search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகரவிளக்கு பூஜை"

    • நாளை பெரியானை வட்டம் வழியாக பம்பை ஆற்றங்கரைக்கு சென்று முகாமிடுவார்கள்.
    • ஐயப்பனுக்கு பம்பை விருந்து மற்றும் பம்பை விளக்கு ஏற்றுதல் உள்பட சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலையில் தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. இதையொட்டி ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்தநிலையில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மகரவிளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இதனையொட்டி அம்பலப்புழை மற்றும் ஆலங்காடு ஐயப்ப பக்தர்கள் குழுவினரின் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நேற்று எருமேலியில் நடந்தது.

    மத ஒற்றுமைக்கு சான்றாக விளங்கும் இந்த நிகழ்ச்சி பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது. அதாவது அனைவரும் சமம் என்ற நிலையில் சிறியவர், பெரியவர், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இன்றி ஐயப்ப பக்தர்கள் உள்பட அனைவரும் தங்கள் முகம், உடல் மீது வண்ண, வண்ண பொடிகளை பூசி, கரும்புள்ளி, செம்புள்ளி குத்திக் கொண்டு ஊர்வலமாக புறப்பட்டனர். இதில் இலை, தழைகளை கையில் ஏந்தியவாறு பலரும் ஐயப்பனின் சரண கோஷத்தை எழுப்பினர்.

    இந்த ஊர்வலம் எருமேலி கொச்சம் பலத்தில் இருந்து புறப்பட்டது. தொடர்ந்து வாவர் மசூதிக்கு வந்து காணிக்கை செலுத்தினர். தொடர்ந்து தர்ம சாஸ்தா கோவிலில் சாமி தரிசனம் செய்தபிறகு சபரிமலைக்கு பக்தர்கள் நடைபயணமாக புறப்பட்டனர்.

    இரவு சாமி ஐயப்பனின் பாரம்பரிய பெருவழி பாதை வழியாக பக்தர்கள் குழுவினர் தங்களது பயணத்தை தொடர்ந்தனர். பேரூர் தோடு, காளை கட்டி, அழுதாமலை, கரிமலை வழியாக நடந்து சென்று நாளை (வெள்ளிக்கிழமை) பெரியானை வட்டம் வழியாக பம்பை ஆற்றங்கரைக்கு சென்று முகாமிடுவார்கள். தொடர்ந்து ஐயப்பனுக்கு பம்பை விருந்து மற்றும் பம்பை விளக்கு ஏற்றுதல் உள்பட சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    பின்னர் அம்பலப்புழை, ஆலங்காடு பக்தர் குழுவினர் சபரிமலை நோக்கி மலையேறி செல்வார்கள். தொடர்ந்து 18-ம் படி ஏறி சாமி தரிசனம் செய்த பிறகு அனைவரும் சபரிமலையில் முகாமிட்டு இரவில் ஓய்வு எடுப்பார்கள்.

    நாளை மறுநாள் மகரஜோதி தினத்தில் ஐயப்பனுக்கு அம்பலப் புழை பக்தர் குழுவினர் சார்பில் சிறப்பு நிவேத்யம், நெய்யபிஷேகம் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    • மகரவிளக்கு தினத்தன்று கூடுதல் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர்.
    • கோவிலுக்கு வரும் பக்தர்கள் நெரிசலின்றி சன்னிதானம் செல்லவும், அங்கு 18-ம் படி ஏறவும் தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிந்து மகர விளக்கு பூஜைக்கான விழா நடந்து வருகிறது.

    சபரிமலை பொன்னம்பல மேட்டில் வருகிற 14-ந் தேதி மகர ஜோதி தரிசன நிகழ்ச்சி நடக்கிறது. இதை காண நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை வந்த வண்ணம் உள்ளனர்.

    கடந்த சில நாட்களாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. மகர ஜோதி தரிசன நாளில் இந்த எண்ணிக்கை லட்சத்தை தாண்டும் என கோவில் நிர்வாகிகள் எதிர்ப்பார்க்கிறார்கள்.

