search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண்டல கூட்டம்"

    • தேர்தலை எதிர் கொள்வது போன்ற ஆலோசனைகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
    • பொது மக்களின் குறைகளை அரசு அதிகாரிகளிடம் தெரியப்படுத்த வேண்டும்.

    அவினாசி :

    பா.ஜ.க., அவினாசி நகர மண்டல கூட்டம் அவினாசி சக்தி நகரில் உள்ள அரங்கில் நடந்தது. இதில்சிறப்பு விருந்தினராக ஈரோடு மாவட்ட பொதுசெயலாளர் ருத்ரசாமி கலந்து கொண்டு ஆய்வு மேற்க்கொண்டார், நகர நிர்வாகிகள், கிளை தலைவர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், ஆகியோர்களின் செயல்பாடுகளை ஆய்வு நடத்தி வரும் காலங்களில் கட்சியினரின் செயல்பாடு, பொது மக்களின் குறைகளை அரசு அதிகாரிகளிடம் தெரியப்படுத்துவது, தேர்தலை எதிர் கொள்வது போன்ற ஆலோசனைகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் அவினாசி நகர தலைவர் தினேஷ்குமார், நகர பார்வையாளர் உதயகுமார், பொதுசெயலாளர்கள் விஜயகுமார், மோகன்குமார், நகர பொருளாளர் ரமேஷ்குமார், துணை தலைவர்கள் பாலகிருஷ்ணன், நந்தகுமார், சித்ரா, விஜயலட்சுமி, நகர செயலாளர்கள் தனசேகரன்,பைரவன் உட்பட நகர,அணி, நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

    மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல கூட்டத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    திருப்பரங்குன்றம்

    மதுரை திருப்பரங்கு ன்றத்தில் மாநகராட்சியின்  மேற்கு மண்டல கவுன்சிலர்கள் கூட்டம் இன்று நடந்த. மண்டல தலைவர் சுவிதா விமல் தலைமை வகித்தார். உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார். மேயர் இந்திராணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். 

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில், பொதுமக்கள் குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள்கேட்டு கோரிக்கை வைக்கின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் நாங்கள் கூறினால் நடவடிக்கை எடுப்பதில்லை. மேலும் பல இடங்களில் குப்பைகள் அள்ளாததால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. 

    சில இடங்களில் அதிகாரிகள் தூய்மைப் பணியாளர்கள் சரிவர பணிக்கு வருவதில்லை வராமலேயே வருகைப்பதிவேட்டில் வந்ததாக தெரிவிக்க ப்படுகிறது. எனவே இது போன்ற முறைகேடுகளை தவிர்த்து பொது மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தரவேண்டும் என தெரிவித்தனர். 

    இதற்கு மேயர் இந்திராணி பதில் அளித்து பேசுகையில், கவுன்சிலர்கள் பொது மக்களின் அடிப்படை தேவைகளை கோரிக்கையாக வைக்கின்றனர். அவர்களது கோரிக்கையை அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும். அப்படி செய்தால்தான் அவர்களால் மீண்டும் மக்களை சந்திக்க முடியும். மக்களுக்கு தேவையான குடிநீர் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தையும் அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றார். 

    இதில் கவுன்சிலர்கள் இந்திராகாந்தி, விஜயா, கருப்பசாமி, சிவசக்தி ரமேஷ், ரவிச்சந்திரன், ஸ்வேதா சத்யன், இன்குலாப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல கூட்டத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    திருப்பரங்குன்றம்

    மதுரை திருப்பரங்கு ன்றத்தில் மாநகராட்சியின்  மேற்கு மண்டல கவுன்சிலர்கள் கூட்டம் இன்று நடந்த. மண்டல தலைவர் சுவிதா விமல் தலைமை வகித்தார். உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார். மேயர் இந்திராணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். 

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில், பொதுமக்கள் குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள்கேட்டு கோரிக்கை வைக்கின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் நாங்கள் கூறினால் நடவடிக்கை எடுப்பதில்லை. மேலும் பல இடங்களில் குப்பைகள் அள்ளாததால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. 

    சில இடங்களில் அதிகாரிகள் தூய்மைப் பணியாளர்கள் சரிவர பணிக்கு வருவதில்லை வராமலேயே வருகைப்பதிவேட்டில் வந்ததாக தெரிவிக்க ப்படுகிறது. எனவே இது போன்ற முறைகேடுகளை தவிர்த்து பொது மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தரவேண்டும் என தெரிவித்தனர். 

    இதற்கு மேயர் இந்திராணி பதில் அளித்து பேசுகையில், கவுன்சிலர்கள் பொது மக்களின் அடிப்படை தேவைகளை கோரிக்கையாக வைக்கின்றனர். அவர்களது கோரிக்கையை அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும். அப்படி செய்தால்தான் அவர்களால் மீண்டும் மக்களை சந்திக்க முடியும். மக்களுக்கு தேவையான குடிநீர் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தையும் அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றார். 

    இதில் கவுன்சிலர்கள் இந்திராகாந்தி, விஜயா, கருப்பசாமி, சிவசக்தி ரமேஷ், ரவிச்சந்திரன், ஸ்வேதா சத்யன், இன்குலாப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×