search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போர் விமானம்"

    • 4 போர் விமானங்கள் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஓடு பாதையில் தரையிறக்கப்பட்டன.
    • போர்க்காலத்தில் விமானங்களை தரை இறக்க இந்த தேசிய நெடுஞ்சாலை ஒரு வரப்பிரசதமாக இருக்கும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பாபட்லா தேசிய நெடுஞ்சாலை 16-ல் கோரிசபாடு என்ற இடத்தில் போர் விமானங்களை அவசரமாக தரை இறக்குவதற்காக 4.1 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த சாலையில் அவசர காலத்தில் போர் விமானங்களை தரை இறக்கும் திறன் மதிப்பீடு சோதனையை விமானப்படையினர் வெற்றிகரமாக நடத்திக் காட்டினர்.

    தேசிய நெடுஞ்சாலை 16-ல் கோரிசபாடு முதல் ரெணங்கிவரம் வரை அவசர காலத்தில் விமானங்கள் தரை இறக்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த சாலையில் சுகோய் 232 ரக 4 போர் விமானங்கள் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஓடு பாதையில் தரையிறக்கப்பட்டன. அதனை ஹாக் ரேஞ்ஜின் வகை 2 விமானங்கள் பின் தொடர்ந்து சென்றன.


    இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதற்காக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.

    போர்க்காலத்தில் விமானங்களை தரை இறக்க இந்த தேசிய நெடுஞ்சாலை ஒரு வரப்பிரசதமாக இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    முன்னதாக போர் விமானங்களை தரையிறக்கி சோதனை செய்த போது திடீரென தெரு நாய் ஒன்று விமான ஓடு பாதையில் குறுக்கே சென்றது.

    இதனைக் கண்டு அங்கிருந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த நாயை விரட்டி அடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. சோதனை நடத்திய காட்சி.

    • எப்.35 ரக விமானம் சம்பவத்தன்று தென் கரோலினா கடலோர பகுதியில் சென்று கொண்டிருந்தது.
    • விமானத்தில் இருந்த விமானி பாராசூட் மூலம் கீழே குதித்து உயிர் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    வாஷிங்டன்:

    உலகின் மிகப்பெரிய விமான படையை கொண்டுள்ள நாடாக அமெரிக்கா திகழ்கிறது. இந்த படையில் அதிநவீன போர் விமானங்கள் உள்ளது. 80 மில்லியன் டாலர் மதிப்பிலான எப்.35 ரக விமானம் சம்பவத்தன்று தென் கரோலினா கடலோர பகுதியில் சென்று கொண்டிருந்தது.

    திடீரென அந்த விமானத்துக்கும் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அந்த போர் விமானம் எங்கே சென்றது என தெரியவில்லை.

    அந்த விமானத்தில் இருந்த விமானி பாராசூட் மூலம் கீழே குதித்து உயிர் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் விமானத்தின் நிலை என்ன என்பது மர்மமாக உள்ளது. அந்த விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    நவீனரக போர் விமானம் மாயமான சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரஷிய எல்லைக்குள் இங்கிலாந்து விமானங்கள் வந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • இங்கிலாந்து தரப்பில் கூறும் போது, இது சர்வதேச வான்பரப்பில் வாடிக்கையாக நடக்கும் நிகழ்வு என்று கருத்து தெரிவித்துள்ளது.

    ரஷியா தொடுத்துள்ள போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் மேற்கத்திய நாடுகள் உள்ளன. உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் கருங்கடல் பகுதியில் பறந்த இங்கிலாந்தின் இரண்டு போர் விமானங்களை ரஷிய விமானங்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ரஷிய எல்லைக்குள் இங்கிலாந்து விமானங்கள் வந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு இங்கிலாந்து தரப்பில் கூறும் போது, இது சர்வதேச வான்பரப்பில் வாடிக்கையாக நடக்கும் நிகழ்வு என்று கருத்து தெரிவித்துள்ளது.

