அபிஷேக் கோசல்கர் படுகொலை: துணை முதல் மந்திரி அஜித் பவார் கண்டனம்

சிவசேனா உத்தவ் தாக்கரே கட்சி நிர்வாகி அபிஷேக் கோசல்கர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார்.இந்தச் சம்பவம் மும்பையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அபிஷேக் கோசல்கர் படுகொலை: துணை முதல் மந்திரி அஜித் பவார் கண்டனம்
Published on

மும்பை:

மும்பை தகிசர் பகுதியில் பேஸ்புக் லைவ் ஷோவில் பேசிக் கொண்டிருந்த சிவசேனா உத்தவ் தாக்கரே தரப்பைச் சேர்ந்த நிர்வாகி அபிஷேக் கோசல்கர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அபிஷேக் கோசல்கர் படுகொலையைக் கண்டித்து மகாராஷ்டிர துணை முதல் மந்திரி அஜித் பவார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியபதாவது:

மகாராஷ்டிராவில் இதுபோன்ற படுகொலை சம்பவம் நடந்திருக்கக் கூடாது. இருவருக்கும் இடையே நட்புறவு இருந்தது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும். அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அவதூறுகளைப் பரப்பி வருகின்றன.

இந்த கொலைக்கான பின்னணி குறித்து ஆராயப்படும். முதல் மந்திரியுடன் இதுபற்றி கலந்து ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com