என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுன்சிலர்கள் கோரிக்கை"

    • கவுன்சிலர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றபடும் என்று தலைவர் லதாஅண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
    • முடிவில் மேலாளர் தவ மணி நன்றி கூறினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியகுழு கூட்டம் ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை தலைமை யில் நடைபெற்றது. ஆணை யாளர் சாந்தி வரவேற்றார்.

    கூட்டத்தில் முதல் தீர்மானமாக கீழடி அருங்காட்சிய கத்தை திறந்து வைத்த தற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டு உள்ளது.

    கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. கவுன்சிலர் முருகேசன் பேசும்போது, கீழபசலை ஊராட்சிக்கு உட்பட்ட அரசனேந்தல் சாலையை சீரமைக்க வேண் டும்.

    கீழபசலை நடுநிலைப் பள்ளி சுற்றுச்சுவரை உடனே கட்டித் தர வேண்டும். எம்.கரிசல்குளம் பகுதியில் இருந்து பார்த்திபனூர் மதகு அணை வரை மோச மான சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    இதே போல் மற்ற கவுன்சிலர்களும் தங்களது பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து வலியுறுத்தினர்.

    தலைவர் லதா அண்ணா துரை பேசும்போது, கூட்டத்தில் கவுன்சி லர்கள் தெரிவித்த கோரிக்கைகள் மற்றும் திட்ட பணிகள் கண்டிப்பாக நிறைவேற்றி தரப்படும் என்றார். முடிவில் மேலாளர் தவ மணி நன்றி கூறினார்.

    • திருப்புல்லாணி யூனியன் கூட்டத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • அதனை தொடர்ந்து 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் ஒன்றியக்குழு தலைவர் புல்லாணி தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி மற்றும் துணைத்தலைவர் சிவலிங்கம் முன்னிலையில் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரணக் கூட்டம் நடைபெற்றது.

    தொடக்கத்தில் ஒன்றிய குழு தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் வரவேற்று கோரிக்கைகளை தெரிவிக்குமாறு கூறினார்.

    இந்த கூட்டத்திற்கு கீழக்கரை மின்வாரி யத்துறையில் இருந்தும் கல்வித்துறையில் இருந்தும் எந்த ஒரு அதிகாரியும் கலந்து கொள்வதில்லை என்று கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.

    மக்களின் நிறைகுறைகளை கூட்டத்தில் தெரி விப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வராதது வருத்தம் அளிப்பதாக உள்ளது. மேலும் முறையாக தகவல் கொடுத்தும் ஒன்றிய குழு கூட்டத்தை புறக்கணிக்கும் கீழக்கரை மின்வாரியத்துறை அதிகாரிகள் மீதும் கல்வித்துறை அதிகா ரிகள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றுமாறு அனைத்து கவுன்சிலர்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து முத்துப்பேட்டை சுற்றியுள்ள கிராமங்களில் நோய் பரவுதல் ஏற்படாமல் இருக்கவும், கொசு தொல்லைகள் அதிகமாக இருப்பதாகவும் ஒன்றிய குழு உறுப்பினர் தெரிவித்தார்.

    அதற்கு சுகாதார ஆய்வாளர் பதிலளித்து கடுமையாக பேசினார்.

    உடனே துணைத் தலைவர் இடைமறித்து கொசு தொல்லைக்கு மருந்து அடிப்பதும்,நோய் வராமல் முன்னெச்சரிக்கை நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததற்கு ஏன் இவ்வளவு கடுமையாக பேசுகிறீர்கள் என்று கூறினார். இதனால் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

    நோய் பரவலை தடுக்க வேண்டும் என அனைத்து கவுன்சிலர்களும் கோரிக்ைக வைத்தனர். கவுன்சிலர்கள் கேட்கும் கேள்விக்கு அதிகாரிகள் முறையாக பதில் சொல்ல வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல கூட்டத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    திருப்பரங்குன்றம்

    மதுரை திருப்பரங்கு ன்றத்தில் மாநகராட்சியின்  மேற்கு மண்டல கவுன்சிலர்கள் கூட்டம் இன்று நடந்த. மண்டல தலைவர் சுவிதா விமல் தலைமை வகித்தார். உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார். மேயர் இந்திராணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். 

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில், பொதுமக்கள் குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள்கேட்டு கோரிக்கை வைக்கின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் நாங்கள் கூறினால் நடவடிக்கை எடுப்பதில்லை. மேலும் பல இடங்களில் குப்பைகள் அள்ளாததால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. 

    சில இடங்களில் அதிகாரிகள் தூய்மைப் பணியாளர்கள் சரிவர பணிக்கு வருவதில்லை வராமலேயே வருகைப்பதிவேட்டில் வந்ததாக தெரிவிக்க ப்படுகிறது. எனவே இது போன்ற முறைகேடுகளை தவிர்த்து பொது மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தரவேண்டும் என தெரிவித்தனர். 

    இதற்கு மேயர் இந்திராணி பதில் அளித்து பேசுகையில், கவுன்சிலர்கள் பொது மக்களின் அடிப்படை தேவைகளை கோரிக்கையாக வைக்கின்றனர். அவர்களது கோரிக்கையை அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும். அப்படி செய்தால்தான் அவர்களால் மீண்டும் மக்களை சந்திக்க முடியும். மக்களுக்கு தேவையான குடிநீர் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தையும் அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றார். 

    இதில் கவுன்சிலர்கள் இந்திராகாந்தி, விஜயா, கருப்பசாமி, சிவசக்தி ரமேஷ், ரவிச்சந்திரன், ஸ்வேதா சத்யன், இன்குலாப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல கூட்டத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    திருப்பரங்குன்றம்

    மதுரை திருப்பரங்கு ன்றத்தில் மாநகராட்சியின்  மேற்கு மண்டல கவுன்சிலர்கள் கூட்டம் இன்று நடந்த. மண்டல தலைவர் சுவிதா விமல் தலைமை வகித்தார். உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார். மேயர் இந்திராணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். 

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில், பொதுமக்கள் குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள்கேட்டு கோரிக்கை வைக்கின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் நாங்கள் கூறினால் நடவடிக்கை எடுப்பதில்லை. மேலும் பல இடங்களில் குப்பைகள் அள்ளாததால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. 

    சில இடங்களில் அதிகாரிகள் தூய்மைப் பணியாளர்கள் சரிவர பணிக்கு வருவதில்லை வராமலேயே வருகைப்பதிவேட்டில் வந்ததாக தெரிவிக்க ப்படுகிறது. எனவே இது போன்ற முறைகேடுகளை தவிர்த்து பொது மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தரவேண்டும் என தெரிவித்தனர். 

    இதற்கு மேயர் இந்திராணி பதில் அளித்து பேசுகையில், கவுன்சிலர்கள் பொது மக்களின் அடிப்படை தேவைகளை கோரிக்கையாக வைக்கின்றனர். அவர்களது கோரிக்கையை அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும். அப்படி செய்தால்தான் அவர்களால் மீண்டும் மக்களை சந்திக்க முடியும். மக்களுக்கு தேவையான குடிநீர் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தையும் அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றார். 

    இதில் கவுன்சிலர்கள் இந்திராகாந்தி, விஜயா, கருப்பசாமி, சிவசக்தி ரமேஷ், ரவிச்சந்திரன், ஸ்வேதா சத்யன், இன்குலாப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×