    இதையடுத்து சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. பம்மை முதல் சன்னிதானம் வரை பக்தர்கள் நெரிசலின்றி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    மேலும் பாதுகாப்பு பணிக்கு 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் சன்னிதானம் மற்றும் சபரிமலை முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    மகரவிளக்கு தினத்தன்று கூடுதல் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். இதனை சன்னிதான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் போலீஸ் சூப்பிரண்டு பிஜூமோன் தெரிவித்தார்.

    இதற்கிடையே கோவிலுக்கு வரும் பக்தர்கள் நெரிசலின்றி சன்னிதானம் செல்லவும், அங்கு 18-ம் படி ஏறவும் தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது. இதற்காக நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதானம் வரை போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    நேற்று முதல் இவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை தவிர பேரிடர் மீட்பு படையினர், சுகாதார துறையினர், தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

    • சபரிமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படும்.
    • புதன்கிழமை எருமேலியில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடக்கிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு சீசனையொட்டி 14 -ந் தேதி மகரவிளக்கு பூஜை நடக்கிறது. இதையொட்டி, சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் தலைமையில் சன்னிதானத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன்பின் அனந்தகோபன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சபரிமலையில் வருகிற 14-ந் தேதி நடைபெறும் மகரவிளக்கு பூஜையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

    அன்றைய தினம் மகரஜோதியை பக்தர்கள் காண சிறப்பு ஏற்பாடாக கில் டாப், பாண்டித் தாவளம் உள்ளிட்ட இடங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்கள் ஆங்காங்கே கூடாரம் அமைத்து ஓய்வு எடுக்க வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

    நாளை மறுநாள் (புதன்கிழமை) எருமேலியில் அம்பலப்புழை, ஆலங்காடு சங்கங்களின் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக வாவர் மசூதி உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. சபரிமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படும்.

    கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் செயல் அதிகாரி கிருஷ்ணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 19-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்லலாம்.
    • 20-ந்தேதி சபரிமலை கோவில் நடை அடைக்கப்படும்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி தரிசனத்திற்கான விழா நடந்து வருகிறது.

    சபரிமலை பொன்னம்பல மேட்டில் வருகிற 14-ந் தேதி ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மகர ஜோதி தரிசன தினத்தன்று கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

    இந்த முன்பதிவு முடிந்து விட்டதாக கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதனால் 14-ந் தேதிக்கு மேல் தான் இனி கோவிலுக்கு செல்ல முடியும்.

    அதே நேரம் சபரிமலை செல்லும் பக்தர்கள் மகரஜோதி அன்று பொன்னம்பல மேட்டிலும் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

    மகர ஜோதி தரிசனம் முடிந்து பின்னர் வருகிற 19-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்லலாம். 20-ந் தேதி சபரிமலை கோவில் நடை அடைக்கப்படும்.

    • கடந்த 2 ஆண்டுகள் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது.
    • திருவாபரண ஊர்வலத்தின் போது 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    கேரள மாநிலம் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவில் கூட்ட அரங்கில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் திவ்யா.எஸ் அய்யர் தலைமை தாங்கினார். திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மதுகர் மகாஜன், உதவி கலெக்டர் கோபகுமார், ராஜ குடும்ப பிரதிநிதி திருக்கேட்ட நாள் ராஜராஜ வர்மா, பந்தளம் கொட்டாரம் நிர்வாக குழு தலைவர் சசிகுமார வர்மா, செயலாளர் நாராயண வர்மா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு கலெக்டர் திவ்யா எஸ்.அய்யர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மகர விளக்கையொட்டி பந்தளத்தில் இருந்து 12-ந் தேதி திருவாபரணங்களை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகள் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. இந்த ஆண்டு பக்தர்கள் வருகை அதிகமாக இருப்பதால் அதற்கு ஏற்ப ஏற்பாடுகள் நடந்து வருகிறது. திருவாபரண ஊர்வலத்தின் போது 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அவர்களுடன் மருத்துவ குழு, தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உடன் செல்வார்கள். ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் 14-ந்தேதி நடக்கிறது.
    • 20-ந்தேதி கோவில் நடை அடைக்கப்படுகிறது.

