search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்"

    • மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
    • குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்று எடுத்து கூறினார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை கிராம பகுதியில் வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையில் நடந்தது.

    அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வரவேற்றார். அருணா கல்வி உடல் ஊனமுற்ற இளைஞர் வாழ்வு பற்றி சிறப்புரை ஆற்றினார், சிறப்பு பிரிவு முருகன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது பேசிய மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஜவகர், குழந்தை களின் கல்வி ஒழுக்கம் எஸ்டி மக்களுக்கான வேலை வாய்ப்பு முன்னுரிமை, விவசாய தொழில், குழந்தை திருமணம் தடுத்தல் மேலும்பொதுமக்களும் போலீசும் நண்பர்களாக பழக வேண்டும்.

    போலீசை கண்டு தேவையின்றி அச்சப்படத் தேவையில்லை. மலைப் பகுதிகளில் புதிய நபர்கள் நடமாட்டம் இருப்பி ன் அதனை போலீசுக்கு தகவலை தெரிவிக்க வேண்டும்.

    போலீஸ் தங்களின் நண்பர்கள் என்று எண்ணி பழகி அவர்க ளிடத்தில் சுமுக உறவோடு இருந்து குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்று மலைவாழ் மக்களிடத்தில் எடுத்து கூறினார்.

    நிகழ்ச்சியில் மங்களம் கல்வி நிறுவனத்தைச் சார்ந்த ராமசாமி, சேக் தாவூத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பர்கூர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகன் நன்றியுரை கூறினார், 

    • பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • தே.மு.தி.க.வின் 18-ம் ஆண்டு தொடக்க விழா


    அரியலூர்:

    தே.மு.தி.க.வின் 18-ம் ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு அரியலூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ராமஜெயவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், நகர தலைவர் மதி, நகர செயலாளர் தாமஸ் ஏசுதாஸ், நகர துணை செயலாளர் மோனிஷா ரமேஷ், மாவட்ட பிரதிநிதி ஜெய்சங்கர், ஒன்றிய துணை செயலாளர் ராஜீவ் காந்தி, மகளிர் அணி சீதா, மாணவரணி ரவி, மற்றும் அண்ணாதுரை, இளங்கோவன், நமச்சிவாயம், மதி, செல்வராஜ், கதிரவன், விஜய்ஆனந்த், அஜித் உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    • கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    கம்பம்:

    தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வின் 73-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதையொட்டி தேனி தெற்கு மாவட்டத்திலிருந்து நகர்மன்றத் தலைவர்கள், நகர பொறுப்பாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் கம்பத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

    ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன், கம்பம் நகர செயலாளர்கள் (வடக்கு) துரை நெப்போலியன், (தெற்கு) சூர்யா செல்வகுமார், நகர்மன்றத் தலைவர் வனிதா, துணைத்தலைவர் சுனோதா, தேனி தெற்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் வீரபாண்டியன்,கம்பம் 16 வார்டு நகர்மன்ற உறுப்பினர் தேயிலை சம்பத், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சசி மற்றும் கம்பம் நகர மன்ற தி.மு.க. உறுப்பினர்கள் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    மேலும் 25 பயனாளிகளுக்கு 3 சக்கர பைக், தையல் எந்திரங்கள், சிகை அலங்கார கடை சாய்வு நாற்காலிகள், வீல் சேர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    ×