search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    சாதம் மீந்து விட்டதா... வாங்க போண்டா செய்யலாம்....
    X

    சாதம் மீந்து விட்டதா... வாங்க போண்டா செய்யலாம்....

    • காலையில் செய்த சாதம் மீந்து விட்டால் அதை வைத்து மாலையில் போண்டா செய்யலாம்.
    • இந்த போண்டா செய்வது மிகவும் எளிமையானது.

    தேவையான பொருட்கள் :

    சாதம் - 2 கப்

    கடலைமாவு - 1 கப்

    வெங்காயம் - 1

    இஞ்சி .- 1 துண்டு

    பச்சைமிளகாய் - 2

    கொத்தமல்லித்தழை - சிறிதளவு

    கறிவேப்பிலை - 1 கொத்து

    உப்பு, எண்ணெய் - தேவையானது

    செய்முறை :

    வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    ஒரு அகண்ட பாத்திரத்தில் மீந்த சாதத்தை போட்டு நன்றாக குழைத்து கொள்ளவும்.

    அதனுடன் கடலைமாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, தேவையான உப்பு, காய வைத்த எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி சேர்த்து நன்கு பிசையவேண்டும். இதில் தண்ணீர் ஊற்றத்தேவையில்லை.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்துள்ள மாவை உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரிந்ததும் எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான ரைஸ் போண்டா ரெடி.

    Next Story
    ×