    • தைவானை மீண்டும் தன்னுடன் இணைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது.
    • சீனா தைவான் நாட்டு எல்லைக்கு போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்களை அனுப்பி மிரட்டலும் விடுத்து வருகிறது,

    சீனாவுக்கும், தைவானுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. 2-ம் உலக போரின் போது சீனாவில் இருந்து தைவான் தனியாக பிரிந்து ஆட்சி அமைத்தது. ஆனால் தைவானை மீண்டும் தன்னுடன் இணைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது.

    மற்ற நாடுகளுடன் தைவான் வைத்திருக்கும் நட்புறவையும் சீனா கண்டித்து வருகிறது.

    மேலும் தைவானை சுற்றி தனது ராணுவத்தினரை குவித்து சீனா போர் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. இதனால் தைவான் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அவ்வப்போது சீனா தைவான் நாட்டு எல்லைக்கு போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்களை அனுப்பி மிரட்டலும் விடுத்து வருகிறது,

    இந்நிலையில் நேற்று சீனாவின் ஜே-10, ஜே-11, ஜே-16 உள்ளிட்ட ரக விமானங்கள் மற்றும் குண்டு வீசும் விமானங்கள் உள்பட 24 போர் விமானங்கள் தைவான் எல்லைக்குள் அத்து மீறி பறந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. சீன விமானங்களை தைவான் தனது போர் கப்பல்கள் மற்றும் நிலத்தில் இருந்து ஏவக்கூடிய ஏவுகணைகள் மூலம் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    • வடகொரியாவின் ஏவுகனை சோதனைகளுக்கு சீனா உறுதுணையாக இருக்கிறது.
    • வட கொரியாவுக்கு அதன் நட்பு நாடான சீனா, அறிவுரை வழங்கி ஏவுகனை சோதனையை தடுக்க வேண்டும்.

    தென் கொரியாவின் வான் பகுதிக்குள் சீன, ரஷிய போர் விமானங்கள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவின் பாம்பர் ஜெட்கள், ரஷியாவின் ஏவுகனை தாங்கிய ஜெட்கள் தென் கொரிய எல்லைக்குள் நுழைந்தன. உடனே தென் கொரியாவின் விமானங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பறந்தன.

    அந்த விமானங்கள் வருவதற்குள் சீனா, ரஷிய விமானங்கள் அங்கிருந்து வெளியேறின. வடகொரியாவின் ஏவுகனை சோதனைகளுக்கு சீனா உறுதுணையாக இருக்கிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.

    மேலும் வட கொரியாவுக்கு அதன் நட்பு நாடான சீனா, அறிவுரை வழங்கி ஏவுகனை சோதனையை தடுக்க வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்திருந்த நிலையில் தென் கொரியா எல்லைக்குள் போர் விமானங்கள் நுழைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • போர் விமானத்தை இயக்கிய விமானியை பத்திரமாக மீட்டனர்.
    • விமானியின் உடல்நிலை சீராக உள்ளது.

    புதுடெல்லி

    இந்திய கடற்படையிடம் உள்ள 'மிக் 29-கே' போர் விமானம், நேற்று கோவாவில் கடலுக்கு மேல் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. பயிற்சியை முடித்துக்கொண்டு அது கடற்படை தளத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தது. அப்போது அந்த விமானம் எதிர்பாராத விதமாக தொழில்நுட்பக்கோளாறில் சிக்கி கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற மீட்பு படையினர், மின்னல் வேகத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அந்த போர் விமானத்தை இயக்கிய விமானியை பத்திரமாக மீட்டனர்.

    இந்த விபத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விபத்து குறித்து கடற்படை தலைமையகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி கடற்படை விடுத்துள்ள அறிக்கையில், "விமானியின் உடல்நிலை சீராக உள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மிக் 29-கே ரக போர் விமானம், எல்லா வானிலையிலும் இயங்கும் போர் விமானம், இது பல பயன்பாட்டு போர் விமானம், ரஷியாவின் மிக்கோயான் (மிக்) நிறுவனம் தயாரித்தது ஆகும்.

