என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒடிசா ஐகோர்ட்டு"

    • அனைத்து மருந்து சீட்டுகள் மற்றும் மருத்துவ அறிக்கைகளை தெளிவான கையெழுத்தில் வழங்க வேண்டும்.
    • முடிந்தால் பெரிய எழுத்துகளில் அல்லது தட்டச்சு செய்யப்பட்ட வடிவத்தில் வழங்க வேண்டும் என்றார்.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநில ஐகோர்ட்டில் ஒருவர் தனது மகன் பாம்பு கடித்து இறந்துவிட்டதால் கருணைத் தொகை கேட்டு மனுதாக்கல் செய்தார்.

    வழக்கு விசாரணையின்போது அரசு சார்பில் இணைக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை தெளிவாக, புரிந்துகொள்ளும்படியாக இல்லை. இதனால் வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.கே.பனிகிரஹி, அந்த டாக்டரை ஆஜராக உத்தரவிட்டார். அதன்படி டாக்டர் காணொலி காட்சியில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து பாம்புக்கடி வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில் அவர் கூறியதாவது:

    அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் மருந்து சீட்டை கையால் எழுதுவதால் நோயாளிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.

    உடல் பிரேத பரிசோதனை அறிக்கை கூட கையால் எழுதுவதால் நீதிமன்றத்தில் சரியான முறையில் தாக்கல் செய்ய முடியவில்லை.

    அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் மருந்து சீட்டு, மருத்துவ அறிக்கை ஆகியவற்றை கையால் எழுதுவதை தவிர்த்து, முடிந்தால் பெரிய எழுத்துகளில் அல்லது கம்ப்யூட்டரில் டைப் செய்து தரவேண்டும் என ஒடிசா அரசு சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டார்.

    • ஒடிசாவை சேர்ந்த பத்திரிகையாளரான அந்தர்யாமி மிஸ்ரா டெல்லிக்கு சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பத்மஸ்ரீ விருதை பெற்றார்.
    • ஒடியா மற்றும் பிற இந்திய மொழிகளில் 29 புத்தகங்களை எழுதி உள்ளேன்.

    கட்டாக்:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 2023-ம் ஆண்டு 106 பேருக்கு பத்ம விருதுகளை வழங்க ஒப்புதல் அளித்தார். விருது பெற்றவர்கள் பட்டியலில் இலக்கியம் மற்றும் கல்விக்கான பங்களிப்புக்காக ஒடிசாவை சேர்ந்த ஸ்ரீஅந்தர்யாமி மிஸ்ரா என்ற பெயர் பத்மஸ்ரீ விருதுக்காக 56-வது இடத்தில் இடம் பெற்றது. ஒடிசாவை சேர்ந்த பத்திரிகையாளரான அந்தர்யாமி மிஸ்ரா டெல்லிக்கு சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பத்மஸ்ரீ விருதை பெற்றார்.

    இதற்கிடையே ஒடியா மொழி இலக்கியவாதியும், டாக்டருமான அந்தர்யாமி மிஸ்ரா என்பவர் தனது பெயரில் உள்ள ஒருவர் தன்னை போல ஆள்மாறாட்டம் செய்து விருது பெற்றதாக கூறி ஒடிசா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

    அதில் அவர், ''ஒடியா மற்றும் பிற இந்திய மொழிகளில் 29 புத்தகங்களை எழுதி உள்ளேன். இதற்காக 2023-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களின் பட்டியலில் எனது பெயர் சேர்க்கப்பட்டது. இந்த விருது தவறுதலாக பத்திரிகையாளருக்கு வழங்கப்பட்டது. அவருக்கு இலக்கிய பங்களிப்புகள் எதுவும் இல்லை. விருது பெற்றவர் எந்த புத்தகமும் எழுதவில்லை. எனது பெயரில் உள்ளவர் ஆள்மாறாட்டம் செய்து விருது பெற்றார்'' என கூறியிருந்தார்.

    இந்த வழக்கு ஒடிசா ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, "அரசாங்கத்தின் கடுமையான சரிபார்ப்பு செயல்முறை இருந்தபோதிலும், ஒரே மாதிரியான பெயர்கள் காரணமாக குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தேர்வு செயல்முறையின் நம்பகத்தன்மை குறித்து கவலைகளை எழுப்புகிறது. விருது யாருக்கு என்பதை உறுதிப்படுத்த தாங்கள் எழுதிய அனைத்து புத்தகங்கள் மற்றும் பொருட்களுடன் இருவரும் வருகிற 24-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும்" என கூறி இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

    ×