search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதுகுளத்தூர் 7-வது வார்டில் காவிரி குடிநீர் சப்ளை இல்லை
    X

    முதுகுளத்தூர் 7-வது வார்டில் காவிரி குடிநீர் சப்ளை இல்லை

    • முதுகுளத்தூர் 7-வது வார்டில் காவிரி குடிநீர் சப்ளை இல்லை என்று கவுன்சிலரிடம் பொதுமக்கள் முறையீடு செய்தனர்.
    • பைப் லைன் பதிக்கப்பட்டு காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் கவுன்சிலர் உறுதி அளித்தார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி 7-வது வார்டில் சங்கராண்டி ஊரணிக்கு மழைநீர் செல்லும் சிமெண்டு குழாயில் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து பொதுமக்கள் அந்த வார்டு கவுன்சிலர் மோகன்தாசிடம் முறையிட்டனர். மேலும் 7-வது வார்டு ஆஞ்சநேயர் கோவில்தெருவில் சாலை பழுதடைந்து கிடப்பது குறித்தும், பொதுமக்கள் கவுன்சிலரிடம் முறையிட்ட னர்.

    இதையடுத்து கவுன்சிலர் மோகன்தாஸ், பேரூராட்சி தலைவர் ஷாஜகான், செயல் அலுவலர் மாலதி ஆகியோர் உடனடியாக சங்கராண்டி ஊரணிக்கு மழைநீர் செல்ல 3 சிமெண்டு குழாய்களை ரோட்டின் குறுக்கே பதித்து நடைபாதையை சீரமைத்தனர்.

    ஆஞ்சநேயர் தெருவில் கிராவல் அடித்து பொது மக்கள் நடந்து செல்ல உதவி செய்தனர். இதற்காக பொதுமக்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.

    மேலும் முதுகுளத்தூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 7-வது வார்டுக்கு மட்டும் காவிரி குடிநீர் சப்ளை இல்லை. மற்ற வார்டுகளில் காவிரி குடிநீர் சப்ளை செய்யப்பட்டுவரும் நிலையில் இந்த வார்டுக்கும் காவிரி குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கவுன்சிலர் மோகன்தாசிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    உடனடியாக பைப் லைன் பதிக்கப்பட்டு காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் கவுன்சிலர் உறுதி அளித்தார்.

    Next Story
    ×