search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடல் பகுதி"

    • வெப்ப உணர்திறன் கொண்ட பவளப்பாறைகளின் அழிவுடன் 60 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது.
    • மன்னார் வளைகுடாவில் 2005-ம் ஆண்டில் 37 சதவீதமாக இருந்த பவளப்பாறைகளின் எண்ணிக்கை 2021-ம் ஆண்டில் 27.3 சதவீதமாக குறைந்துள்ளது.

    சென்னை:

    அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் ஆய்வு நிறுவனம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பவளப்பாறைகள் குறித்த அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-

    தமிழகத்தில் உள்ள மன்னார் வளைகுடா கடல் மேற்பரப்பின் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருப்பதால் அங்குள்ள பவளப்பாறைகள் அழியும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சுழல் அமைப்பு சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டில் இதேபோன்று மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 16 சதவீதம் பவளப்பாறைகள் அழிந்தன.

    மன்னார் வளைகுடாவில் உள்ள இந்த பூங்கா 132 வகையான பவளப்பாறைகளின் தாயகமாகவும், உலகின் பணக்கார பல்லுயிர் உருவாக்கங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. தமிழகம் ஏற்கனவே வறண்ட வானிலையில் சிக்கித் தவிக்கும் நிலையில், ஈரப்பதமான காற்று மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வெப்பம் மற்றும் அசவுகரியமான வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த செவ்வாய்க்கிழமை வெப்ப நிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மாநிலத்தின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பசிபிக் பெருங்கடலில் வெப்ப அலை நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உலகளாவிய வானிலை மாதிரியும் 2024 வெப்பமான ஆண்டாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

    இந்த ஆண்டு 30 டிகிரி செல்சியஸ் மற்றும் 33 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேலும் இருக்கலாம் என்று கடலியல் ஆராய்ச்சியாளர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர். இதுபோன்ற கடுமையான நிலைமைகள் நீடித்தால், அது பெரும்பாலான பவளப்பாறை இனங்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது.

    வளைகுடா பகுதிகளில் பவளப்பாறைகளை தீவிரமாக கண்காணிக்கும் தூத்துக்குடியை சேர்ந்த கடல் ஆராய்ச்சியாளர் சுகந்தி தேவதாசன் என்பவர் கூறுகையில், வெப்ப உணர்திறன் கொண்ட பவளப்பாறைகளின் அழிவுடன் 60 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்திய பவளப்பாறைகளில், லட்சத்தீவு மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மே கடைசி வாரம் முதல் ஜூன் இரண்டாவது வாரம் வரை எச்சரிக்கை நிலை-2 விடுக்கப்பட்டுள்ளது. அந்த மானின் சில பகுதிகள் மற்றும் நிக்கோபார் தீவுகள் எச்சரிக்கை நிலை-1 விடப்பட்டுள்ளது.

    காற்று, மழை, சூறாவளி போன்ற உள்ளூர் காலநிலை நிலைமைகளின் மாறுபாடுகளைப் பொறுத்து இந்த கணிப்புகளில் குறையவோ, அதிகரிக்கவோ வாய்ப்புள்ளது என்று எஸ்.டி.எம்.ஆர்.ஐ.யின் இணை பேராசிரியர் திராவிய ராஜ் கூறினார். அண்மையில் முடிவடைந்த தமிழ்நாடு பருவநிலை உச்சி மாநாடு 2.0-ன் போது, மன்னார் வளைகுடாவின் பவளப்பாறைகளில் பெருமளவு மாற்றங்கள் நிகழும் என்று தெரிவிக்கப்பட்டது.

    மன்னார் வளைகுடாவில் 2005-ம் ஆண்டில் 37 சதவீதமாக இருந்த பவளப்பாறைகளின் எண்ணிக்கை 2021-ம் ஆண்டில் 27.3 சதவீதமாக குறைந்துள்ளது. வெப்பம் உள்ளிட்ட பருவநிலை மாற்றங்களுக்கு பிறகு படிப்படியாக அதன் பாதிப்பு நிலை மாறியது. இதன் மூலம் மன்னார் வளைகுடா பவளப்பாறைகள் பாதுகாப்புடன் இருப்பதை காட்டியது.

    இருப்பினும், 2010 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் அதிகப்படியான பவளப்பாறைகள் அழிந்தன. 2005 ஆம் ஆண்டில் 1,11,060 ஹெக்டேராக இருந்த பவளப்பாறை பகுதி 2021-ம் ஆண்டில் 6,628 ஹெக்டேராக குறைந்துள்ளது. பவளப்பாறை பகுதிகளாக இருந்த பல பகுதிகள் இப்போது முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் 6,628 ஹெக்டேரில், 2,631 ஹெக்டேர் தற்போது சீரழிந்த நிலையில் உள்ளது.

    அமெரிக்க ஆய்வு நிறுவனம் கணித்தபடி மன்னார் வளைகுடாவில் இன்னொரு பவள வெளுப்பு நிகழ்வு ஏற்பட்டால், உயிருள்ள பவளப்பாறைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    • மக்கள் இங்கு வந்து குளித்து விட்டு செல்வது வழக்கம்.
    • மக்கள் அனுமதி கிடையாது என மரக்காணம் கடலோர காவல் படையினர் அறிவித்துள்ளார்கள் .

    விழுப்புரம்: 

    மரக்காணம் அருகே தீர்த்தவாரி கடற்கரை உள்ளது. இப்பகுதி மக்கள் இங்கு வந்து குளித்து விட்டு செல்வது வழக்கம். மாண்டஸ் புயல் கரையை கடந்தாலும் அதன் தாக்கத்தால் கடலி்ல் சீற்றம் குறையவில்லை. இதனால் மீனவர்களே மீன் பிடிக்க கடலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் மரக்காணம் தீர்த்தவாரி கடலில் குளிப்பதற்கும், பார்வையிடவும் நேற்று சுற்றுவட்டார கிராம மக்கள் ஆட்டோ, மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    கடலின் சீற்றம் அதிகமாக இருப்பதால் கடலோர காவல் படையினர் தடை விதித்திருந்தனர். தடையை மீறி அங்கு பொதுமக்கள் வருவதை கண்ட கடலோர காவல் படையினர் இ.சி.ஆர்.-ல் பேரிகார்டுகள் வைத்து பொதுமக்களை ஏற்றி வந்த ஆட்டோ, கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் திருப்பி அனுப்பினர். மேலும், ஏற்கனவே தீர்த்தவாரி கடல் பகுதிக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்தி கடல் சீற்றத்தால் அலைகள் ஆர்பரித்து வருகின்றன. இதனால் கடற்கரை ஆழமாக இருப்பதால் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவே அனுமதி கிடையாது என்று அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர். மேலும், இந்த வாரம் முழுவதும் தீர்த்தவாரி கடல் பகுதிக்கு பொது மக்கள் அனுமதி கிடையாது என மரக்காணம் கடலோர காவல் படையினர் அறிவித்துள்ளார்கள் 

    ×