என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் புதிய பைப் லைன் அமைக்கும் பணியை வேகப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்
    X

    கோத்தகிரியில் புதிய பைப் லைன் அமைக்கும் பணியை வேகப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்

    • பைப்புகள் சுமார் ஒரு மாதத்துக்கும் மேல் அங்கு வீணாக கிடக்கிறது.
    • பஞ்சாயத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை

    அரவேணு,

    கோத்தகிரி தாலுகா, நடுஹட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெட்டெட்டி கிராமத்தில் அம்பேத்கர் நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் பழைய பைப் லைன்களை மாற்றுவதற்காக, புதிய பைப் குழாய்கள் கொண்டுவரப்பட்டது.

    ஆனால் அங்கு பணிகள் இன்னமும் தொடங்கவில்லை. எனவே அந்த பைப்புகள் சுமார் ஒரு மாதத்துக்கும் மேல் அங்கு வீணாக கிடக்கிறது. இதற்கிடையே பழைய பைப் லைன்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாகி வருகிறது.

    இதுகுறித்து பஞ்சாயத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை, எனவே அங்கு உள்ள வீடுகளுக்கு புதிய தண்ணீர் குழாய் வசதி ஏற்படுத்தி தர முடியவில்லை. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு, எங்கள் பகுதியில் புதிய பைப் லைன் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×