search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மன்னார் வளைகுடா"

    • வெப்ப உணர்திறன் கொண்ட பவளப்பாறைகளின் அழிவுடன் 60 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது.
    • மன்னார் வளைகுடாவில் 2005-ம் ஆண்டில் 37 சதவீதமாக இருந்த பவளப்பாறைகளின் எண்ணிக்கை 2021-ம் ஆண்டில் 27.3 சதவீதமாக குறைந்துள்ளது.

    சென்னை:

    அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் ஆய்வு நிறுவனம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பவளப்பாறைகள் குறித்த அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-

    தமிழகத்தில் உள்ள மன்னார் வளைகுடா கடல் மேற்பரப்பின் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருப்பதால் அங்குள்ள பவளப்பாறைகள் அழியும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சுழல் அமைப்பு சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டில் இதேபோன்று மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 16 சதவீதம் பவளப்பாறைகள் அழிந்தன.

    மன்னார் வளைகுடாவில் உள்ள இந்த பூங்கா 132 வகையான பவளப்பாறைகளின் தாயகமாகவும், உலகின் பணக்கார பல்லுயிர் உருவாக்கங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. தமிழகம் ஏற்கனவே வறண்ட வானிலையில் சிக்கித் தவிக்கும் நிலையில், ஈரப்பதமான காற்று மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வெப்பம் மற்றும் அசவுகரியமான வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த செவ்வாய்க்கிழமை வெப்ப நிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மாநிலத்தின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பசிபிக் பெருங்கடலில் வெப்ப அலை நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உலகளாவிய வானிலை மாதிரியும் 2024 வெப்பமான ஆண்டாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

    இந்த ஆண்டு 30 டிகிரி செல்சியஸ் மற்றும் 33 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேலும் இருக்கலாம் என்று கடலியல் ஆராய்ச்சியாளர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர். இதுபோன்ற கடுமையான நிலைமைகள் நீடித்தால், அது பெரும்பாலான பவளப்பாறை இனங்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது.

    வளைகுடா பகுதிகளில் பவளப்பாறைகளை தீவிரமாக கண்காணிக்கும் தூத்துக்குடியை சேர்ந்த கடல் ஆராய்ச்சியாளர் சுகந்தி தேவதாசன் என்பவர் கூறுகையில், வெப்ப உணர்திறன் கொண்ட பவளப்பாறைகளின் அழிவுடன் 60 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்திய பவளப்பாறைகளில், லட்சத்தீவு மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மே கடைசி வாரம் முதல் ஜூன் இரண்டாவது வாரம் வரை எச்சரிக்கை நிலை-2 விடுக்கப்பட்டுள்ளது. அந்த மானின் சில பகுதிகள் மற்றும் நிக்கோபார் தீவுகள் எச்சரிக்கை நிலை-1 விடப்பட்டுள்ளது.

    காற்று, மழை, சூறாவளி போன்ற உள்ளூர் காலநிலை நிலைமைகளின் மாறுபாடுகளைப் பொறுத்து இந்த கணிப்புகளில் குறையவோ, அதிகரிக்கவோ வாய்ப்புள்ளது என்று எஸ்.டி.எம்.ஆர்.ஐ.யின் இணை பேராசிரியர் திராவிய ராஜ் கூறினார். அண்மையில் முடிவடைந்த தமிழ்நாடு பருவநிலை உச்சி மாநாடு 2.0-ன் போது, மன்னார் வளைகுடாவின் பவளப்பாறைகளில் பெருமளவு மாற்றங்கள் நிகழும் என்று தெரிவிக்கப்பட்டது.

    மன்னார் வளைகுடாவில் 2005-ம் ஆண்டில் 37 சதவீதமாக இருந்த பவளப்பாறைகளின் எண்ணிக்கை 2021-ம் ஆண்டில் 27.3 சதவீதமாக குறைந்துள்ளது. வெப்பம் உள்ளிட்ட பருவநிலை மாற்றங்களுக்கு பிறகு படிப்படியாக அதன் பாதிப்பு நிலை மாறியது. இதன் மூலம் மன்னார் வளைகுடா பவளப்பாறைகள் பாதுகாப்புடன் இருப்பதை காட்டியது.