    2022-2023-ம் ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலை கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது.

    41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகத்திற்கு பிறகு கடந்த மாதம் 27-ந்தேதி மண்டல பூஜை நடந்தது. பிறகு அன்றைய தினம் இரவு நடை அடைக்கப்பட்டது. பின்னர் மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் 30-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதால் இந்த சீசனின் பாதியில் தரிசனம் செய்ய கூடுதலாக 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் 8 முதல் 10 மணி நேரம் வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. தினமும் 1 லட்சம் பக்தர்கள் வருகிறார்கள்.

    இதற்கிடையே மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் வருகிற 14-ந்தேதி நடைபெறுகிறது. மகர விளக்கு தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பத்தனம்திட்டை மாவட்டம் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த திருவாபரணங்கள் 12-ந்தேதி பந்தளம் ராஜ பிரதிநிதியின் முன்னிலையில் ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. முன்னதாக 11-ந்தேதி எருமேலியில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி அம்பலப்புழை மற்றும் ஆலங்காடு அய்யப்ப பக்தர்கள் குழு சார்பில் நடைபெறும்.

    இதற்கிடையே சபரிமலை ஐயப்பன் கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு நிருபர்களிடம் கூறியதாவது:-

    மகரவிளக்கு பூஜையையொட்டி வருகிற 14-ந்தேதி மாலை 6.30 மணிக்கு பொன்னம்பல மேட்டில் ஜோதிவடிவில் ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சி தருவார். தொடர்ந்து நடைபெறும் வழக்கமான பூஜை, வழிபாடுகளுக்கு பிறகு 20-ந்தேதி காலை 7 மணிக்கு பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதியின் தரிசனத்திற்கு பிறகு நடை அடைக்கப்பட்டு நடப்பு மண்டல, மகர விளக்கு சீசன் நிறைவு பெறும். மீண்டும் மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை அடுத்த மாதம் 12-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வருகிற 14-ந் தேதி மகர ஜோதி தரிசனம் நடக்கிறது.
    • 20-ந்தேதி வரை கோவில் நடை திறந்து இருக்கும்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்கான விழா நடந்து வருகிறது.

    இந்த விழாவில் பங்கேற்க தினமும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகிறார்கள். இவர்களின் கூட்டத்தால் சபரிமலையில் 18-ம் படி ஏற பலமணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே புத்தாண்டு தினத்தன்றும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நடை பந்தலில் பல மணி நேரம் காத்திருந்து அய்யப்பனை தரிசனம் செய்தனர்.

    சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் காத்திருக்கும் நடைபந்தல் அருகே உள்ள கலையரங்கில் சிறுமிகளின் திருவாதிரை நடன நிகழ்ச்சி நடந்தது.

    திருவாதிரை ராகங்கள் மற்றும் குறத்தி பாட்டு உள்ளிட்ட பாடல்களுக்கு சிறுமிகள் நடனம் ஆடினர்.

    புத்தாண்டு தினத்தில் ஐயப்பனை தரிசிக்க வந்த பக்தர்கள் சிறுமிகளின் நடனத்தை பார்த்து பரவசம் அடைந்தனர்.

    சபரிமலையில் வருகிற 14-ந் தேதி மகர ஜோதி தரிசனம் நடக்கிறது. அதன்பிறகு 20-ந்தேதி வரை கோவில் நடை திறந்து இருக்கும். அதுவரை கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    • மகரவிளக்கு பூஜை வருகிற 14-ந் தேதி நடைபெறும்.
    • 19-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு ஆண்டின் மண்டல சீசன் கடந்த மாதம் 27-ந் தேதியுடன் நிறைவடைந்தது. மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் 30-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அன்றைய தினம் 32 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    இந்தநிலையில் நேற்று ஆங்கில புத்தாண்டு அன்று தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. முன்பதிவு செய்த 90 ஆயிரம் பக்தர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர். இதுபோக உடனடி முன்பதிவு மூலமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    புகழ் பெற்ற மகரவிளக்கு பூஜை மற்றும் தரிசனம் வருகிற 14-ந் தேதி நடைபெறும். மேலும் 19-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இதில் 8-ந் தேதி வரை தினமும் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய முன்பதிவு செய்து உள்ளனர். இதனால் அன்றைய நாட்களில் தரிசனம் செய்ய முன்பதிவு செய்ய முடியாது.

