என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேனி அருகே தொழில் போட்டியில் தம்பதியை தாக்கிய கும்பல்
தேனி:
தேனி அருகே உள்ள பூதிபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் ஆண்டவர். இவரது மனைவி பஞ்சு (வயது35). ஆண்டவர் அதே பகுதியில் பெட்டிகடை வைத்து நடத்தி வருகிறார்.
இவரது கடை அருகே அதே ஊரைச் சேர்ந்த பொன்னாங்கன் என்பவரும் கடை வைத்துள்ளார். இருவருக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சம்பவத்தன்று கடையில் இருந்த பஞ்சுவிடம் பொன்னாங்கன், அவரது மகன் தங்கபாண்டி, அல்லிநகரத்தை சேர்ந்த கோபி ஆகியோர் தகராறு செய்து தாக்கினர். இதை தட்டிகேட்ட ஆண்டவரையும் தாக்கி காயம் ஏற்படுத்தினர்.
மேலும் கடையை காலி செய்யாவிட்டால் தீ வைத்து கொளுத்திவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் ஆண்டவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பொன்னாங்கன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கோபியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்