search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போண்டா"

    • காலையில் செய்த சாதம் மீந்து விட்டால் அதை வைத்து மாலையில் போண்டா செய்யலாம்.
    • இந்த போண்டா செய்வது மிகவும் எளிமையானது.

    தேவையான பொருட்கள் :

    சாதம் - 2 கப்

    கடலைமாவு - 1 கப்

    வெங்காயம் - 1

    இஞ்சி .- 1 துண்டு

    பச்சைமிளகாய் - 2

    கொத்தமல்லித்தழை - சிறிதளவு

    கறிவேப்பிலை - 1 கொத்து

    உப்பு, எண்ணெய் - தேவையானது

    செய்முறை :

    வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    ஒரு அகண்ட பாத்திரத்தில் மீந்த சாதத்தை போட்டு நன்றாக குழைத்து கொள்ளவும்.

    அதனுடன் கடலைமாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, தேவையான உப்பு, காய வைத்த எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி சேர்த்து நன்கு பிசையவேண்டும். இதில் தண்ணீர் ஊற்றத்தேவையில்லை.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்துள்ள மாவை உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரிந்ததும் எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான ரைஸ் போண்டா ரெடி.

    • இன்று பன்னீரைக் கொண்டு அட்டகாசமான போண்டா செய்யலாம்.
    • இது அற்புதமான ஸ்நாக்ஸ் மட்டுமின்றி, எளிதில் செய்யக்கூடிய ரெசிபி.

    தேவையான பொருட்கள்:

    பன்னீர் - 300 கிராம்

    கடலை மாவு - 1 கப்

    அரிசி மாவு - 1/4 கப்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

    சீரகப் பொடி - 1 டீஸ்பூன்

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 1

    துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிது

    கொத்தமல்லி - சிறிது

    புதினா - 2 டேபிள் ஸ்பூன்

    உப்பு - சுவைக்கேற்ப

    பேக்கிங் சோடா/சமையல் சோடா - 1/2 டீஸ்பூன்

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    செய்முறை:

    * வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    * ஒரு பௌலில் கடலை மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    * பின்பு அதனுடன் மிளகாய் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா, சீரகப் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    * அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தேவையான அளவு நீரை ஊற்றி போண்டா பதத்திற்கு ஓரளவு கெட்டியான பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.

    * பின் அதில் பன்னீர் துண்டுகள், பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள போண்டா மாவை சிறிது சிறிதாக போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பன்னீர் போண்டா தயார்.

    * அதை காரச்சட்னியுடன் சூடாக பரிமாறவும்.

    • காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த சிக்கன் போண்டா.
    • சிக்கன் போண்டாவை செய்வது மிகவும் சுலபம்.

    தேவையான பொருட்கள் :

    சிக்கன் கைமா – கால் கிலோ,

    சின்ன வெங்காயம் – 50 கிராம்,

    போண்டா மாவு – 250 கிராம்,

    சிக்கன் மசாலா – 3 டேபிள்ஸ்பூன்,

    மஞ்சள்தூள் – அரை டேபிள்ஸ்பூன்,

    காய்ந்த மிளகாய் – 2,

    பூண்டு – 5 பல்,

    கறிவேப்பிலை – 2 ஆர்க்கு,

    சோம்பு – ஒரு டேபிள்ஸ்பூன்,

    மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன்,

    தேங்காய்த் துருவல் – ஒரு கைப்பிடி அளவு,

    பொட்டுக்கடலை – 50 கிராம்,

    இஞ்சி – 2 சிறிய துண்டு,

    கொத்தமல்லித் தழை – சிறிதளவு.

    உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

    செய்முறை:

    * சின்ன வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * எலும்பில்லா சிக்கனை கொத்தி வாங்கவும். அதை நன்றாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் ஒரு கிண்ணத்தில் போடவும்.

    * அத்துடன் சின்ன வெங்காயம், பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், சோம்பு, மஞ்சள்தூள், பூண்டு, இஞ்சி, மிளகு, சிக்கன் மசாலா, உப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

    * கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, அரைத்த சிக்கன் கலவையைப் போட்டு நன்றாக வதக்கவும்.

    * முக்கால் பாகம் வெந்ததும், ஆறவிட்டு உருண்டைகளாக உருட்டவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

    * போண்டா மாவைக் கரைத்து, அதில் சிக்கன் உருண்டைகளை மாவில் தோய்த்து எடுத்து, எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்து எடுக்கவும்.

    * அரைத்து வெந்த சிக்கன் பஞ்சு போல் மிருதுவாக இருப்பதால், சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

    * சூப்பரான சிக்கன் போண்டா ரெடி.

    ×