என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போலீசார் வழக்குப்பதிவு"
- சென்னையில் சிவில் கட்டுமானம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார்.
- தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை அருகே உள்ள தாதம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் பிரசாத் (வயது 35). சிவில் என்ஜினீயரிங் படித்துள்ள இவர், சென்னையில் சிவில் கட்டுமானம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார். இவருடைய மனைவி அபிஷா ஜூபி. டாக்டரான இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு டாக்டராக பணியாற்றி வருகின்றார். இந்த தம்பதிக்கு 9 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்த ஸ்ரீராம் பிரசாத், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து சொந்த ஊரான தாதம்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்தார். மீண்டும் செல்போன் மூலம் தம்பதியினர் தகராறில் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில் நேற்று இரவு ஸ்ரீராம் பிரசாத் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த வீராணம் போலீசார், அங்கு சென்று, ஸ்ரீராம் பிரசாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கணவரின் உடலை பார்த்து மனைவி மற்றும் பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் இரும்பாலை அருகே உள்ள கீரம்பாப்பம்பாடி ஓலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (52). இவர் தொடர்ந்து சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை எடுத்த பிறகும் சர்க்கரை நோய் குணமாகவில்லை. நோய் கொடுமையால் சிரமப்பட்டு வந்த அவர் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே உள்ள பூதிபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் ஆண்டவர். இவரது மனைவி பஞ்சு (வயது35). ஆண்டவர் அதே பகுதியில் பெட்டிகடை வைத்து நடத்தி வருகிறார்.
இவரது கடை அருகே அதே ஊரைச் சேர்ந்த பொன்னாங்கன் என்பவரும் கடை வைத்துள்ளார். இருவருக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சம்பவத்தன்று கடையில் இருந்த பஞ்சுவிடம் பொன்னாங்கன், அவரது மகன் தங்கபாண்டி, அல்லிநகரத்தை சேர்ந்த கோபி ஆகியோர் தகராறு செய்து தாக்கினர். இதை தட்டிகேட்ட ஆண்டவரையும் தாக்கி காயம் ஏற்படுத்தினர்.
மேலும் கடையை காலி செய்யாவிட்டால் தீ வைத்து கொளுத்திவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் ஆண்டவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பொன்னாங்கன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கோபியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்