search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மராத்தா இடஒதுக்கீடு"

    • ஜல்னா மாவட்டத்தில் அரசு பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டன.
    • பஸ் தீ வைப்பு சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் மீது நடவடிக்கை கோரி உள்ளூர் காவல் நிலையத்தில் அம்பாட் பஸ்டெப்போ மேலாளர் புகார் அளித்துள்ளார்.

    மகாராஷ்டிரா:

    மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசுக்கு எதிராக மகாராஷ்டிரா மாநிலத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தில் இன்று பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கை பராமரிக்க அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் இன்று காலையில் ஜல்னா மாவட்டத்தில் உள்ள தீர்த்தபுரி நகரின் சத்ரபதி சிவாஜி மஹராஜ் சவுக்கில் போராட்டக் குழுவினர் அரசு பஸ்சை தீ வைத்து எரித்தனர். இதில் அந்த பஸ் கொளுந்து விட்டு முழுவதும் எரிந்து நாசமானது.


    இதைதொடர்ந்து ஜல்னா மாவட்டத்தில் அரசு பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டன. இந்த சம்பவத்திற்குப் பிறகு, மறு அறிவிப்பு வரும் வரை பஸ்களை இயக்க மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (MSRTC)தடை விதித்துள்ளது. பஸ் தீ வைப்பு சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் மீது நடவடிக்கை கோரி உள்ளூர் காவல் நிலையத்தில் அம்பாட் பஸ்டெப்போ மேலாளர் புகார் அளித்துள்ளார்.

    தொடர்ந்து அங்கு நடைபெற்று வரும் போராட்டத்தையடுத்து சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அம்பாட் தாலுகாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • குன்பி சமூகத்தினருக்கு வழங்கும் சான்றிதழ் வழங்க வேண்டும்.
    • கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினரை ஓபிசி (மிகவும் பிற்படுத்தப்பட்டோர்) பட்டியலில் சேர்க்க வேண்டும் என அந்த சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுகுறித்து மகாராஷ்டிர மாநில அரசு ஆலோசித்த வந்த போதிலும் இறுதியான முடிவை எடுக்கவில்லை.

    இந்த நிலையில்தான் குன்பி இனத்தினருக்கு வழங்கும் சான்றிதழ் வழங்க வேண்டும். இலவசக் கல்வி வழங்க வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்திய மனோஜ் ஜராங்கே பாட்டீல் போராட்டத்தை அறிவித்தார்.

    அவருடன் ஆயிரக்காணக்கானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டக்குழுவினர் நேற்று நவிமும்பையை வந்தடைந்தனர். நவிமும்பையில் போராட்டக்காரர்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. எங்களது கோரிக்கைகள் ஏற்கடாவிடில், எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை நாங்கள் நாட்டுவோம் என மனோஜ் ஜராங்கே தெரிவித்திருந்தார்.

    இந்த நிலயைில் இரண்டு மந்திரிகள் நேற்றிரவு மனோஜ் ஜராங்கே உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் இன்று காலை 9.30 மணியளவில், மகாராஷ்டிர மாநில அரசு அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுள்ளது. போராட்டம் நிறைவு பெறுகிறது என அறிவித்தார்.

    மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேரில் வந்து மனோஜ் ஜராங்கேயின் போராட்டத்தை முடித்து வைப்பார் எனத் தெரிகிறது.

    தற்போது வரை மகாராஷ்டிரா மாநிலத்தில் குன்பி சான்றிதழ் 37 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் அதன் எண்ணிக்கை 50 லட்சமாக உயரும்.

    ×