என் மலர்
நீங்கள் தேடியது "Maratha Reservation"
- மும்பை ஆசாத் மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
- அவருக்கு ஆதரவாக மராத்தா ஆதரவாளர்கள் மும்பை தெருக்களில் போராட்டம் நடத்தினர்.
மும்பை:
மராத்தாக்களுக்கு ஓபிசி பிரிவில் 10 சதவீத இடஒதுக்கீடு கோரி சமூக ஆர்வலர் மனோஜ் ஜரங்கே போராட்டம் நடத்தி வருகிறார்.
இவர் ஆகஸ்ட் 29-ம் தேதி முதல் மும்பை ஆசாத் மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அவருக்கு ஆதரவு தெரிவித்து மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து வந்துள்ள மராத்தா ஆதரவாளர்கள் மும்பை தெருக்களில் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே, ஆசாத் மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் மனோஜ் ஜராங்கேவை மாநில அமைச்சர் உதய் சாமந்த நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், எங்கள் கோரிக்கையை அரசு ஏற்றுள்ளது எனக்கூறிய மனோஜ் ஜராங்கே ஜூஸ் குடித்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக, மனோஜ் ஜராங்கே கூறுகையில், எங்களுக்கு இன்று தீபாவளி. ஏனெனில் நாங்கள் விரும்பியதைப் பெற்றுள்ளோம். இட ஒதுக்கீடு கோரி நடைபெற்ற மராத்தா போராட்டம் வெற்றி அடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
- அனைத்து விதிகளும் மீறப்படுகின்றன என்றும் நீதிமன்றம் குற்றம்சாட்டியது.
- நிலைமையை உடனடியாக சரிசெய்ய ஜரங்கே மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு நாங்கள் ஒரு வாய்ப்பை வழங்குகிறோம்.
மராத்தாக்களுக்கு ஓபிசி பிரிவில் 10 சதவீத இடஒதுக்கீடு கோரி சமூக ஆர்வலர் மனோஜ் ஜரங்கே நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. மனோஜ் ஜாரங்கி ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் மும்பை ஆசாத் மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அவருக்கு ஆதரவு தெரிவித்து மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து வந்துள்ள மராத்தா ஆதரவாளர்கள் மும்பை தெருக்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் மும்பை நகரின் அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசலால் நிரம்பி வழிந்தன. ரெயில் நிலையங்கள் உட்பட அங்கங்கே வன்முறை மற்றும் கலவரமான சூழலும் நிலவியது.
இந்நிலையில் மும்பை உயர் நீதிமன்றம் இதுகுறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.
நேற்று (திங்கள்கிழமை) நடந்த விசாரணையில், போராட்டங்கள் அமைதியாக நடத்தப்படவில்லை என்றும், அனைத்து விதிகளும் மீறப்படுகின்றன என்றும் நீதிமன்றம் குற்றம்சாட்டியது.
இதுதொடர்பான மனுவை விசாரித்த நீதிபதிகள் ரவீந்திர குகே மற்றும் கவுதம் அன்காட் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, "
போராட்டக்காரர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆசாத் மைதானத்தில் அல்லாமல் ஏன் வெளியே சுற்றுகிறார்கள். ஐகோர்ட்டு கட்டிடம் கூட போராட்டக்காரர்களால் சூழப்பட்டுள்ளது.
'நீதிபதிகள், வக்கீல்கள் செல்லும் நுழைவு வாயில் மறிக்கப்பட்டது. நீதிபதிகளின் கார் மறிக்கப்பட்டு விசாரணைக்கு வருவது தடுக்கப்பட்டது. ஒட்டுமொத்த நகரரும் ஸ்தம்பித்துள்ளது.
நிலைமையை உடனடியாக சரிசெய்ய ஜரங்கே மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு நாங்கள் ஒரு வாய்ப்பை வழங்குகிறோம்.
செவ்வாய்க்கிழமை பிற்பகலுக்குள் அனைத்து தெருக்களும் காலி செய்யப்பட வேண்டும். அனைத்து சாலைகளும் சுத்தம் செய்யப்பட வேண்டும்" என்று உத்தரவிட்டது.
- 2021ல் உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீடு சட்டம் செல்லாது என தீர்ப்பு வழங்கியது
- அனைத்து மராட்டியர்களுக்கும் இட ஒதுக்கீடு கோரி வருகிறார் மனோஜ்
மகாராஷ்டிரா மாநிலத்தில் மராட்டியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி சில வருடங்களுக்கு முன் போராட்டங்கள் நடைபெற்றது. இதையடுத்து மராட்டியர்கள் இட ஒதுக்கீடு பெறும் வகையில் அங்கு ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது.