    இருப்பினும், 2010 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் அதிகப்படியான பவளப்பாறைகள் அழிந்தன. 2005 ஆம் ஆண்டில் 1,11,060 ஹெக்டேராக இருந்த பவளப்பாறை பகுதி 2021-ம் ஆண்டில் 6,628 ஹெக்டேராக குறைந்துள்ளது. பவளப்பாறை பகுதிகளாக இருந்த பல பகுதிகள் இப்போது முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் 6,628 ஹெக்டேரில், 2,631 ஹெக்டேர் தற்போது சீரழிந்த நிலையில் உள்ளது.

    அமெரிக்க ஆய்வு நிறுவனம் கணித்தபடி மன்னார் வளைகுடாவில் இன்னொரு பவள வெளுப்பு நிகழ்வு ஏற்பட்டால், உயிருள்ள பவளப்பாறைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    • கடலோர காவல்படையினரை கண்ட கடத்தல்காரர்கள் வேறு வழியின்றி படகை நடுக்கடலிலேயே விட்டுவிட்டு கடலில் குதித்து நீந்தி தப்பினர்.
    • நீரில் மூழ்கி பொருட்களை மீட்டு வரும் ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் அந்தப்பகுதியில் தேடுதல் வேட்டையை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மன்னார் வளைகுடா கடல் வழியாக அடிக்கடி கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மருந்து பொருட்கள், போதை பொருட்கள், அரியவகை கடல் அட்டைகள், தங்க கட்டிகள் போன்றவற்றை படகுகள் மூலமாக கடத்தல்காரர்கள் இந்தியா-இலங்கை இடையே கடத்த முயன்று வருகின்றனர்.

    இந்திய கடலோர காவல் படையினரும், கடற்படையினரும் தீவிர ரோந்துப்பணி மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கடத்தல்காரர்களின் முயற்சிகளை அவ்வப்போது முறியடித்து வருகின்றனர். இருந்த போதிலும் இப்பகுதியில் தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

    இந்தநிலையில் மண்டபம் அருகே மன்னார் வளைகுடா பகுதியில் வேதாளை என்ற இடத்தில் 2 தினங்களுக்கு முன்பு கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகமளிக்கும் வகையில் படகு ஒன்றில் மர்மநபர்கள் சிலர் பொருட்களை கடத்தி வருவது தெரியவந்தது. அந்த படகை கடரோல காவல்படையினர் துரத்தி சென்று மடக்கினர். இதில் கடலோர காவல்படையினரை கண்ட கடத்தல்காரர்கள் வேறு வழியின்றி படகை நடுக்கடலிலேயே விட்டுவிட்டு கடலில் குதித்து நீந்தி தப்பினர்.

    அதற்கு முன்னதாக படகில் இருந்த சுமார் 10 கிலோ தங்க கட்டிகளை திரைப்பட பாணியில் கடலுக்குள் வீசிவிட்டு தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. இதில் கடலோர காவல்படையினர் நடத்திய விசாரணையில் 2 பேர் சிக்கினர். அவர்களிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கைப்பற்றிய படகிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் படகில் பொருட்கள் எதுவும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் கடலுக்குள் தங்க கட்டிகளை வீசி இருக்கலாம் என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது. இதனால் நீரில் மூழ்கி பொருட்களை மீட்டு வரும் ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் அந்தப்பகுதியில் தேடுதல் வேட்டையை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

    கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகள் 7 முதல் 10 கிலோ வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. நீர் மூழ்கி வீரர்கள் அவற்றை மீட்டு எடுத்து வந்த பிறகு தான் அதன் உண்மையான மதிப்பு தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று 3-வது நாளாக மண்டபம் அருகே மன்னார் வளைகுடா பகுதியில் தங்க கட்டிகள் வீசப்பட்ட பகுதியில் தீவிரமாக தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

    • மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த சூறைக்காற்றால் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • விசைப்படகுகள் மண்டபம் தெற்குவாடி, துறைமுகம் ஆகிய பகுதிகளில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி என இரண்டு கடல் பகுதிகள் உள்ளன. இதில், ராமேசு வரம், பாம்பன், மண்டபம், தேவிபட்டணம், சோழிய குடி, தொண்டி உள்ளிட்ட பகுதி மீனவர்கள் பாக்ஜல சந்தி கடல் பகுதியில் மீன் பிடி தொழிலில் ஈடுபடுகின் றனர். இதேபோன்று தனுஷ் கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, மூக்கை யூர் உள்ளிட்ட பகுதி மீன வர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர்.

    இந்நிலையில், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த சூறைக் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு அமையம் அறிவித்துள்ளது.

