கை ஆகியவற்றை கையால் எழுதுவதை தவிர்த்து, முடிந்தால் பெரிய எழுத்துகளில் அல்லது கம்ப்யூட்டரில் டைப் செய்து தரவேண்டும் என ஒடிசா அரசு சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டார்.

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் புரியாத கையெழுத்தில் மருந்து சீட்டு எழுதிக் கொடுத்த 3 டாக்டர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து கோர்ட் உத்தரவிட்டது. #UPDoctorsPoorHandwriting
    லக்னோ:

    பெரும்பாலன டாக்டர்கள் புரியாத கையெழுத்தில் மருந்து சீட்டுகள் மற்றும் மருத்துவ பரிசோதனை குறிப்புகளை எழுதுகின்றனர். தற்போது அது ஒரு பிரச்சினையாகவும், கிரிமினல் குற்றமாகவும் ஆகிவிட்டது.

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிதாபூர், உன்னாவோ, கோண்டா ஆகிய 3 மாவட்ட ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் டாக்டர்கள் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ குறிப்புகளும், மருத்து சீட்டுகளும் எழுதி கொடுத்தனர். ஆனால் அவர்களின் கையெழுத்து புரியவில்லை. இதனால் சரியாக மருந்து மாத்திரை வாங்க முடியவில்லை. வேறு இடத்தில் மேல்சிகிச்சை பெற முடியாமல் தவித்தனர்.

    இதையடுத்து டாக்டர் டி.பி.ஜெய்ஸ்வால் (உன்னாவோ) டாக்டர் பி.கே. கோயல் (சிதாபூர்) டாக்டர் ஆஷிஸ் சக்சேனா (கோன்டா) ஆகியோர் மீது அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நீதிபதிகள் அஜய்லாம்பா, சஞ்சய் ஹர் குலி ஆகியோர் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

    இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு புரியாத கையெழுத்தில் மருத்துவ குறிப்பு மற்றும் மருந்து சீட்டு எழுதிய 3 டாக்டர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர். அதை கோர்ட்டு நூலகத்தில் செலுத்தும் படியும் உத்தரவிட்டனர்.

    அதிக வேலைப்பழுவின் காரணமாகவே மருந்து சீட்டு மற்றும் மருத்துவ குறிப்பு எழுதுவதில் பிழைகள் ஏற்பட்டது. என விசாரணையின்போது டாக்டர்கள் தெரிவித்தனர். அதை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

    தெளிவான கையெழுத்தில் மருத்துவ குறிப்புகள் எழுதினால் மற்ற அனைத்து டாக்டர்கள் புரிந்துகொண்டு சிகிச்சை அளிக்க முடியும். கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் சில மருத்துவ குறிப்புகளை வக்கீல்கள் மற்றும் நீதிபதிகளால் கூட புரிந்து கொள்ள முடியவில்லை.

    எனவே அனைவருக்கும் புரியும்படி தெளிவான கையெழுத்துடன் மருத்துவ குறிப்புகள் எழுதுவது டாக்டர்களின் கடமை என்று தெரிவித்தனர். #UPDoctorsPoorHandwriting
    ×