search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைப் லைன்"

    • பைப் லைன் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் அதிக அளவில் தேங்கியது.
    • மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

    தக்கலை :

    தமிழ்நாடு கூட்டுக்குடிநீர் திட்டத்தின்படி காட்டாத்துறை பகுதியில் பெரிய நீர்தேக்க தொட்டி அமைந்துள்ளது. இங்கிருந்து தக்கலை, திருவிதாங்கோடு, திக்கணங்கோடு, ஆத்திவிளை, முளகுமூடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் பைப் அமைத்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலையில் தக்கலை அருகே கேரளபுரம் செல்லும் சாலையில் பைப் லைன் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் அதிக அளவில் தேங்கியது.

    இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ரோட்டில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இது சம்மந்தமாக சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, தமிழ்நாடு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று காலை முதல் பைப் லைன் உடைக்கப்பட்டு தண்ணீர் அதிக அளவில் வெளியேறியது. இது குறித்து ஆய்வு செய்த போது பல இடங்களில் பைப் லைன் முறையாக பொருத்தாததால் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • லாரி நடுரோட்டில் சிக்கியதால் சாலையின் இருபுறமும் இருந்து கார் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
    • பள்ளி மாணவிகளை ஏற்றி வந்த வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவித்தது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நகர பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சாலைகளில் தோண்டப்பட்டு பைப் லைன்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    நாகர்கோவில் கணேச புரம் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பைப் லைன் அமைப்பதற்கு பள்ளங்கள் தோண்டப்பட்டு பைப் லைன்கள் அமைக்கப் பட்டது. அதன் பிறகு அந்த பள்ளங்கள் மூடப்பட்டது. சாலையின் நடுவே பள்ளங்கள் தோண்டப்பட்டு மூடப்பட்டதால் சாலை புழுதியாக காட்சியளிக்கிறது. வாகனங்கள் செல்லும் போது காற்றில் புழுதிகள் பறப்பதால் பின்னால் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். இந்த சம்பவம் கடந்த ஒரு வாரமாக தொடர்கதை யாகவே உள்ளது.

    இந்த நிலையில் பொட்டல் பகுதியில் இருந்து நாங்குநேரிக்கு டாரஸ் லாரியில் தும்பு ஏற்றிக்கொண்டு சென்ற டிரைவர் கணேசபுரம் சாலையில் லாரியை திருப்பினார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த சாலையில் பைப்லைனுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் லாரியின் சக்கரங்கள் சிக்கியது. இதைத்தொடர்ந்து டிரைவர் லாரியை இயக்க முயன்றார். ஆனால் அந்த பள்ளதில் சக்கரம் பதிய தொடங்கியது. லாரி ஒருபுறம் சரியவே டிரைவர் லாரியை நிறுத்தினார்.

    லாரி நடுரோட்டில் சிக்கியதால் சாலையின் இருபுறமும் இருந்து கார் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. காலை நேரம் என்பதால் பள்ளி மாணவிகளை ஏற்றி வந்த வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவித்தது. இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் மட்டுமே அந்த வழியாக வந்தனர். மற்றவர்கள் வாகனங்களை திருப்பி சென்றனர்.

    தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய லாரியை கிரைன் மூலமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 1 மணி நேரத்திற்கு பிறகு அந்த லாரி கிரைன் மூலமாக மீட்கப்பட்டது. ஏற்கனவே அந்த சாலையில் கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப் பட்டுள்ள நிலையில் டாரஸ் லாரி டிரைவர் அந்த வழியாக வந்துள்ளார். இதையடுத்து போக்குவரத்து போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    • சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு
    • லேசான அளவு தண்ணீர் வெளியேறியதால் பெரிதாக இதை யாரும் கண்டு கொள்ளவில்லை.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரை சாலை பகுதிகளில் குழித்துறையில் இருந்து கன்னியாகுமரிக்கு தண்ணீர் கொண்டு செல்வ தற்காக ராட்சத பைப் லைன்கள் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்வதால் அவ்வப்போது பைப் லைன் கள் உடைந்து தண்ணீர் வீணாவதும் வாடிக்கையாக உள்ளது. எனவே சாலை களின் நடுவில் உள்ள பைப் லைனை மாற்றிவிட்டு இரும்பு பைப்லைன் அமைக்க வேண்டும் என்று அந்த பகுதியினர் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்த நிலை யில் புத்தளம் சந்திப்பு பகுதி யில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட்டு குடிநீர் திட்ட தற்கான பைப் லைன் உடைந்து தண்ணீர் வெளி யேறியது. லேசான அளவு தண்ணீர் வெளியேறியதால் பெரிதாக இதை யாரும் கண்டு கொள்ளவில்லை.