    இத்தகைய 45 விமானங்களை ரஷியாவிடம் இருந்து 10 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்திய கடற்படை 200 கோடி டாலருக்கு (சுமார் ரூ.16 ஆயிரம் கோடி) வாங்கியது நினைவுகூரத்தக்கது. இந்த விமானங்கள், ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா விமானம்தாங்கி போர்க்கப்பலில் இருந்து இயங்குவதற்காக வாங்கப்பட்டது ஆகும்.

    * கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா விமானம்தாங்கி போர்க்கப்பலில் இருந்து புறப்பட்டு சென்றபோது கடற்படையின் மிக் 29-கே போர் விமானம் கோவாவில் அரபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    * 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ந் தேதி மற்றொரு மிக் 29-கே போர் விமானம், ஐ.என்.எஸ். ஹன்சா கடற்படை விமான தளத்தில் இருந்து புறப்பட்டபோது விபத்துக்குள்ளாகி விமானி பத்திரமாக மீட்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

    * 2019-ம் ஆண்டு நவம்பர் மாதமும் மிக் 29-கே போர் விமானம், விபத்துக்குள்ளாகி விமானிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    இப்படி மிக் 29-கே போர் விமானங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாவது அதிர வைப்பதாக அமைந்துள்ளது.

    டாம் குருஸ் நடிப்பில் வெளியாகியுள்ள மிஷன் இம்பாசிபிள் படத்துக்காக 25 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து அவர் குதிக்க அபுதாபி அரசு போர் விமானம் தந்து உதவிய தகவல் வெளியாகியுள்ளது. #AbuDhabiC17militaryplane #CruiseHALOjump
    அபுதாபி:

    சாகச டாம் குருஸ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘மிஷன் இம்பாசிபிள் ஃபால்அவுட்’ படத்தில்   HALO jump (High Altitude, Low Opening) என்ற மெய்சிலிர்க்க வைக்கும் சாகச காட்சி திரையுலக வரலாற்றில் முதன்முறையாக படமாக்கப்பட்டுள்ளது.

    இந்த காட்சியை படம்பிடிக்கவும், ஒத்திகைக்காகவும் சுமார் மூன்று வாரங்களுக்கு அதிநவீன  C-17 போர் விமானம் தேவைப்பட்டுள்ளது. ஆனால், எந்த நாட்டு அரசும் சினிமா படப்பிடிப்புக்காக போர் விமானத்தை மூன்றுவார காலத்துக்கு முடக்கிப்போட முன்வராது என்ற கருத்து படப்பிடிப்பு குழுவினரிடையே நிலவியது.

    படத்தின் தயாரிப்பு நிறுவனமான பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிர்வாகிகள் இதற்காக அபுதாபி அரசின் ஊடகத்துறை அமைச்சகத்தை அணுகியபோது இதற்கு சம்மதம் கிடைத்தது.

    இதைதொடர்ந்து, ‘மிஷன் இம்பாசிபிள் ஃபால்அவுட்’ படக்குழுவினர் ஒருமாத காலம் அபுதாபியில் முகாமிட்டு போர் விமானத்தில் இருந்து கீழே குதிக்கும் ஒத்திகையில் ஈடுபட்டு வந்தனர். 

    கதாநாயகன் டாம் குருஸ் அங்கு வந்து சேர்ந்த பின்னர் 12 நாட்களில் அந்த காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக, 25 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் இருந்து 200 மைல் வேகத்தில் வீசிய காற்றை கிழித்துகொண்டு 94 முறை டாம் குருஸ் கீழே குதித்துள்ளார்.

    படமாக்கப்பட்ட இந்த காட்சிகளில் சிறப்பாக அமைந்தவற்றை மட்டும் தேர்வு செய்து, எடிட்டிங் முறையில் படத்தில் இணைத்து அசத்தியுள்ளனர்.

    இந்த காட்சிக்கு தேவையான போர் விமானம் மட்டுமல்லாமல், ஒத்திகையின்போது அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் உடனிருந்து படக்குழுவினருக்கு வேறு சில பயிற்சிகளையும் அளித்தனர். #AbuDhabiC17militaryplane #CruiseHALOjump
    ×