search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் இட ஒதுக்கீடு"

    • கேரளாவில் பா.ஜ.க. சார்பில் 2 லட்சம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மகளிர் சக்தி பற்றி உரையாடினார்.

    திருவனந்தபுரம்:

    பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பல மாநிலங்களில் பா.ஜ.க. சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், கேரளாவில் மகளிர் சங்கமம் நிகழ்ச்சி திருச்சூர் தேக்கங்காடு மைதானத்தில் இன்று நடைபெற்றது. சுமார் 2 லட்சம் பெண்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். திருச்சூர் வந்த பிரதமர் மோடிக்கு பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


    இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா, கிரிக்கெட் வீராங்கனை மின்னுமணி, சமூக ஆர்வலர் உமா பிரேமன், நடிகை சோபனா, முதியோர் ஓய்வூதியத்தைப் போராடி பெற்ற 88 வயது மூதாட்டி மரியக்குட்டி உள்ளிட்ட ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

    மகளிர் சங்கமம் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி பேசியதாவது:

    சுதந்திரத்திற்குப் பிறகு, எல்.டி.எஃப் மற்றும் யூ.டி.எஃப் அரசுகள் மகளிர் சக்தியை பலவீனமாகக் கருதின. இதனால் மக்களவை மற்றும் விதான சபாவிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை கிடப்பில் போட்டன. அதை நிறைவேற்றியது பா.ஜ.க. நாட்டில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணி அரசு இருக்கும் வரை முத்தலாக் காரணமாக முஸ்லிம் சகோதரிகள் அவதிப்பட்டு வந்தனர். ஆனால் அதிலிருந்து விடுதலை அளிப்பதாக உத்தரவாதம் அளித்து அதை உண்மையாக நிறைவேற்றினோம் என தெரிவித்தார்.

    ×