    அந்த வழியாகத்தான் கனரக வாகனங்களும் சென்று வந்தன. இந்த நிலையில் இன்று காலை திடீரென பைப் லைனில் மிகப்பெரிய உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் புத்தளம் சந்திப்பு பகுதியில் சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. கூட்டுக்குடிநீர் திட்ட பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அந்த பைப் லைனில் தண்ணீர் விநியோகத்தை நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டனர்.

    சம்பந்தப்பட்ட ஊழி யரை தொடர்பு கொண்டு அந்த பைப் லைனில் தண்ணீரை நிறுத்த நட வடிக்கை எடுக்கப்பட்டது. பைப்லைனில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் ராட்சத பள்ளமும் ஏற்பட்டது. சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டதையடுத்து அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள் ளது.

    இதனால் அந்த பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப் பட்டு உள்ளது. கூட்டுக் குடிநீர் பைப்லை னில் மிகப்பெரிய உடைப்பு ஏற் பட்டதையடுத்து தண்ணீர் விநியோகம் பாதிக்கப் பட்டுள்ளது.

    குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதை சீரமைப்ப தற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக ராட்சத பைப்பு களை வெளியிடங்களில் இருந்து கொண்டு செல்ல வரவும் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.

    ஜே.சி.பி. எந்திரம் மூலமாக உடைப்பு ஏற்பட்ட பகுதியை தோண்டி சேத மடைந்த பைப் லைனை மாற்றிவிட்டு புதிதாக பைப்லைன்அமைக்க குடி நீர் வடிகால் வாரிய அதிகா ரிகள் நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர். இன்று மாலை அல்லது நாளைக்குள் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதி காரிகள் தெரி வித்தனர். கூட்டுக்குடிநீர் திட்ட பைப் லைனை சரி செய்த பிறகு அந்த பகுதியில் சாலை சீரமைப்பு பணியை மேற் கொள்ளவும் நெடுஞ் சாலை துறை அதிகாரிகள் நட வடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • பைப்புகள் சுமார் ஒரு மாதத்துக்கும் மேல் அங்கு வீணாக கிடக்கிறது.
    • பஞ்சாயத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை

    அரவேணு,

    கோத்தகிரி தாலுகா, நடுஹட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெட்டெட்டி கிராமத்தில் அம்பேத்கர் நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் பழைய பைப் லைன்களை மாற்றுவதற்காக, புதிய பைப் குழாய்கள் கொண்டுவரப்பட்டது.

    ஆனால் அங்கு பணிகள் இன்னமும் தொடங்கவில்லை. எனவே அந்த பைப்புகள் சுமார் ஒரு மாதத்துக்கும் மேல் அங்கு வீணாக கிடக்கிறது. இதற்கிடையே பழைய பைப் லைன்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாகி வருகிறது.

    இதுகுறித்து பஞ்சாயத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை, எனவே அங்கு உள்ள வீடுகளுக்கு புதிய தண்ணீர் குழாய் வசதி ஏற்படுத்தி தர முடியவில்லை. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு, எங்கள் பகுதியில் புதிய பைப் லைன் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தடுப்பு கற்களை அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
    • சாலையை விரிவாக்கம் செய்து தொடர்ந்து இரு வழி பாதையாக மாற்ற நடவடிக்கை

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் புத்தன் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து சாலைகள் தோண்டப்பட்டு பைப் லைன் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பீச்ரோடு முதல் செட்டிகுளம் வரை உள்ள சாலையில் பைப்லைன் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டது. கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த வாகனங்கள், பஸ் அனைத்தும் சவேரியார் ஆலயம் வழியாக மாற்றி விடப்பட்டது. கோட்டார்-சவேரியார் ஆலய சாலை இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டதால் காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது.

