search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேஸ்புக் லைவ்"

    • சிவசேனா உத்தவ் தாக்கரே கட்சி நிர்வாகி அபிஷேக் கோசல்கர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார்.
    • இந்தச் சம்பவம் மும்பையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    மும்பை:

    மும்பை தகிசர் பகுதியில் பேஸ்புக் லைவ் ஷோவில் பேசிக் கொண்டிருந்த சிவசேனா உத்தவ் தாக்கரே தரப்பைச் சேர்ந்த நிர்வாகி அபிஷேக் கோசல்கர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், அபிஷேக் கோசல்கர் படுகொலையைக் கண்டித்து மகாராஷ்டிர துணை முதல் மந்திரி அஜித் பவார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியபதாவது:

    மகாராஷ்டிராவில் இதுபோன்ற படுகொலை சம்பவம் நடந்திருக்கக் கூடாது. இருவருக்கும் இடையே நட்புறவு இருந்தது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.

    இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும். அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அவதூறுகளைப் பரப்பி வருகின்றன.

    இந்த கொலைக்கான பின்னணி குறித்து ஆராயப்படும். முதல் மந்திரியுடன் இதுபற்றி கலந்து ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.

    • சுட்டுக்கொலை செய்யப்பட்டவர் முன்னாள் கவுன்சிலர் ஆவார்.
    • இருவருக்கும் இடையில் முன்விரோதம் இருந்த நிலையில், சமீபத்தில் சமாதானம் ஏற்பட்டதாக தகவல்.

    மும்பையில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. வினோத் கோசல்கர். இவரது மகன் அபிஷேக். இவர் முன்னாள் கவுன்சிலர் ஆவார். இந்தநிலையில் நேற்று அபிஷேக் மும்பை தகிசர் பகுதியில் உள்ள எம்.எச்.பி. காலனி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்தில் 'பேஸ்புக்' நேரலை விவாதத்தில் சமூக ஆர்வலரான மோரிஸ் என்பவருடன் கலந்துகொண்டார்.

    நேரலை முடிந்து அவர் புறப்பட்ட சமயத்தில் மோரிஸ் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அபிசேக்கை சரமாரியாக சுட்டார். இதில் வயிறு, கழுத்து உள்பட உடலில் 3 இடங்களில் குண்டு பாய்ந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

    இதைத்தொடர்ந்து மோரிசும் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு 2 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    முன்னாள் கவுன்சிலர் அபிஷேக்கிற்கும், மோரிசுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது. சமீபத்தில் இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் மோரிஸ் தனது அலுவலகத்தில் நடைபெற்ற புடவை வழங்கும் நிகழ்ச்சிக்காக அபிஷேக்கை அழைத்து திட்டமிட்டு சுட்டுக்கொன்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சுமார் 35 நிமிடங்கள் அவர்கள் 'பேஸ்புக்' நேரலை விவாதத்தில் கலந்துகொண்டு பேசி உள்ளனர். இந்த நேரலையின்போதே இந்த கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே உத்தவ் தாக்கரே கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத், மகாராஷ்டிராவில் குண்டர் ஆட்சி. கொலையாளியை நான்கு நாட்களுக்கு முன் முதல்வர் சந்தித்தார். அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    ×