    இதனால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, மூக்கையூர் ஆகிய பகுதிகளில் இருந்து விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மீன் பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மன்னார் வளை குடா பகுதியில் மீன்பிடிக்க செல்லும் படகுகள் அந்தந்த துறைமுகங்களில் பாது காப்புடன் நிறுத்தப்பட்டுள் ளது.

    இதற்கிடையே மண்டபம் கடலோர பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மீன வர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் சுழற்சி முறையில் பாக்ஜலசந்தி கடலோர பகுதியிலும், மன்னார்வ ளைகுடா கடலோர பகுதியி லும் மீன்பிடிக்க செல்வது வழக்கம்.

    அதில் குறிப்பாக சாயல் குடி, தாமரைக்குளம், உச்சிப் புளி, புதுமடம், பிரப்பன்வ லசை, நொச்சியூரணி, சுந்தர முடையான், பிள்ளைமடம் பகுதிகளை சேர்ந்த மீனவர் கள் கடந்த 8-ந்தேதி கட லுக்கு சென்றுவிட்டு 9- ந்தேதி கரை திரும்பினர். தீபாவளியை முன்னிட்டு 2 நாட்கள் கடலுக்கு செல்ல வில்லை.

    இந்தநிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருவதால் வாரத் தின் முதல்நாளான நேற்று குறைந்த அளவிலேயே மீன வர்கள் கடலுக்கு சென்றனர். மற்ற விசைப்படகுகள் மண்டபம் தெற்குவாடி, துறைமுகம் ஆகிய பகுதிக ளில் நங்கூரமிட்டு நிறுத்தப் பட்டுள்ளன. 

    • தென்கடல் பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருகிறது.
    • தனுஷ்கோடியில் இன்று வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்பட்டது.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் தென்கடல் பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

    தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் தங்களின் படகுகளின் பாதுகாப்பு கருதி துறைமுகங்களில் நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 50 மீட்டர் வரை கடல் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் கரையோரம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் மணலில் சிக்கிக்கொண்டது. இதனை மீட்க முடியாத நிலையில் மீனவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மாலையில் கடல் நீர்மட்டம் உயர்ந்தவுடன் தான் படகை மீட்க முடியும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

    இதேபோல் தனுஷ்கோடியில் இன்று வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்பட்டது. சூறாவளி காற்று காரணமாக அரிச்சல்முனை-தனுஷ்கோடி சாலையை மணல் மூடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    • மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின தேசிய பூங்கா அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
    • கப்பல் அல்லது படகு ஏதேனும் ஒன்றில் மோதி முகத்தில் காயம் ஏற்பட்டதன் காரணமாக கடற்பசு இறந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கடற் பகுதி மன்னார் வளைகுடா கடற்பகுதி ஆகும். இங்கு அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. இதில் ஒன்று அரிய வகை கடல் பசுவாகும்.

    கடல் புற்களை மட்டுமே உணவாக உண்டு உயிர் வாழக் கூடியது. அரிய வகை கடல் பசுவை பாதுகாக்கும் வகையில் மீனவர்கள் பிடிக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று இரவு தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பகுதியில் அரிய வகை கடல் பசு ஒன்று இறந்து அழுகிய நிலையில் கரை ஒதுங்கி உள்ளது.

    முத்துநகர் கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் கடல் பசு கரையில் இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின தேசிய பூங்கா அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின தேசிய பூங்கா வனத்துறை அலுவலர்கள் இன்று காலை முத்துநகர் கடற்கரைக்கு வந்து இறந்து கிடந்த அரியவகை கடல் பசுவை கால்நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்தனர்.

    இதில் இந்த அரியவகை கடற்பசு சுமார் 7 அடி நீளமும் 80 முதல் 100 கிலோ எடை கொண்டதாகவும் இருப்பது தெரிய வந்தது. மேலும் நான்கு முதல் ஐந்து வயது வரை இந்த கடற்பசுவுக்கு இருக்கலாம் என தெரியவந்தது.

    மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் கப்பல் அல்லது படகு ஏதேனும் ஒன்றில் மோதி முகத்தில் காயம் ஏற்பட்டதன் காரணமாக கடற்பசு இறந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

    இதை அடுத்து மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின தேசிய பூங்கா அலுவலர்கள் முத்து நகர் கடற்கரை பகுதியிலேயே இறந்த கடல் பசுவை பாதுகாப்பாக மண்ணில் புதைத்தனர். 

    ×