search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் அறிவுறுத்தல்"

    • பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • அதிக வட்டி தருவதாகவும் கூறும் நபர்களிடம் பொது மக்கள் தங்களது சேமிப்பு பணத்தை முதலீடு செய்ய வேண்டாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பி ரிவு போலீஸ் டி.எஸ்.பி. முருகானந்தம் அறிவுறுத்தலின் பெயரில் கோபி அருகே உள்ள சவுண்டப்பூரில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமை தாங்கினார்.

    இதில் கவர்ச்சிகர திட்டங்கள் மூலம் பணம் இரட்டிப்பு, அதாவது ஆயிரம் ரூபாய் செலுத்தினால் குறிப்பிட்ட மாதத்திற்கு பிறகு ரூ.5000 தருவதாகவும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கினைவிட அதிக வட்டி தருவதாகவும் கூறும் நபர்களிடம் பொது மக்கள் தங்களது சேமிப்பு பணத்தை முதலீடு செய்ய வேண்டாம்.

    அந்த மோசடி நபர்கள் முதலில் ஆசை காட்டி சேர்க்கும் 10 அல்லது 20 பேருக்கு அதிக லாபம் கொடுத்து விட்டு, அதற்கு பின்னால் சேர்ப்ப வர்களுக்கு லாபத்தையும் கொடுக்காமல் முதலீடு செய்த பணத்தை தராமல் ஏமாற்றி விடுவார்கள்.

    எந்த ஒரு நிறுவனமும் முதலீடு செய்த பணத்திற்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியை விட கூடுதலாக வட்டி தர முடியா து. எனவே பொதுமக்கள் கவர்ச்சிகரத் திட்டங்களை பார்த்தும் ஆசை வார்த்தைகளை கேட்டும் பணத்தை முதலீடு செய்து ஏமர வேண்டாம்.

    அதேப்போல் அங்கீகாரம் மற்றும் அனுமதி பெறாத ஏலச்சீட்டுகளிலும் சேர்ந்து பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    முதலீடு செய்யும் பணத்துக்கு முறையான ரசீது வழங்கப்படுகிறதா? கடன் ஒப்பந்த நகல் வழங்கப்படுகிறதா? என்பதை ஆராய்ந்து உறுதி தன்மை இருந்தால் மட்டுமே பணத்தை முதலீடு செய்யுங்கள்.

    ஏதேனும் சந்தேகம் இருந்தால் ஈரோடு பொருளாதார குற்றப்பி ரிவு போலீஸ் நிலையத்தை நேரில் அணுக லாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    • ஆதார் அட்டை கட்டாயம் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    கோவை,

    கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த மாதம் 23-ந் தேதி நடைபெற்ற கார் வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து, மாநகரில் கண்காணிப்புப் பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    மேலும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் தடுக்க தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வாடகைக்கு குடியிருப்போரின் விவரங்களை போலீசார் சேகரிக்க திட்டமிட்டுள்ளனர்.

    இதுகுறித்து மாநகர போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

    மாநகரில் பல லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். வாடகைக்கு குடியிருப்போர் பல்வேறு முகவரிகளில் மாறி மாறி குடியிருக்கும் நிலை உள்ளது. அசம்பாவிதங்கள் நிகழும்போது, தொடர்புடையவர்களை உடனடியாக கண்டறியவும், முழுமையான விசாரணைக்கும் அவர்களை பற்றிய விவரங்கள் தேவை.

    எனவே வாடகைக்கு குடியிருப்பவர்களின் பெயர், ஆதார், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை அந்தந்த வீடுகளின் உரிமையாளர்கள் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதுகுறித்து அந்தந்த போலீஸ் நிலையங்கள் வாரியாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.

    வீடுகளில் குடியிருப்பவர்கள் மாறிவிட்டாலும், அந்த வீடுகளுக்கு வேறு யார் குடிவந்திருந்தாலும் அந்த விவரங்களையும் தங்கள் எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் புதிதாக பணிக்கு சேரும் தொழிலாளர்களிடம் ஆதார் அட்டை கட்டாயம் பெற வேண்டும் என வேலை வழங்குவோருக்கு தொழில் அமைப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    புதிதாக தொழிலாளர்களை பணியில் சேர்க்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க தொழில்முனைவோருக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அவர்களிடம் ஆதார் அட்டை கட்டாயம் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

    • மாணவ மாணவிகள் பலரும் செல்போன்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.
    • செல்போனை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியம்.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் அருகே உள்ள ஏ.வி.பி. பள்ளியில் சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நவீன காலத்திற்கு ஏற்ப செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக மாணவ மாணவிகள் பலரும் செல்போன்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். நாம் செல்போனை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியம். நமது தேவைகளுக்கு மட்டும் அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    குறிப்பாக மாணவ மாணவிகளுக்கு இணையதளம் மூலமாக தெரியாத நபர்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும். மேலும் தங்களது செல்போன் எண்களை கொடுக்கக் கூடாது. மாணவிகள் தெரியாத நபர்களை நம்பி புகைப்படங்களை அனுப்பக்கூடாது. அவ்வாறு புகைப்படங்களை அனுப்பினால் அவை தவறாக பயன்படுத்தக்கூடும் வாய்ப்புள்ளது. எனவே மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தேவைக்கு மட்டும் செல்போன்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுபோல் வீடுகளில் உள்ள தங்களது பெற்றோர்களிடமும் தற்போது நடந்து வருகிற மோசடிகள் குறித்து தெரிவிக்க வேண்டும். வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏடிஎம் அட்டை எண்களை பெறுகிறவர்கள், நமக்கு தெரியாமலே பணத்தை எடுக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே மாணவ மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம், வங்கி விவரங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டால் தெரிவிக்கக் கூடாது என அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் சைபர் கிரைம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சையது ரபிக் சிக்கந்தர், வடக்கு மகளிர் அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கனகவல்லி மற்றும் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு உரையாற்றினர்.

    ×