search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாதேவ் சூதாட்ட செயலி"

    • ஆடம்பரமாக ரூ.250 கோடி செலவில் சவுரப் திருமணம் நடைபெற்றது
    • மாநிலத்தை ஏடிஎம்மாக பயன்படுத்தி கொண்டது காங்கிரஸ் என்கிறார் ஷெஹ்சத்

    இணையதளத்தில் மகாதேவ் சட்டா செயலி (Mahadev Satta App)  எனும் பெயரில் சூதாட்ட செயலி ஒன்று பிரபலமாக உள்ளது.

    பெரும்பாலானோர்கள் தங்கள் பணத்தை செலுத்தி சூதாடி வந்ததால், தினந்தோறும் இச்செயலியை நிறுவியவர்கள் ரூ.200 கோடிக்கும் அதிகமாக சம்பாதித்தாக கூறப்பட்டது.

    சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாய் பகுதியை சேர்ந்த சவுரப் சந்த்ரகர் மற்றும் ரவி உப்பல் ஆகியோருக்கு சொந்தமானது மகாதேவ் இணையவழி சூதாட்ட செயலி.

    ரூ.250 கோடி செலவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் சவுரப் ஆடம்பரமாக செய்து கொண்ட திருமணத்திற்கு பிறகு அவர் இந்திய அமலாக்க துறையின் விசாரணை வளையத்தில் வந்தார். அத்துறை நடத்திய தொடர் விசாரணையில் சட்டவிரோத பண பரிமாற்ற மோசடியில் இந்நிறுவனம் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இந்நிலையில், கடந்த 2023 நவம்பர் மாதம் ராய்பூரில், சத்தீஸ்கர் சட்டசபைக்கான தேர்தல்கள் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு கோடிக்கணக்கில் பணத்துடன் சென்ற அசிம் தாஸ் (Asim Das) என்பவரை அமலாக்க துறை விசாரித்த போது சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலுக்காக அதனை கொண்டு செல்வதாக ஒப்பு கொண்டார். இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

    இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கு விசாரணையில் இரண்டாவது குற்றப்பத்திரிகையில் பூபேஷின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

    இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷெஹ்சத் பூனாவாலா கருத்து தெரிவித்தார்.

    அதில் ஷெஹ்சத் கூறியதாவது:

    சி எம் என்றால் காங்கிரஸ் கட்சிக்கு சீஃப் மினிஸ்டர் (முதல் அமைச்சர்) அல்ல; கரப்ஷன் மினிஸ்டர் (கரப்ஷன் மினிஸ்டர்). பிரதமர் மோடி "ரூபே" கார்டு கொடுத்தார்; காங்கிரஸ் "பூபே" கார்டு வழங்கியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை வெறும் ஏடிஎம்மாக காங்கிரஸ் கருதியது. இரு கைகளாலும் கொள்ளை அடிக்க பயன்படுத்தி கொண்டது. கையும் களவுமாக ரூ.500 கோடி லஞ்சம் கொடுக்க சென்ற ஒருவர் பிடிக்கப்பட்ட நிலையில் அதை உறுதிபடுத்தும் ஆதாரங்களும் தற்போது வெளியாகி உள்ளன. ஊழலை ஆதரிக்கிறதா என இப்போது காங்கிரஸ் கட்சிதான் பதில் சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×