search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி குடிநீர்"

    • அனைத்து பகுதிகளுக்கும் காவிரி குடிநீர் வழங்கப்படும்
    • 103 ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கடலாடி மற்றும் முது குளத்தூர் ஊராட்சிகளுக்கு உட்பட்ட 103 ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    இதில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பேசியதாவது:-

    பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான தண்ணீர் தேவையை நிறை வேற்றுவது ஒவ்வொருவரின் கடமையாகும். அந்த வகையில் ஒவ்வொரு ஊராட்சியிலும் மக்கள் தொகைக்கு ஏற்ப போதிய அளவு தண்ணீர் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து வழங்க இயலாத நிலை உள்ளது. அதை மாற்றி அனைத்து பகுதி களுக்கும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து தண்ணீர் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த கூட்டத்தின் நோக்கம் ஊராட்சி மன்றத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களுடன் கலந்து ஆலோ சித்து காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் அனைத்து பகுதி மக்களுக்கும் முழுமையான அளவு தண்ணீர் கிடைக்க தேவையான திட்டங்களை வடிவமைக்க வேண்டும். தற்பொழுது ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டுள்ளது.

    இதில் 20-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதற்குண்டான பதில்களை பூர்த்தி செய்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் வழங்க வேண்டும்.

    குறிப்பாக பொது மக்களோடு ஆலோசித்து படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த படிவம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து சென்னையில் உள்ள நீர்வள ஆதார மையத்திற்கு சென்று அங்கிருந்து விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் கொண்ட குழுவினர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து கள ஆய்வு மேற்கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் சண்முகநாதன், கடலாடி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர்.முத்து லட்சுமி, முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சண்முகபிரியா, சென்னை நீர்வள ஆதாரத்துறை பொறியாளர் சரவணன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பரமசிவம், கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, ஆனந்த், முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜானகி, பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதி மக்களுக்கும் காவிரி குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
    • இந்த தகவலை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசின் 2 ஆண்டு சாத னைக்கான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

    இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்று 981 பயனாளி களுக்குரூ.4 கோடியே 17 லட்சத்து 54 ஆயிரத்து 259 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் முன்னேறிய மாவட்டங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இதற்கு அடித்த ளமாக இந்தப் பகுதிக்கு முதன்முதலாக காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் அமைத்து பொது மக்க ளுக்கான குடிநீர் தேவையை நிறைவேற்றியவர் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி.

    அதனைத் தொடர்ந்து தற்பொழுது ராமநாதபுரம் மாவட்டமக்களின் குடிநீர் தேவையை முழுமையாக நிறைவேற்றித் தருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் முன்வைத்த கோரிக்கை களை ஏற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டும் கரூர் மாவட்டம், நஞ்சை புகளூர் காவிரி ஆற்றுப் பகுதியில் இருந்து ரூ.2 ஆயிரத்து 400 கோடியில் தனித்திட்டமாக பைப் லைன் பொருத்தப்பட்டு மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதி மக்களுக்கும் குடி தண்ணீர் வழங்கும் வகையில் பணிகள் தொடங்க உள்ளன.

    மேலும் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் 110 சாலைப்பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி பொதுமக்களுக்கு தேவையான திட்டங்கள் அவ்வப்போது அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

    உங்களின் தேவைகளை எங்களிடம் தெரிவியுங்கள். நாங்கள் நிறைவேற்றி தர தயாராக உள்ளோம். முதல்-அமைச்சர் தெரி விப்பது போல் மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். மக்களுக்காக நம் முதல்வர் செயல்பட்டு வருகிறார். அனைவரும் ஒன்று கூடி முதல்-அமைச்சருக்கு உறுதுணையாக இருப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு, மண்டபம் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், திருப்புல்லாணி யூனியன் தலைவர் புல்லாணி, மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் வேலுச்சாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர், வருவாய் கோட்டாட்சியர் கோபு, தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்பு திட்டம்) மாரிசெல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • காமாட்சி நகர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
    • கடந்த 2 மாதங்களாக காவிரி குடிநீர் வழங்கப்படவில்லை என்பதால் அந்த பகுதி மக்கள் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அருகே ஓலப்பாளையம் ஊராட்சி காமாட்சி நகர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்திற்கு ஊராட்சி மூலம் காவிரி குடிநீர் மற்றும் ஆழ்துளை கிணற்றுநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக காவிரி குடிநீர் வழங்கப்படவில்லை என்பதால் அந்த பகுதி மக்கள் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 2 மாதங்களாக காவிரி குடிநீர் சரிவர விநியோகிக்கப்படவில்லை. ஆழ்துளை கிணறு தண்ணீரும் சரியாக வருவதில்லை. அதனால் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.

    இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. எனவே குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • முதுகுளத்தூர் 7-வது வார்டில் காவிரி குடிநீர் சப்ளை இல்லை என்று கவுன்சிலரிடம் பொதுமக்கள் முறையீடு செய்தனர்.
    • பைப் லைன் பதிக்கப்பட்டு காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் கவுன்சிலர் உறுதி அளித்தார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி 7-வது வார்டில் சங்கராண்டி ஊரணிக்கு மழைநீர் செல்லும் சிமெண்டு குழாயில் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து பொதுமக்கள் அந்த வார்டு கவுன்சிலர் மோகன்தாசிடம் முறையிட்டனர். மேலும் 7-வது வார்டு ஆஞ்சநேயர் கோவில்தெருவில் சாலை பழுதடைந்து கிடப்பது குறித்தும், பொதுமக்கள் கவுன்சிலரிடம் முறையிட்ட னர்.

    இதையடுத்து கவுன்சிலர் மோகன்தாஸ், பேரூராட்சி தலைவர் ஷாஜகான், செயல் அலுவலர் மாலதி ஆகியோர் உடனடியாக சங்கராண்டி ஊரணிக்கு மழைநீர் செல்ல 3 சிமெண்டு குழாய்களை ரோட்டின் குறுக்கே பதித்து நடைபாதையை சீரமைத்தனர்.

    ஆஞ்சநேயர் தெருவில் கிராவல் அடித்து பொது மக்கள் நடந்து செல்ல உதவி செய்தனர். இதற்காக பொதுமக்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.

    மேலும் முதுகுளத்தூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 7-வது வார்டுக்கு மட்டும் காவிரி குடிநீர் சப்ளை இல்லை. மற்ற வார்டுகளில் காவிரி குடிநீர் சப்ளை செய்யப்பட்டுவரும் நிலையில் இந்த வார்டுக்கும் காவிரி குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கவுன்சிலர் மோகன்தாசிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    உடனடியாக பைப் லைன் பதிக்கப்பட்டு காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் கவுன்சிலர் உறுதி அளித்தார்.

    ×