2021 மே மாதம், உச்ச நீதிமன்றம் இச்சட்டத்தை செல்லாது என தீர்ப்பளித்தது.
இட ஒதுக்கீட்டுக்கான கோரிக்கை அவ்வப்போது அங்கு கிளம்பி வந்த நிலையில், மீண்டும் மனோஜ் ஜராங்கே-பாட்டீல் என்பவர் தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது. அனைத்து மராட்டியர்களுக்கும் இட ஒதுக்கீடு கோரி அக்டோபர் 25 முதல் உண்ணாவிரதம் இருந்து வந்த மனோஜ் உடன், இன்று மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தொலைபேசியில் பேசி இவ்விவகாரத்தில் நல்ல முடிவு எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து மனோஜ், நீர் அருந்தி விரதத்தை நிறைவு செய்தார்.
மராட்டியர்களில் விவசாயத்தில் ஈடுபட்டு வரும் குன்பிஸ் எனப்படும் பிரிவினருக்கு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. ஆனால், மனோஜ் இதனை ஏற்க மறுத்து போராடி வருகிறார்.
அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:
முழுமையற்ற இட ஒதுக்கீட்டை ஏற்க முடியாது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மராட்டியர்களும் பயன்பெறும் வகையில் இட ஒதுக்கீடு வேண்டும். இதற்காக ஒரு சிறப்பு கூட்டத்தை கூட்டி அரசு ஒரு தீர்மானம் இயற்ற வேண்டும். இது குறித்து மேலும் ஆலோசிக்க நிபுணர்கள் கூட்டம் ஒன்று நடத்த உள்ளோம். மராட்டியர்கள் அமைதி வழியில் இதற்காக போராடுகின்றனர். இது நிறைவேறும் வரையில் அரசியல் தலைவர்கள் கிராமங்களுக்கு வருவதை நாங்கள் எதிர்க்கிறோம். தற்போது பந்த நடத்தும் எண்ணம் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி நாசிக் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கோட்சே ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும், ஹிங்கோலி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹேமந்த பாட்டீல் மக்களவை செயலக அலுவலகத்திற்கும் அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கேபினெட் கூட்டத்தை கூட்டினார். இதில் பிற்படுத்தப்பட்டவர்களின் தற்போதைய கல்வி மற்றும் சமுதாய நிலை குறித்த தகவல்களை திரட்ட பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆய்வு செய்யும் என முடிவானது.
- ஜல்னா மாவட்டத்தில் அரசு பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டன.
- பஸ் தீ வைப்பு சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் மீது நடவடிக்கை கோரி உள்ளூர் காவல் நிலையத்தில் அம்பாட் பஸ்டெப்போ மேலாளர் புகார் அளித்துள்ளார்.
மகாராஷ்டிரா:
மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசுக்கு எதிராக மகாராஷ்டிரா மாநிலத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தில் இன்று பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கை பராமரிக்க அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலையில் ஜல்னா மாவட்டத்தில் உள்ள தீர்த்தபுரி நகரின் சத்ரபதி சிவாஜி மஹராஜ் சவுக்கில் போராட்டக் குழுவினர் அரசு பஸ்சை தீ வைத்து எரித்தனர். இதில் அந்த பஸ் கொளுந்து விட்டு முழுவதும் எரிந்து நாசமானது.

இதைதொடர்ந்து ஜல்னா மாவட்டத்தில் அரசு பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டன. இந்த சம்பவத்திற்குப் பிறகு, மறு அறிவிப்பு வரும் வரை பஸ்களை இயக்க மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (MSRTC)தடை விதித்துள்ளது. பஸ் தீ வைப்பு சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் மீது நடவடிக்கை கோரி உள்ளூர் காவல் நிலையத்தில் அம்பாட் பஸ்டெப்போ மேலாளர் புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து அங்கு நடைபெற்று வரும் போராட்டத்தையடுத்து சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அம்பாட் தாலுகாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டங்களின்போது பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்களும் நடந்தேறின. இடஒதுக்கீட்டு கோரிக்கைக்காக சிலர் உயிரையும் மாய்த்துள்ளனர்.

வாலிபர் இந்தாயித்தின் தற்கொலைக் குறிப்பு சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஜல்னா சாலையில் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் சாலையை மறித்ததுடன், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் மராத்தா இடஒதுக்கீட்டு கோரிக்கைக்காக 6 பேர் தற்கொலை செய்துள்ளனர். #MarathaReservation #MarathaQuotaStir







