search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை விமான நிலையம்"

    • மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை-மகா. சுசீந்திரன் பேசியதாக ஆடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • மதுரை விமான நிலையத்துக்கு எத்தனை பேர் இருந்தாலும் அழைத்து வாருங்கள் என்று அண்ணாமலை பேசுவதாக குரல் பதிவாகி உள்ளது.

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் கார் மீது, பா.ஜ.க. நிர்வாகிகள் செருப்பு வீசி தாக்குதல் நடத்தினர்.

    இந்த நிலையில் மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவராக இருந்த சரவணன், திடீரென்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை சந்தித்து பேசினார். அவரை பா.ஜ.க. மேலிடம் பதவி நீக்கம் செய்தது. மதுரை மாநகர் மாவட்ட புதிய பா.ஜ.க. தலைவராக உள்ள மகா சுசீந்திரன் நியமிக்கப்பட்டடார்.

    இந்த நிலையில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை-மகா. சுசீந்திரன் பேசியதாக ஆடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அதில் "நான் மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் உடலுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு, மாஸ் ஆக-கிராண்ட் ஆக இருக்க வேண்டும். இந்த விஷயத்தை எப்படி அரசியல் பண்ணுவது? என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். நிச்சயமாக அரசியல் பண்ணி விடுவோம். மதுரை விமான நிலையத்துக்கு எத்தனை பேர் இருந்தாலும் அழைத்து வாருங்கள்" என்று அண்ணாமலை பேசுவதாக குரல் பதிவாகி உள்ளது.

    எனவே மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மீதான செருப்பு வீச்சு தாக்குதல், திட்டமிட்டு நடத்தப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையே சமூக வலைதளத்தில் வெளியான ஆடியோவுக்கு, மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    மதுரை மாவட்ட பா.ஜ.க பொதுச்செயலாளர் சந்தோஷ் சுப்பிரமணியன் தலைமையில் நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க திட்டமிட்டு உள்ளனர். அதில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை-மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா. சுசீந்திரன் பேசுவது போல யாரோ சிலர் போலியான ஆடியோவை சமூக வலைத் தளங்களில் பரப்பி வருகின்றனர்.

    இந்த விஷயத்தில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி, இதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இன்ஸ்பெக்டர் துருவ்குமார் ராய் பணியில் இருந்தபோது துப்பாக்கியை தவறுதலாக கையாண்டதாக விசாரணையில் தெரியவந்தது.

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் இருந்து உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு நாள்தோறும் 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கீழ் உள்ள மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்காக 100-க்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆயுத கட்டிடத்தில் இன்ஸ்பெக்டர் துருவ்குமார் ராய் இரவு பணியை முடித்துவிட்டு 9 எம்.எம். தோட்டா வகை துப்பாக்கியை அலுவலகத்தில் ஒப்படைத்தார். அப்போது அந்த துப்பாக்கி எதிர்பாரதவிதமாக வெடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பார்த்தபோது தொழில் நுட்ப கோளாறு காரணமாக துப்பாக்கி தன்னிச்சையாக வெடித்தது தெரியவந்தது. இதனால் யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை.

    துப்பாக்கி வெடித்ததால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் துருவ்குமார் ராய் துப்பாக்கியை தவறுதலாக கையாண்டதாகவும், இதன் காரணமாக துப்பாக்கி வெடித்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து சென்னையில் உள்ள சி.ஐ.எஸ்.எப்.டி. ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.

    ×