    போக்குவரத்து போலீசார் அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அந்த சாலையை விரிவாக்கம் செய்து தொடர்ந்து இரு வழி பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர்.

    இந்த நிலையில் தற்பொழுது பீச் ரோடு செட்டிகுளம் சாலையில் பணிகள் முடிவடைந்து மணல்கள் நிரப்பப்பட்டு உள்ளது. இதனால் இருச்சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கடந்த 2 நாட்களாக இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பஸ் போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது.

    ராஜாக்கமங்கலம், ஈத்தாமொழி பகுதி வழியாக வரும் பஸ்கள் அனைத்தும் தற்பொழுது இந்த சாலை வழியாக இயக்கப்பட்டு வருகிறது. மேலும் கோட்டார் வழியாக வரும் சில பஸ்களும் பீச்ரோடு வழியாக திருப்பி விடப்பட்டது.

    இதுகுறித்து மேயர் மகேஷ் கூறுகையில், செட்டிகுளம்-பீச்ரோடு பகுதியில் பணிகள் முடிவடைந்து, பரீட்சார்த்த முறையில் தற்போது பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களும் சென்று வருகின்றன. 2 நாட்களுக்கு பிறகு அந்த சாலையை சீரமைத்து தார் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ஏற்கனவே நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க மாநகராட்சி பல்வேறு சாலைகளை இருவழிப்பாதையாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது. தேவைப்படும் இடங்களில் ரவுண்டானா அமைக்கவும் ஆலோசித்து வருகிறோம் என்றார்.

    பீச் ரோட்டில் இருந்து செட்டிகுளத்திற்கு திரும்பும் சாலையில் சாலையின் நடுவே தடுப்பு கற்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் சாலை குண்டும், குழியுமாக மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதுடன் சாலை நடுவே உள்ள தடுப்பு கற்களை மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • முதுகுளத்தூர் 7-வது வார்டில் காவிரி குடிநீர் சப்ளை இல்லை என்று கவுன்சிலரிடம் பொதுமக்கள் முறையீடு செய்தனர்.
    • பைப் லைன் பதிக்கப்பட்டு காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் கவுன்சிலர் உறுதி அளித்தார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி 7-வது வார்டில் சங்கராண்டி ஊரணிக்கு மழைநீர் செல்லும் சிமெண்டு குழாயில் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து பொதுமக்கள் அந்த வார்டு கவுன்சிலர் மோகன்தாசிடம் முறையிட்டனர். மேலும் 7-வது வார்டு ஆஞ்சநேயர் கோவில்தெருவில் சாலை பழுதடைந்து கிடப்பது குறித்தும், பொதுமக்கள் கவுன்சிலரிடம் முறையிட்ட னர்.

    இதையடுத்து கவுன்சிலர் மோகன்தாஸ், பேரூராட்சி தலைவர் ஷாஜகான், செயல் அலுவலர் மாலதி ஆகியோர் உடனடியாக சங்கராண்டி ஊரணிக்கு மழைநீர் செல்ல 3 சிமெண்டு குழாய்களை ரோட்டின் குறுக்கே பதித்து நடைபாதையை சீரமைத்தனர்.

    ஆஞ்சநேயர் தெருவில் கிராவல் அடித்து பொது மக்கள் நடந்து செல்ல உதவி செய்தனர். இதற்காக பொதுமக்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.

    மேலும் முதுகுளத்தூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 7-வது வார்டுக்கு மட்டும் காவிரி குடிநீர் சப்ளை இல்லை. மற்ற வார்டுகளில் காவிரி குடிநீர் சப்ளை செய்யப்பட்டுவரும் நிலையில் இந்த வார்டுக்கும் காவிரி குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கவுன்சிலர் மோகன்தாசிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    உடனடியாக பைப் லைன் பதிக்கப்பட்டு காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் கவுன்சிலர் உறுதி அளித்தார்.

    ×