    சபரிமலையில் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பக்தர்களை அனுமதிப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சில பக்தர்கள் முன்பதிவு செய்யாமல் வருகிறார்கள். இவர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு உடனடி முன்பதிவு அடிப்படையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதாக திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் இதனை தவிர்க்கும்படி அய்யப்ப பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • மகரவிளக்கு பூஜை சமயத்தில் தினசரி 90,000 பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படும்.
    • மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வரும் 14-ம் தேதி நடைபெறுகிறது.

    சபரிமலை:

    மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த வருடம் வரலாறு காணாத அளவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை கடந்த 27-ம் தேதி நடந்தது. அப்போது தங்க அங்கி அணிவித்த ஐயப்பனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதன்பிறகு அன்றைய தினம் இரவு மண்டல கால பூஜை நிறைவடைந்ததும் நடை அடைக்கப்பட்டது.

    இந்நிலையில், மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. சாமி தரிசனத்திற்கு இன்று மட்டும் 32 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

    நாளை முதல் வழக்கம்போல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய்யபிஷேகம், உச்ச பூஜை, களபாபிஷேகம், கலச பூஜை நடைபெறும். மதியம் 1.30 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன்பின் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் உள்பட சிறப்பு வழிபாடுடன் இரவு 11.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வரும் 14-ம் தேதி நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜை சமயத்திலும் தினசரி 90 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்படும். அதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது.
    • சாமி தரிசனத்திற்கு இன்று மட்டும் 32 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

    மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ந் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த வருடம் வரலாறு காணாத அளவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்தநிலையில் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை கடந்த 27-ந் தேதி நடந்தது. அப்போது தங்க அங்கி அணிவித்த ஐயப்பனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதன் பிறகு அன்றைய தினம் இரவு மண்டல கால பூஜை நிறைவடைந்ததும் நடை அடைக்கப்பட்டது.

    மகர விளக்கு பூஜைக்காக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது. சாமி தரிசனத்திற்கு இன்று மட்டும் 32 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். நாளை முதல் வழக்கம் போல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய்யபிஷேகம், உச்ச பூஜை, களபாபிஷேகம், கலச பூஜை நடைபெறும். மதியம் 1.30 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் உள்பட சிறப்பு வழிபாடுடன் இரவு 11.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது.

    மகரவிளக்கு பூஜை சமயத்திலும் தினசரி 90 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்படும். அதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

    நிலக்கல்-பம்பை, பம்பை- நிலக்கல் இடையே இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்கப்படும். அதே போல் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் சபரிமலைக்கு சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தேவஸ்தான செயல் அதிகாரி கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

    • சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது.
    • மகரவிளக்கு தினத்தன்று ஆயிரம் பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம் :

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி பக்தர்களுக்கான போக்குவரத்து வசதிகள் மேற்கொள்வதற்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் நேற்று பம்பையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கேரள போக்குவரத்து துறை மந்திரி ஆன்றனி ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    சபரிமலைக்கு கடந்த காலங்களை விட இந்த ஆண்டு கூடுதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சரக்கு வாகனங்கள், ஆட்டோக்களில் பக்தர்கள் சபரிமலைக்கு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    சீசனை முன்னிட்டு நிலக்கல்- பம்பை இடையே தினசரி 200 பஸ்கள் இயக்கப்படும். அதே போல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    மகரவிளக்கு தினத்தன்று ஆயிரம் பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    பிறமாநிலங்களில் இருந்து குழுவாக வரும் ஐயப்ப பக்தர்களுக்கு கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தனி பஸ்வசதி செய்து கொடுக்கப்படும். ஆனால் குறைந்தது 40 நபர்களாவது இருக்க வேண்டும். வயதான ஐயப்ப பக்தர்களுக்கு தனி வரிசை அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×